கேள்வி-பதில்! உளுந்து களி எப்படிச் செய்வது?
பெண் குழந்தைகள் புஷ்டியாக சத்துடன் இருக்க, உளுந்து களி கொடுப்பார்கள். இதை எப்படிச் செய்வது? அந்தக் காலத்தில் உளுந்தை ஊறவைத்து, அரைத்து, அட...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_8856.html
பெண் குழந்தைகள் புஷ்டியாக சத்துடன் இருக்க, உளுந்து களி கொடுப்பார்கள். இதை எப்படிச் செய்வது?
அந்தக் காலத்தில் உளுந்தை ஊறவைத்து, அரைத்து, அடுப்பில் கனமான பாத்திரத்தை வைத்து நல்லெண்ணெய் விட்டு, வழுவழுவென்ற அரைத்த உளுந்தைப் போட்டு அடிப்பிடிக்காமல் கிளறுவார்கள். தாராளமாய் நெய்யையும் சேர்த்துக் கிண்டி உளுந்து களி செய்வார்கள். இதற்கு நேரமும், சமயோசிதமாய் செய்யக்கூடிய ஆற்றலும் வேண்டும். கொஞ்சம் ஏமாந்தாலும் அடிப்பிடித்து வீணாகிப் போகும்.
உளுந்தை சிவக்க வறுத்து, மாவாக மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையை இளம்பாகாக கொதிக்க விட்டு, இந்த மாவைக் கொட்டி, மிதமான தீயில் கோவா சேர்த்து களி மாதிரி கிளறி நெய், முந்திரி, திராட்சை சேர்த்துக் கலக்கவும்.
காரக் களி எனில், கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு வெடிக்க விட்டு, பச்சைமிளகாய், இஞ்சி போட்டு தாளிக்கவும். அதில், வறுத்த உளுந்து மாவை பருப்பு உசிலிக்கு வேக வைப்பது போல் வேக வைத்துப் போட்டு உப்பு, சேர்த்து உப்புமா போன்றும் செய்து சாப்பிடலாம்.
Post a Comment