சமையல் குறிப்புகள்! ‘நேந்திர சக்ரோட் பரிலாடு’
தேவையானவை: நேந்திரம் வாழைக்காய் & 4, வெல்லம் & ஒன்றரை கப், ஏலக்காய் & 4, சுக்குப்பொடி & கால் டீஸ்பூன், முந்திரிப்பருப்பு அல...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_274.html
தேவையானவை: நேந்திரம் வாழைக்காய் & 4, வெல்லம் & ஒன்றரை கப், ஏலக்காய் & 4, சுக்குப்பொடி & கால் டீஸ்பூன், முந்திரிப்பருப்பு அல்லது நிலக்கடலை (சிறிய துண்டுகளாக்கியது) & ஒரு டேபிள்ஸ்பூன், பச்சைக் கற்பூரம் & சிறிது, எண்ணெய் & பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: நேந்திரம் வாழைக்காய்களின் தோலை உரித்தெடுக்கவும். காய்களை நீளவாக்கில் நான்காக நறுக்கி, சிறு சிறு துண்டுகளாக்க வும். கடாயில் சிறிது எண்ணெயைக் காயவைத்து, இந்தத் துண்டுகளை பொன்னிறமாக வறுத்தெடுத்து வைத்துக் கொள்ளவும். ஏலக்காயைப் பொடித்துக்கொள்ளவும். வெல்லத்தை அடி கனமான வாணலியில் போட்டு, கால் கப் நீர் விட்டு, கரைந்ததும் வடிகட்டி பாகு காய்ச்சவும். பாகு கொதித்துக் கொண்டிருக்கும் போதே ஏலக்காய்ப்பொடி, சுக்குப்பொடி, பொடித்த முந்திரி (அ) நிலக் கடலை, பச்சைக் கற்பூரம் எல்லாம் போட வும். பிறகு பாகை கெட்டிப் பாகு பதம் (தண்ணீரில் பாகை விட்டால் கரையாமல் நிற்கும்) வரும்வரை காய்ச்சவும். கெட்டிப் பாகு ஆனதும் அடுப்பை அணைத்து விட்டு, வறுத்த நேந்திர வறுவலை கொட்டி நன்கு கலந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். அருமையான ருசியில் ‘நேந்திர சக்ரோட் பரிலாடு’ தயார். மிகவும் சத்தான இனிப்பு இது.
Post a Comment