அசத்தல் சமையல்! ஸ்பெஷல் பிரியாணி!
தேவைப்படும் பொருட்கள்: * கோழி இறைச்சி- ஒரு கிலோ * பிரியாணி அரிசி- ஒரு கிலோ * பெரிய வெங்காயம்- அரை கிலோ * நெய்- கால் கிலோ * ப.மிளகாய்- 100 ...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_26.html
தேவைப்படும் பொருட்கள்:
* கோழி இறைச்சி- ஒரு கிலோ
* பிரியாணி அரிசி- ஒரு கிலோ
* பெரிய வெங்காயம்- அரை கிலோ
* நெய்- கால் கிலோ
* ப.மிளகாய்- 100 கிராம்
* இஞ்சி- 50 கிராம்
* பூண்டு- 50 கிராம்
* கசகசா- ஒரு தேக்கரண்டி
* தயிர்- ஒரு கப்
* முந்திரி பருப்பு-20 கிராம்
* உலர் திராட்சை-20 கிராம்
* மல்லி இலை- ஒரு கட்டு
* புதினா இலை- அரைகட்டு
* எலுமிச்சம் பழம்- ஒன்று
* பன்னீர்- 2 மேஜைக்கரண்டி
* மஞ்சள் நிற உணவுத்தூள்- சிறிதளவு
* கறிமசால் தூள்-3 தேக்கரண்டி
* தக்காளி- 100 கிராம்.
* உப்பு- தேவைக்கு
செய்முறை:
+ கோழி இறைச்சியை சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்குங்கள்.
+ பெ.வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்குங்கள்.
+ முந்திரி பருப்பை இருதுண்டுகளாக நறுக்குங்கள்.
+ ஒவ்வொரு தக்காளியையும் நான்காக நறுக்குங்கள்.
+ இஞ்சி, பூண்டு, ப.மிளகாய் போன்றவைகளை இடித்துவைக்கவும். கசகசாவை மாவு போல் அரைக்கவும்.
+ மல்லி இலை, புதினா போன்றவைகளை நறுக்கிவைக்கவும்.
+ எலுமிச்சை பழத்தை பிழியவும்.
+ கெட்டியான பாத்திரத்தில் பாதி நெய்யை ஊற்றுங்கள். சூடாகும் போது நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தில் பாதி அளவைக் கொட்டி கிளறுங்கள். வெங்காயத்தின் நிறம் மாறிவரும்போது அரைத்து வைத்திருக்கும் மசாலை சிறிது சிறிதாகக் கொட்டி கிளறுங்கள். நன்றாக வாசனை வரும்போது கோழித்துண்டுகளைச் சேர்த்து கிளறுங்கள். அதில் தயிர், கசகசா, தக்காளி, சிறிதளவு உப்பும் சேர்த்து நன்றாகக் கிளறி பாத்திரத்தை மூடி வைத்து வேகவிடுங்கள். லேசாக தீயை எரியவிட்டால் போதும்.
+ கோழி வெந்து, சாறு வற்றி வரும்போது அடுப்பில் இருந்து இறக்கி விடுங்கள்.
+ அரிசியை கழுவி தண்ணீர் வடிய வையுங்கள்.
+ மீதம் இருக்கும் நெய்யை இன்னொரு பாத்திரத்தில் ஊற்றுங்கள். சூடானதும் மீதம் இருக்கும் வெங்காயத்தைக் கொட்டி பொன்னிறமாகும் வரை வறுக்கவும். முந்திரிபருப்பையும், உலர் திராட்சையையும் கொட்டி கிளறி எடுத்து விடுங்கள்.
+ அதே எண்ணையில் அரிசியைக் கொட்டி தொடர்ந்து கிளறி லேசாக வெந்து வரும் நிலை ஏற்படும் போது தேவைக்கு தண்ணீர் விட்டு சிறிதளவு உப்பும் சேர்த்து மூடிவைத்து வேகவிடுங்கள். சோறு வெந்து, தண்ணீர் வற்றியதும் இறக்கி விடுங்கள்.
+ வெந்த இறைச்சியில் சிறிதளவு கறிமசால் தூள் சிதறுங்கள். அதற்கு மேல் மூன்றில் ஒரு பகுதி சாதத்தைக் கொட்டுங்கள். பன்னீரில் சிறிதளவு மஞ்சள் கலர்தூளை கலக்கி, அதற்கு மேல் தெளியுங்கள். அதற்கு மேல் சிறிதளவு கறிமசால் தூள், பொரித்த வெங்காயம், முந்திரி-உலர் திராட்சை போன்றவைகளை சேர்க்க வேண்டும். மீதம் இருக்கும் சாதத்தையும் ஏற்கனவே உள்ள முறைப்படி வைத்துவிட்டு, கனமான மூடியால் மூடுங்கள். அதன் மீது தீக்கனல் போட்டு பத்து நிமிடம் வையுங்கள். சூடான ஓவனில் வைத்தாலும் போதும்.
+ பிரியாணியை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதற்கு மேல் நெய்யில் வறுத்த வெங்காயம் வைத்து அலங்கரித்து பரிமாற வேண்டும்.
Post a Comment