ஆலு கோஷ் குருமா -- சமையல் குறிப்புகள்
ஆலு கோஷ் குருமா தேவையானவை மட்டன்(கோஷ்) - அரை கிலோ வெங்காயம் - 300 கிராம் தக்காளி - 300 கிராம் ஆலு (உருளை) - கால் கிலோ எண்ணை - 50 மில்லி டால...

https://pettagum.blogspot.com/2011/11/blog-post_6653.html
ஆலு கோஷ் குருமா
தேவையானவை
மட்டன்(கோஷ்) - அரை கிலோ
வெங்காயம் - 300 கிராம்
தக்காளி - 300 கிராம்
ஆலு (உருளை) - கால் கிலோ
எண்ணை - 50 மில்லி
டால்டா - ஒரு மேசை கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு மேசை கரண்டி
கொத்து மல்லி தழை - கால் கட்டு
புதினா - கால் கட்டில் பாதி
பச்ச மிளகாய் - முன்று
தயிர் - 50 மில்லி
பட்டை, ஏலம், கிராம்பு - தலா இரண்டு இரண்டு
தேங்காய் பவுடர் - முன்று மேசை கரண்டி
முந்திரி , பாதம் - இரண்டு மேசை கரண்டி
மிளகாய் தூள் - இரண்டு தேகக்ரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தனியாத்தூள் - கால் தேக்கரண்டி
உப்பு தேவைக்கு.
செய்முறை
1.தேவையான பொருட்களை தயாராக வைக்கவேண்டும்.
கறியை சுத்தம் செய்து கழுவி தண்னீரை வடித்து வைக்கவேண்டும்.கொத்து மல்லி புதினாவை மண்ணில்லாமல் கழுவி வைக்கவும்.வெங்காயம், தக்காளியை அரிந்து வைக்கவேண்டும்.
2.குக்கரை காயவைத்து எண்ணை+டால்டா ஊற்றி, அதில் பட்டை, கிராம்பு,ஏலம் போட்டு வெடித்ததும் வெங்காயத்தை போடு நன்கு வதக்கி தீயை சிம்மில் வைக்க வேண்டும்
.3.பிற்கு வெங்காம் நன்கு மடங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி தீயை சிம்மில் வைக்கவும், நன்கு பச்ச வாடை மாரியதும், கொத்து மல்லி, புதினாவை போட்டு வதக்கி இரான்டு நிமிடம் சிம்மில் வைக்கவேண்டும்.
4.அடுத்து தக்காளி,பச்ச மிளகாயை போட்டு நன்கு வதக்கி சுருள விட வேண்டும்.
5.தக்காளி வதங்கியதும் அதில் மிள்காய் தூள், உப்பு தூள், தனியாதூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
6 மூடி போட்டு சிறிது நேரம் மசாலாவை சேர விட வேண்டும்.
7.மசாலா நன்கு கிரிப்பானதும் தயிர் மற்றும் கறியை போட்டு கிளற வேண்டும்.
8..ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து எல்லா மசாலாவும் சேரும் வரை கொதிக்க விட வேண்டும்.
9..இப்போது ஆலுவை தோலெடுத்து கழுவி நன்காகவோ எட்டாகவோ அரிந்து போடவேண்டும்.
10.முன்று நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
11.குக்கரை மூடி போட்டு நாலு விசில் விட்டு கறி வெந்ததும் இரக்கவும்.
12.முந்திரி, பாதம், தேங்காய் பவுடர் அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்து அதில் கொஞ்சம் கொத்து மல்லி புதினா சேர்த்து வைக்கவும்.
13.குக்கர் ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து தேங்காய் முந்திரி கலவையை ஊற்ற வேண்டும்.
14.தேங்காய் வாடை அடங்கும் வரை தீயை சிம்மில் வைத்து நன்கு கொதிக்க வைத்து இரக்க வேண்டும்.
15.சுவையான ஆலு கோஷ் குருமா ரெடி.
குறிப்பு
தேங்காய் பவுடருக்கு பதில் அரை முறி தேங்காயும் அரைத்து ஊற்றலாம்.
கச கசா இருந்தால் அதையும் சேர்த்து அரைத்து கொள்ளலாம்.
இது கீரைஸ் பகாறா கானாவிற்கு ஏற்ற சூப்பரான இஸ்லாமிய இல்லத்தில் விஷேஷங்கலில் செய்யும் சால்னா( குழம்பு).
பரோட்டா, ஆப்பம், தோசை, இட்லி ஆகியவற்றிற்கு ஏற்ற குருமாவாகும்.
Post a Comment