உள்ளம் கேட்குமே....அரிசி- பருப்பு உப்புமா
அரிசி - பருப்பு உப்புமா தேவையானவை: பச்சரிசி ஒன்றரை கப், புழுங்கலரிசி, துவரம்பருப்பு தலா அரை கப், காய்ந்த மிளகாய் 10, பெருங்காயத்தூள் 2 ட...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_3674.html
அரிசி- பருப்பு உப்புமா
தேவையானவை: பச்சரிசி ஒன்றரை கப், புழுங்கலரிசி, துவரம்பருப்பு தலா அரை கப், காய்ந்த மிளகாய் 10, பெருங்காயத்தூள் 2 டீஸ்பூன், புளி சிறிய நெல்லிக்காய் அளவு, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசியையும் புழுங்கலரிசியையும் துவரம்பருப்புடன் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய தும் அவற்றுடன் காய்ந்த மிள காய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து மிக்ஸியில் அடைமாவு பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும். புளியை கெட்டியாகக் கரைத்து, அரைத்து வைத்திருக்கும் மாவில் ஊற்றி தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, கரைத்து வைத்திருக்கும் மாவைக் கொட்டி, கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். மாவு நன்றாக வெந்து, உதிர் உதிராக ஆனதும் ஒரு தட்டைப் போட்டு மூடி, ஐந்து நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்.
இப்போது, தட்டைத் திறந்தால் கடாயின் அடியில் பொன்னிற அடை யாகவும், மேலே உப்புமா போன்று பொலபொலவென்றும் இருக்கும். இதற்கு சோழி உப்புமா என்ற பெயரும் உண்டு. இந்த உப்புமாவை 'சைட் டிஷ்' இல்லாமலேயே சாப்பிடலாம்.
--------------------------------------------------------------------------------
Post a Comment