நபிகள் நாயத்தின் பொன் மொழிகள்! நல்லது நடக்கட்டும்

ஆட்டுக்கால் குழம்பை ஏற்ற நபிகள் நாயகம் ""வலீமா விருந்திலேயே கெட்டவிருந்து செல்வந்தர்கள் அழைக்கப்பட்டு, ஏழைகள் விட்டு விடப்படும் வ...

ஆட்டுக்கால் குழம்பை ஏற்ற நபிகள் நாயகம் ""வலீமா விருந்திலேயே கெட்டவிருந்து செல்வந்தர்கள் அழைக்கப்பட்டு, ஏழைகள் விட்டு விடப்படும் விருந்தாகும்,'' என்று நபிகள் நாயகம் கூறினார். ஒரு ஏழையின் வீட்டில் நிக்காஹ் நடப்பதாக வைத்துக் கொள்வோம். அவர், தன் பக்கத்து வீட்டிலுள்ள செல்வந்தர் ஒருவரையும் தன் வீட்டு திருமணத்தில் பங்கேற்று, விருந்துண்டு செல்லுமாறு அழைக்கிறார். அந்த செல்வந்தர், ""இது ஏழை வீட்டு கல்யாணம் தானே, அங்கே நாம் ஏன் செல்ல வேண்டும். அவர் கொடுக்கும் சாதாரண விருந்தில் என்ன இருந்து விடப் போகிறது. மேலும், அங்கு சென்றால், தனக்கு அவமானமல்லவா ஏற்படும் என நினைக்க கூடாது. நபிகள் நாயகத்துக்கு ஒருமுறை ஏழை ஒருவர், ஆட்டுக்கால் குழம்பை கொடுத்தார். அதை அன்போடு ஏற்றுக் கொண்டார் நாயகம். இதுபோல் செல்வந்தர்கள் வீட்டு விருந்துக்கும், ஏழைகள் அவசியம் அழைக்கப்பட வேண்டும். நல்லது நடக்கட்டும் "நல்ல விஷயங்கள் என் வாழ்வில் நடக்கட்டும்' என ஒவ் வொரு மனிதனும் நினைக்கிறான். அது தவறல்ல. ஆனால், இதே நினைப்பு பிறரைப் பொறுத்த வரை வருகிறதா என்றால் பலரிடமும் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஒரு திருமண விழாவில் கூட மணமக்கள் கருத்தொருமித்து பல்லாண்டு வாழ வேண்டும் என யாரும் மனதார வாழ்த்துவதில்லை. ஏதோ ஒரு கடமையாக அதை செய்து விட்டு வருகிறார்கள். யாராவது , ""எனக்கு நோய் வரட்டும், நான் கடன் சுமையில் உழல தயாராகஉள்ளேன்,'' என் றெல்லாம் சொல்வார்களா? ""பணம் குவியட்டும், நோயற்ற வாழ்வு கிடைக்கட்டும், என் குழந் தைகள் நன்றாக படிக்கட்டும்,''என்று தானே நினைப்பார்கள். இதே நிலை பிறருக்கும் ஏற்பட வேண்டும் என நினைக்க வேண்டும். ""தான் விரும்பியதை தன் சகோதரனுக்கும் விரும்புவதை அல்லது தான் விரும்பியதை தன் அண்டை வீட்டுக்காரனுக்கு விரும்பும் வரை உங்களில் ஒருவன் ஈமான் கொண்டவனாக ஆக முடியாது,'' என்று நபிகள் நாயகம் சொல்கிறார். நல்லதையே நினைப்போம்... நமக்கு மட்டுமல்ல, பிறருக்கும் சேர்த்து. நோயாளிக்கு ஆறுதல் நோயாளிக்கு ஆறுதல் சொல்வதன் மூலம், நோயாளி மட்டுமின்றி, நலம் விசாரிப்பவரும் பலன் பெறுவார் என்கிறது இஸ்லாம். நபிகள் நாயகத்திடம் இது குறித்து தோழர் ஒருவர் கேட்ட போது, ""யார் ஒருவர் நோயாளியை நலம் விசாரிக்கிறாரோ, அவர் சொர்க்கத்து கிர்பாவில் இருந்து நீங்காமல் இருக்கிறார்,''என்றார். "கிர்பா' என்றால் "சொர்க்கத்தின் பழம்' எனப் பொருள். இது மட்டுமல்ல. ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை நலம் விசாரித்தால், காலை முதல் மாலை வரை 70 ஆயிரம் மலக்குகள் அவர் மீது எழுபதாயிரம் முறை "ஸலவாத்' கூறுவார்கள். இரவில் நலம் விசாரித்தால், மறுநாள் காலை வரை ஸலாவத் சொல்வார்கள். ""பசித்தவருக்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள், கைதியை விடுதலை செய்யுங்கள்,'' என்கிறார் நாயகம். அது மட்டுமல்ல. மறுமை நாளில் அல்லாஹ் நம்மிடம், ""ஆதமின் மகனே! நான் நோயுற்ற போது என்னை நீ விசாரிக்கவில்லையே என கேட்பான். அதற்கு நாம், ""இறைவா! நீயோ அகிலத்தின் அதிபதியாக உள்ளாய். அப்படியிருக்க, நான் உன்னை எப்படி நலம் விசாரிப்பேன்,'' என்போம். அதற்கு அல்லாஹ், ""என்னுடைய அடியான் (பக்தி செலுத்துபவர்) நோயுற்றான் என்பதை நீ அறியவில்லையா? நீ அவனை நலம்விசாரிக்கவில்லை. அவனை நீ நலம் விசாரித்திருந்தால் என்னை நீ பெற்றிருப்பாய்,'' என்று கூறுவான். இதன் பொருள் புரிகிறதா? இப்பூமியில் வாழும் ஒவ்வொரு உயிருக்குள்ளும் இறைவன் வாழ்கிறார் என்பது தான். இனியேனும், நோயாளிகளுக்கு ஆறுதல் கிடைக்கும் வகையில், மனதார ஆறுதல் சொல்லுங்கள். இறைவனின் கருணையைப் பெறுங்கள்.

Related

அமுத மொழிகள் 5820455265082239460

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item