சமையல் குறிப்புகள்! பால் பொங்கல்
தேவையான பொருட்கள் சீரக சம்பா அரிசி - 1 கப் பயித்தம் பருப்பு - 1/4 கப் கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் வெல்லம் - 21/2 கப் (பொடியாக சீவியது)...

https://pettagum.blogspot.com/2011/02/blog-post_381.html
தேவையான பொருட்கள்
சீரக சம்பா அரிசி - 1 கப்
பயித்தம் பருப்பு - 1/4 கப்
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - 21/2 கப் (பொடியாக சீவியது)
நெய் - 8 டேபிள் ஸ்பூன்
பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
பால் - 3 கப்
தண்ணீர் - 2 கப்
முந்திரி, திராட்சை - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
* அடி கனமான வாணலியை மெல்லிய தீயில் சூடு செய்து சீரக சம்பா அரிசி, பயித்தம்பருப்பு, கடலைப்பருப்பு மூன்றையும் சேர்த்து வாசனை வர சற்று வறுத்து களைந்து வைத்துக் கொள்ளவும்.
* பொங்கல் பானையில் 3 கப் பாலையும், 1 கப் தண்ணீரையும் சேர்த்துக் கலந்து ஊற்றி கொதிக்கவிடவும். நன்கு பொங்கி வருகையில் வறுத்து களைந்த அரிசி, பருப்பு ஆகியவற்றைப் போட்டு குழைவாக வேக விடவும்.
* பொடியாக நறுக்கிய வெல்லத்தை 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு தூசு நீங்க வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
* வடிகட்டிய வெல்ல நீரை, வெந்த பொங்கலுடன் சேர்த்து நன்கு கிளறவும்.
* ஒரு வாணலியில் நெய்யை சூடாக்கி, முந்திரிப் பருப்பு, திராட்சை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
* பிறகு வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் இவற்றை நெய்யுடன் சேர்த்து பொங்கலில் சேர்க்கவும்.
* இப்போது பச்சைக் கற்பூரத்தை கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் நடுவே வைத்து நெறித்து பொங்கலில் சேர்த்து கலந்து பரிமாறவும்.
குறிப்பு:-
சுவை பிடித்தவர்கள் ஜாதிக்காய் பொடியையும், நெய்யில் வறுத்துச் சேர்க்கலாம்:-

Post a Comment