ரசிக்க.. ருசிக்க! மங்களூர் போளி:
மங்களூர் போளி: தேவையான பொருட்கள்: மைதா-ஒரு கப், கேசரி கலர் - சிறிதளவு, நெய்-ஒரு டீஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை, தேங்காய் எண்ணெய் - ¼ கப். அர...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_2839.html
மங்களூர் போளி:
தேவையான பொருட்கள்: மைதா-ஒரு கப், கேசரி கலர் - சிறிதளவு, நெய்-ஒரு டீஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை, தேங்காய் எண்ணெய் - ¼ கப். அரிசி மாவு - புரட்டி எடுக்க.
பூரணம் செய்ய: கடலைப் பருப்பு - ஒரு கப் சர்க்கரை - ஒரு கப் ஏலக்காய்ப் பொடி-சிறிதளவு.
செய்முறை: மாவு, கலர், நெய், உப்பு ஆகியவற்றைப் பெரிய பாத்திரத்தில் ஒன்றாகக் கலந்துகொள்ளவும். தண்ணீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்து தளர்த்தியாக மாவைப் பிசைந்து கொள்ளவும். ஒரு மூடியால் மூடி அரை மணிநேரம் வைத்துக் கொள்ளவும். மீண்டும் நன்கு பிசைந்து, சிறிது சிறிதாக தேங்காய் எண்ணெய் சேர்த்து, எண்ணெயை மாவு முழுமையாக உறிஞ்சும் வகையில் கலந்துகொள்ளவும். மேலும், ஒன்றரை மணி நேரம் மூடி வைக்கவும்.
பருப்பைப் போதிய அளவு தண்ணீரில் மலர்ந்து மென்மையாகும் வரையில் வேகவிடவும். அதிகப்படியான தண்ணீரை வடிகட்டவும். பருப்புடன் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரையில் அடுப்பில் வைத்துக் கிளறவும். கீழே இறக்கி ஆற வைத்து, ஏலக்காய்ப் பொடி சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையிலிருந்து எலுமிச்சை அளவு உருண்டைகளாகத் தயாரித்துக் கொள்ளவும்.
மைதா மாவை சிறிய உருண்டைகளாகப் பிரித்துக் கொள்ளவும். ஒவ்வொரு உருண்டையையும் சிறிய அளவில் வட்டமாகத் தேய்த்துக் கொண்டு, அதன் மீது ஒரு பூரண உருண்டையை வைத்து மூடி அழுத்தவும். அரிசி மாவில் சிறிது புரட்டி எடுத்து மெல்லிய சப்பாத்தி போல இடவும். எண்ணெய் சேர்க்காமல், தோசைக் கல்லில் இரண்டு பக்கங்களையும் புரட்டி சுட்டுக் கொள்ளவும். இந்தப் போளியை ஒரு வாரம் வரையில் கெடாமல் வைத்திருந்து உபயோகப்படுத்தலாம்.
-------------------------------------------------------------------------------
Post a Comment