வாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்
வாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே..! நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...
https://pettagum.blogspot.com/2012/05/2.html
வாழ்க்கை – 2
வாழ்க்கையின்
வசந்தங்களை
வருங்கால கனவுகள் ஆக்காதே..!
நிகழ்காலத்தில் நிலைநாட்டு.
‘எனக்காக’
என்ற படியைவிட்டு
‘நமக்காக’
என்ற படியை நோக்கி
முன்னேறு..!
எண்ணங்களை
வார்த்தைகளால் வெளிப்படுத்தாதே..!
செயல்களால் நிரூபணம் செய்..!
உயர்ந்த
கோபுரங்களின் உறுதிப்பாடு
மண்ணுக்குள்ளேதான்
மறைந்து கிடக்கிறது..!
உன்-
உள்ள உறுதி
அரிய சாதனைகளுக்கு
அடித்தளம் ஆகட்டும்..!
வீணை -
தன்னைத்தானே
மீட்டிக்கொள்ள முடியாது..!
விரல்களே -
தந்திக் கம்பிகளின் ஊடே
மறைந்திருக்கும்
நாதத்தை வெளிப்படுத்தும்..!
உன்னை
வெளிப்படுத்தும்
சக்தியைத் தேடு..
அலைகள் -
ஆர்த்தெழுவது
கரையைத் தழுவத்தான்
உன் -
எழுச்சியால்
சொந்தங்களை சுகப்படுத்து..!
வாழ்க்கையின்
வசந்தங்களை
வருங்கால கனவுகள் ஆக்காதே..!
நிகழ்காலத்தில் நிலைநாட்டு.
‘எனக்காக’
என்ற படியைவிட்டு
‘நமக்காக’
என்ற படியை நோக்கி
முன்னேறு..!
எண்ணங்களை
வார்த்தைகளால் வெளிப்படுத்தாதே..!
செயல்களால் நிரூபணம் செய்..!
உயர்ந்த
கோபுரங்களின் உறுதிப்பாடு
மண்ணுக்குள்ளேதான்
மறைந்து கிடக்கிறது..!
உன்-
உள்ள உறுதி
அரிய சாதனைகளுக்கு
அடித்தளம் ஆகட்டும்..!
வீணை -
தன்னைத்தானே
மீட்டிக்கொள்ள முடியாது..!
விரல்களே -
தந்திக் கம்பிகளின் ஊடே
மறைந்திருக்கும்
நாதத்தை வெளிப்படுத்தும்..!
உன்னை
வெளிப்படுத்தும்
சக்தியைத் தேடு..
அலைகள் -
ஆர்த்தெழுவது
கரையைத் தழுவத்தான்
உன் -
எழுச்சியால்
சொந்தங்களை சுகப்படுத்து..!
Post a Comment