நபிமார்கள் பற்றிய தகவல்கள்-1

நபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள் நபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் ...

நபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்

நபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்தை தம் மூச்சாகக் கொண்டு செயல் பட்டவர்கள் . மக்களை அறியாமை இருளிலிருந்து ஒளியின் பால் அழைப்பதற்காக பாடுபட்டவர்கள். அவர்களின் ஏகத்துவ அழைப்பை ஏற்றவர்களும் உண்டு. ஏற்காதவர்களும் உண்டு. ஏற்காதோர் இறைத் தண்டனைக்கு ஆளாகி அழிந்தனர். ஓரிறைக் கொள்கையை உலகில் பிரச்சாரம் செய்த அந்த உத்தமர்கள் பற்றிய அரிய தகவல்களை வினா விடைவாயிலாக கீழே காண்போம்.

1. (மர்யம் பின்த் இம்ரான்) இம்ரானின் மகள் மர்யத்தை வளர்ப்பதற்கு பொறுப்பேற்றவர் யார்? நபி ஸகரிய்யா ( அலை).

2. மூஸா (அலை) அவர்களின் அமைச்சராகச் செய்ல்பட்டவர் யார்? ஹாரூன் (அலை).

3. மீனால் விழுங்கப்பட்ட இறைதூதர் யர்? நபி யூனுஸ் ( அலை).

4. யூஸுஃப் (அலை) அவர்களின் உடன் பிறந்த சகோதரர் யார்? புன்யாமீன்.

5. தந்தையில்லாது பிறந்த இறைதூதர் யார்? நபி ஈஸா(அலை)

6. எந்த இறைதூதரின் மகன் (காஃபிர்) இறை நிராகரிப்பாளன்? நூஹ் நபியன் மகன்.

7. எந்த நபியின் தந்தை (காஃபிர்)இறை நிராகிப்பாளன்? நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் தந்தை.

8. தான் உழைக்காமல் உண்ணமாட்டார். அந்த நபி யார்? நபி தாவூது (அலை)

9. தாவூது நபியின் நோன்பு எவ்வாறிருந்தது? ஒருநாள் நோன்பிருப்பார். மறுநாள் நோன்பை விட்டுவிடுவார்.

10. நீண்ட காலம் நோயுற்று பொறுமை காத்த நபி யார்? நபி அய்யூபு (அலை)

11. கொடுங்கோலன் பிர்அவ்னிடம் “நீங்கள் இருவரும் சென்று பிரச்சாரம் செய்யுங்கள்!” என்று யாருக்கு இறைவன் கட்டளை பிறப்பித்தான்? மூஸா (அலை), ஹாரூன் (அலை) ஆகிய இருவருக்கும்.( 20:43)

12. யூனுஸ் (அலை) எந்த மக்களுக்கு இறைதூதராக அனுப்பப்ட்டார்கள்? நீனவா மக்களுக்கு.

13. எந்த நபியை நம்ரூத் மன்னன் நெருப்புக் குண்டத்தில் போட்டான்? நபி இப்றாஹீம் (அலை) அவர்களை.

14. ஈஸா நபியவர்கள் எந்த சமூயத்திற்கு நபியாக அனுபப்பட்டார்கள்? பனீ இஸ்ரவேலர்களுக்கு!

15. சிறையிலடைக்கபட்ட இறை தூதர் யார்? நபி யூஸுஃப் (அலை).

16. “இப்னுத் தபீஹைன்”(அறுப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்ட இருவரின்) மகன் யார்? நபி முஹம்மது (ஸல்). (இப்றாஹீம் நபியின் மகன் இஸ்மாயீலும், அப்துல் முத்தலிபின் மகன் அப்துல்லாஹ்வும் பலியிடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள்).

