சமையல் குறிப்புகள்! கேரளா ஸ்பெஷல்!! புழுக்கு
தேவையானவை: முற்றின பலாச் சுளைகள் & 10, மரவள்ளிக்கிழங்கு அல்லது நறுக்கிய வாழைக்காய் துண்டுகள் (விருப்பப்பட்டால்) & ஒரு கப், மஞ்சள்தூ...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_6113.html
தேவையானவை: முற்றின பலாச் சுளைகள் & 10, மரவள்ளிக்கிழங்கு அல்லது நறுக்கிய வாழைக்காய் துண்டுகள் (விருப்பப்பட்டால்) & ஒரு கப், மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு, தேங்காய் எண்ணெய் & 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை & சிறிது.
அரைக்க: தேங்காய் துருவல் & ஒன்றரை கப், காய்ந்த மிளகாய் & 8, சீரகம் & அரை டீஸ்பூன், பூண்டு & 4 பல்.
தாளிக்க: கடுகு & அரை டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் & 2 டீஸ்பூன், கறிவேப்பிலை & சிறிது.
செய்முறை: பலாச்சுளைகளை விதை நீக்கி, விருப்பமான வடிவத்தில் துண்டுகளாக நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்துக் கொள் ளுங்கள். வாணலியை அடுப்பில் வைத்து, வாழைக்காய் அல்லது மரவள்ளிக்கிழங்கு துண்டு களுடன் பலாச்சுளைகளையும் சேர்த்து, அரைத்த விழுதைச் சேருங்கள். சிறிதளவு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, குறைந்த தீயில் நன்கு வேகவிடுங்கள். அவ்வப்போது சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து வேகவையுங்கள். (கவனிக்கவும்: தண்ணீர் அதிகம் சேர்க்கத் தேவையில்லை. பலாச்சுளை தண்ணீர் விட்டுக் கொண்டே வரும் என்பதால் அந்தத் தண்ணீரும் அரைத்த விழுதில் இருக்கும் தண்ணீருமே வேகப் போதுமானது. அதி லேயே வேகவைப்பதால்தான் இதற்கு ‘புழுக்கு’ என்று பெயர்).
நன்கு வெந்தபிறகு, தாளிப்பதாக இருந்தால் (கேரளாவில் ஒரு சில பகுதிகளில், ‘புழுக்கு’வை தாளிக்காமல் செய்யும் வழக்கம் இருக்கிறது), சிறிது தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டுங்கள். மேலும், சிறிது தேங்காய் எண்ணெயை (பச்சையாக) ஊற்றி, கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு, கிளறி இறக்குங்கள்.
குறிப்பு: கேரளாவின் ஒவ்வொரு பகுதியிலும் இந்தப் பதார்த்தத்தில் சேர்க்கும் காய்களில் இருந்து செய்முறை வரை அனைத்துமே வேறுபடுகிறது.
Post a Comment