சத்துக்கள் நிறைந்த பசலைக்கீரை!
மிகச்சிறந்த கீரைகளில் பசலைக் கீரையும் ஒன்று. கொடிப் பசலை, கொத்துப் பசலை, தரைப் பசலை என இக்கீரை மூன்று வகைப்படும். கொடிப் பசலை சிறிய வெற்றில...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_3752.html
மிகச்சிறந்த கீரைகளில் பசலைக் கீரையும் ஒன்று. கொடிப் பசலை, கொத்துப் பசலை, தரைப் பசலை என இக்கீரை மூன்று வகைப்படும்.
கொடிப் பசலை சிறிய வெற்றிலை அளவில் செந்நிறத்துடன் இருக்கும். இது கொடி போன்று நீண்டு 100 அடிவரை வளரும்.
கொத்துப் பசலை செடியாக வளர்ந்து இலை சற்று பெரிதாக பசுமை நிறமுடையதாக இருக்கும். மூன்றாவது வகையான தரைப் பசலையின் இலைகள் மிகவும் சிறுத்து இளஞ்சிவப்பாகவும் பச்சையாகவும் காணப்படும். இது தரையில் படரும்.
மூன்று வித பசலைக் கீரைகளிலும் வைட்டமின் சத்துக்களும், தாது உப்புக்களும் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கின்றன.
பொதுவாக அத்தனை பசலைக் கீரைகளும் ரத்த விருத் தியை உண்டாக்கி உடலுக்கு பலம் தரும்.
கொத்துப் பசலை சிறுநீர்க் கடுப்பு, நீரடைப்பு, வெள்ளை ஒழுக்கு, ருசியின்மை, வாந்தி ஆகியவற்றுக்கு நல்ல மருந்து. கெட்டியான மலத்தையும் இளக்கும்.
கொடிப் பசலைக் கீரை தாகத்தையும் சூட்டையும் தணிக்கும். இதுவும் மலத்தை இளக்கக் கூடியது. மலச்சிக்கலால் அவதிப்படும் கர்ப்பிணிப் பெண்கள் இக் கீரையைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் வராமல் தடுக்கலாம். இந்தக் கீரை சூட்டைத் தணித்து உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும். கடுமையான வெயிலின் போது கொடிப் பசலையை அரைத்து தலையில் வைத்துக் கட்டினால் சூடு தணியும்.
இதை வதக்கி வீக்கம், கட்டி ஆகியவற்றின் மீது வைத்துக் கட்டினால் சீழ் வெளியேறிப் புண் விரைவில் ஆறும்.
கொடிப் பசலைக் கீரையைத் துவரம் பருப்பு, பாசிப் பருப்பு போன்றவற்றுடன் சமைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம், நீர்த்தாரை தொடர்பான வெட்டை நோய்கள், தோல் நோய்கள்,மேகம் சீதபேதி ஆகியவை குணமடையும். குழந்தைகளுக்குப் பசலைக் கீரையின் சாற்றைக் கொடுத்து வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும். இக் கீரை சளியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. ஆகவே இஞ்சி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை முதலியவற்றை சேர்த்து பசலைக் கீரையை உட்கொள்வது நல்லது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவம் அமையவும், கால்களில் ஏற்படும் நீர் வீக்கம் மாறுவதற்கும் இந்தக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
Post a Comment