சமையல் குறிப்புகள்! தில்குஷ் பிரியாணி
தேவைப்படும் பொருட்கம்: * பிரியாணி அரிசி - 2 கப் * ஆட்டிறைச்சி - 500 கிராம் * நெய் - முக்கால் கப் * நறுக்கிய பெரிய வெங்காயம் - 3 கப் * கிராம்...

https://pettagum.blogspot.com/2011/02/blog-post_7125.html
தேவைப்படும் பொருட்கம்:
* பிரியாணி அரிசி - 2 கப்
* ஆட்டிறைச்சி - 500 கிராம்
* நெய் - முக்கால் கப்
* நறுக்கிய பெரிய வெங்காயம் - 3 கப்
* கிராம்பு - 12
* ஏலக்காய் - 7
* கருவாப்பட்டை - 6 துண்டுகம்
* பூண்டு அரைப்பு - 1 மேஜைக்கரண்டி
* இஞ்சி அரைப்பு - அரை மேஜைக்கரண்டி
* மல்லி பொடி - அரை மேஜைக்கரண்டி
* மிளகாய்த்தூம் - அரை தேக்கரண்டி
* தக்காளித்துண்டுகம் - அரை கப்
* புளிக்காத தயிர் - கால் கப்
* தேங்காய் அரைப்பு - கால் கப்
* வற்றக்காய்ச்சிய பால் - கால் கப்
* அரைத்த கிஸ்மிஸ் - 1 மேஜைக்கரண்டி
* அரைத்த முந்திரி பருப்பு - 1 மேஜைக்கரண்டி
* உப்பு - தேவைக்கு
* மல்லி இலை - அரை கப்
* புதினா இலை - கால் கப்
* நேராகக் கீறிய பச்சை மிளகாய் - 4
* எலுமிச்சை சாறு - 1 மேஜைக்கரண்டி
குருமா தயார் செய்யும் விதம்:
முக்கால் கப் சூடான நெய்யில், பெரிய வெங்காயத்தைக் கொட்டி இளம் சிவப்பு நிறத்தில் வெந்து போகாத அளவுக்கு வறுக்கவும்.
லேசாக தீயை எரிய விட்ட படி கிராம்பு, ஏலக்காய், கருவாப்பட்டை, இஞ்சி- பூண்டு அரைப்பு, மல்லித்தூம், மிளகாய்த்தூம் ஆகியவைகளை அதில் ஒன்றன் பின் ஒன்றாகக் கொட்டி கிளறுங்கம். அதில் தக்காளி துண்டு களையும் சேர்த்து வறுக்கவும்.
நெய் தெளிந்து வரும் போது இறைச்சியை சிறு துண்டுகளாக்கி அதில் சேருங்கம். தேங்காய் அரைப்பு முதல் உப்பு வரையும்ள அனைத்து பொருட்களையும் தயிரில் கலக்குங்கம். இறைச்சி லேசாக வெந்து வரும் போது இதனை ஊற்றிவிடுங்கம். தேவைக்கு தண்ணீரும் சேர்த்திடுங்கம்.
பாத்திரத்தை மூடி, பாத்திரத்தின் அடியில் பிடித்துவிடாத அளவுக்கு கிளறி விட்டு வேகவையுங்கம். இறைச்சி வெந்து வரும்போது மல்லி இலை, புதினா இலை, பச்சை மிளகாய் போன்றவைகளை சேர்த்துவிடலாம்.
அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன்னால் எலுமிச்சை சாறை சேர்த்திடுங்கம். குருமாசாறு அதிகம் கெட்டியாகிவிடாத அளவில் இருக்கவேண்டும்.
சாதம் தயாராக்கும் விதம்:
தண்ணீரை கொதிக்கவிடுங்கம். கொதிக்கும் போது கழுவிய அரிசியைக் கொட்டி, சாதாரண சாதம் வேகவைப்பது போல் தயாராக்குங்கம். சாதம் பொடிந்து போகாமல் பாதி பக்குவத்திற்கு வேகும் போது, சிறிதளவு உப்பும், எலுமிச்சை சாறும் கலந்து சாதத்தை வடித்தெடுங்கம்.
சூடான குருமாவில் இருந்து ஒரு கப் சாறு எடுத்து மாற்றிவைக்கவும். அடிப்பகுதி கெட்டியான பாத்திரத்தில் நெய் பூசுங்கம்.
அதன் மேல் சிறிதளவு சாதத்தைக் கொட்டுங்கம். அதற்கு மேல் இறைச்சி துண்டுகளை எடுத்துப்போடுங்கம். அதற்கும் மேல் சாதத்தைக்கொட்டிவிட்டு, சாறினை ஊற்றுங்கம். அதற்கு மேல் மீதம் இருக்கும் சாதத்தைக் கொட்டுங்கம்.
சிறிதளவு ஜிலேபி கலர் பொடியை பாலில் கலக்கி பிரியாணிக்கு மேல் பகுதியில் தெளித்துவிடவும். நணைந்த துணி ஒன்றினை பிரியாணியின் மீது விரித்துப்போடுங்கம். அதனை மூடி விட்டு, பாத்திரத்தின் மேலும், கீழும் தீக்கனல் போட்டு வேகவிடுங்கம். அரை மணி நேரத்தில் டில்குஷ் பிரியாணி ரெடி.
===================================================================
Post a Comment