17. “கலீலுல்லாஹ்” (இறைவனின் உற்ற நண்பர்) என அழைக்கப்பட்டவர் யார்? நபி இப்றாஹீம் (அலை)

18. “கலீமுல்லாஹ்” (இறைவனிடம் உரையாடியவர்) என அழைக்கப்படுபவர் யார்? நபி மூஸா (அலை)

19. “ஹபீபுல்லாஹ்” ( இறைவனின் நேசத்தை அதிகம் பெற்றவர்) யார்? நபி முஹம்மத் (ஸல்)

20. “தபீஹுல்லாஹ்” ( பலியிட அழைத்துச் செயல்லப்பட்டவர்) யார்? நபி இஸ்மாயீல் (அலை)

21.ரூஹுல்லாஹ் ( இறைவனால் ரூஹ் ஊதப்பட்டவர்) யார்? நபி ஈஸா (அலை).

22. அபுல் பஷர் ( மனிதத்தந்தை) யார். முதல் மனிதர் ஆதம் (அலை).

23. அபுல் அன்பியா (நபிமார்களின் தந்தை எனப்படுபவர் யார்? நபி இப்றாஹீம் (அலை). இவர்களிலிருந்தே அதிகமான நபிமார்கள் தோன்றியதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றனர்.

24.நபி யூஸுஃப் (அலை) அவர்கள் கிணற்றில் எறியப்பட்டு எத்தனை நாட்கள் அங்கே இருந்தனர்? மூன்று நாட்கள்.

25. நபி யூஸுஃப் (அலை) அவர்கள் எத்தனை நாட்கள் சிறவைக்கப்பட்டனர்? ஏழு வருடங்கள்.

26. எந்த மலையில் வைத்து நபி மூஸா (அலை) அவர்களிடம் இறைவனிடம் பேசினான்? தூர்ஸீனா மலையில் .(2:63)

27. நபி ஹூது (அலை) அவர்கள் எந்த சமுதாயத்திற்கு நபியாக அனுப்பப்பட்டார்கள்? ஆது மக்களுக்கு!

28. ஷுஐபு (அலை) அவர்கள் எந்த மக்களுக்கு நபியாக அனுப்பப்பட்டார்? மத்யன் மக்களுக்கு!

29. ஹாரூன் (அலை) அவர்கள் எதில் சிறந்து விளங்கினர்? நாவன்மையில் (ஃபஸாஹத்துல் லிஸான்)

30. அறிஞர் கிள்ரை காண்பதற்காக மூஸா (அலை) அவர்களுடன் சென்ற இளைஞர் யார் ? யூஷஃ பின் நூன்.

31. இப்றாஹீம் (அலை) அவர்களை நெருப்பிலிட்ட மன்னன் யார்? அவன் எவ்வாறு அழிக்கப்பட்டான்? நம்ரூத் என்னும் கொடியவன். மூக்கு வழியாகக் ஒரு கொசுவை அனுப்பி அதன் கொடுமையால் அழிக்கப்பட்டான்.

32. தமூத் மக்களுக்கு அனுப்பப்பட்ட இறைதூதர் யார்? நபி ஸாலிஹ் (அலை).

33. தாவூது (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட வேதம்? ஸபூர் வேதம்.

34. நூஹ் நபியின் கப்பல் ஒதுங்கி நின்ற மலை எது? ஜூதி மலை.(அல்-குர்ஆன் 11:54)

35. மகன்,தந்தை,பாட்டனார் மூவரும் இறைதூதராக இருந்தனர், அவர்கள் யார்?யூஸுஃப் அவர் தந்தை யஃகூபு, அவர் தந்தை இப்றாஹீம் ஆகியோர் இறை தூதர்களாவர்.

36. மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட வேதம்? தவ்ராத் வேதம்.

37. ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட வேதம்? இன்ஜீல் வேதம்.

38. ஈஸா (அலை)அவர்களின் தோழர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்?ஹவாரிய்யூன்.(3:52)

39.மன்னன் ஜாலூத்தை கொன்ற நபியார்? நபி தாவூது (அலை) (2:251)

40.தச்சராக வேலை செய்த நபி யார்? ஸகரிய்யா (அலை).

37.ஈஸா (அலை) அவர்கள் பிறந்த ஊர் எது? பலஸ்தீன்.

