சமையல் குறிப்புகள்! பால்கோவா-வீட்டில் தயாரிக்கிற முறை
‘‘பாலை நன்கு சுண்டக் காய்ச்சும்போது கிடைப்பதுதான் கோவா. இதைத்தான் இனிப்பில்லாத கோவா என்று குறிப்பிடுகிறார்கள். குலாப்ஜாமூன் முதல் சந்தேஷ் வ...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_5058.html
‘‘பாலை நன்கு சுண்டக் காய்ச்சும்போது கிடைப்பதுதான் கோவா. இதைத்தான் இனிப்பில்லாத கோவா என்று குறிப்பிடுகிறார்கள். குலாப்ஜாமூன் முதல் சந்தேஷ் வரை பல இனிப்புகளில் கோவா பயன்படுத்தப்படுகிறது. இதை வீட்டில் தயாரிக்கிற முறையைச் சொல்கிறேன்.
ஒரு லிட்டர் பாலை, அடி கனமான பாத்திரம் ஒன்றில் ஊற்றி, அடுப்பில் வைத்து, நன்கு காய்ச்சுங்கள். நன்கு கொதிக்கும்போது, அடுப்பை ‘ஸிம்’மில் வைத்து, காய்ச்சுங்கள். அடிக்கடி கிளறிக்கொண்டே இருந்தால், பால் நன்கு சுண்டி, அதன் தளதளப்பு வற்றி, சுருண்டு வரும். இதுதான் கோவா. இதனுடன் மைதா சேர்த்துப் பிசைந்து, உருட்டி குலாப் ஜாமூன் தயாரிக்கலாம். கோவாவுடன் வெண்ணெய், சர்க்கரை சேர்த்துப் பிசைந்து செய்வதுதான் ‘சந்தேஷ்’ என்னும் பெங்காலி ஸ்வீட். இன்னும் பல இனிப்புகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.
இதிலேயே சர்க்கரை சேர்த்துக் கிளறினால், பால்கோவா கிடைக்கும்.
இப்போது தீர்ந்ததா உங்கள் சந்தேகம்? இனி என்ன... கோவா சேர்த்த இனிப்புகளை செய்து அசத்துங்கள்!’’
Post a Comment