38.நபி ஸுலைமான் அவர்களின் கடிதத்தை பல்கீஸ் அரசிக்கு கொண்டு சென்ற தூதர் யார்? ஹுத்ஹுத் பறவை. (27:20)

39. தந்தையும் மகனும் நபியாக இருந்தவர்கள் யார் யார்? நபி இப்றாஹீமும் நபி இஸ்மாயீலும்,நபி இஸஹாக்கும், நபி யஃகூபும், நபி யஃகூபும் நபி யூஸுஃபும், நபி தாவூதும் நபி ஸுலைமானும், நபி ஸகரிய்யாவும் நபி யஹ்யாவும் ஆகியோராவார் (அலைஹிமுஸ்ஸலாம்)

40. நபி மூஸா (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதங்கள் யாவை? அவை ஒன்பது (17:101) 1.அஸா பாம்பாக மாறுதல் ,2.கை ஒளி பெறுவது,4.தூஃபான் வெள்ளம், 5.வெட்டுக்கிளி, 6.பேன், 7.தவளை,8.இரத்தம்,9. கடும் பஞ்சம் ( அல் குர்ஆன்.27:12, 7:108)

41.நபி மூஸா அவர்கள் எகிப்தை விட்டு ஓடிப்போனபோது என்ன தொழில் செய்தார்கள்? ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்கள்.

42.இப்றாஹீம் நபியின் மக்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தனர்?சிலைகளையும், நட்சத்திரங்களையும்.

43.இப்றாஹீம் நபியின் மனைவியும் இஸ்ஹாக் நபியின் தாயாரும் யார்? ஸாரா அம்மையார்.

44.கத்தீபுல் அன்பியா ( நபிமார்களில் நாவலர்) யார்? நபி ஷுஐபு (அலை)

45.உலகில் தோன்றிய நபிமார்களின் தலைவர் யார்? நபி முஹம்மது (ஸல்) அவர்கள்.

46.நபி ஈஸா (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதங்கள் யாவை? 1. களி மண்ணால் செய்த பறவை உயிர் பெறுதல். 2. பிறவிக்குருர் கண்பார்வை பெறுதல்.3. குஷ்டரோகிகள் நலம் பெறுதல் 4. இறந்தோரை உயிர்பித்தல் 5. பிறர் உண்பதை (வீட்டில் உள்ளவற்றை பார்க்காமலே) கூறுதல்) ( குர்ஆன்: 3:49,5:110)

47. ஸூரா கஹ்பில் கூறப்பட்ட “அப்துன் ஸாலிஹ்” (நல்லடியார்) யார்? கிள்ர் (களிர்) (அலை)

48. நபி (ஸல்) அவர்களின் அற்புதங்களில் முக்கியமானவை யாவை? 1.உலகுக்கே சவாலாவிருக்கும் பொதுமறை அல் குர்ஆன்.2. மிஃராஜ் (விண்வெளிப்) பயணம்.3. சந்திரனைப் பிளந்தது. 4.கைவிரல்களிலிருந்து தண்ணீர் ஊற்றாக ஓடியது.5. வஹீ மூலம் மறைவான செய்திகளைக் கூறியது.6. கல் ஸலாம் உரைத்தது.7. மாடு பேசியது. 8. நோயாளரை நலம் பெறச் செய்தது. 9. சிறிதளவு உணவை பெரும் கூட்டம் உண்ணுமளவு அதிகரித்தது.10. பேரீத்தம் மரம் அழுதது.11. பேரீத்தம் பழங்கள் பெரும் குவியலாகப் பெருகியது.12. எதிரிகளின் கொலைச் சூழ்ச்சிகளிலிருந்து காத்தது.13. துஆக்களை இறைவனால் ஏற்க்கப்படுவது. போன்ற நூற்றுக்கணக்கான அற்புதங்கள் ‘நிகழ்ந்தன.

49. இப்றாஹீம் நபி செய்த தொழில் என்ன? விவசாயம்.

50. ஆதம் (அலை) அவர்களின் மகன் ஹாபீலைக் கொன்றது அவரது சகோதரர் காபீல்


Related

அமுத மொழிகள் 6942462671759593989

Post a Comment

1 comment

Nizreen said...

Those informations are very useful.
jazakallahu khair.

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item