அடை ( செட்டிநாடு செய்முறை)--அடை வகைகள்.
அடை செட்டிநாடு செய்முறையில் செய்யப்படும் இந்த அடை மிகவும் பிரபலமானது. ஒரு மணி நேரத்திற்குள் இந்த அடை மாவைத் தயாரித்து விடலாம். சுவையான அ...

https://pettagum.blogspot.com/2011/11/blog-post_15.html
அடை
செட்டிநாடு செய்முறையில் செய்யப்படும் இந்த அடை மிகவும் பிரபலமானது. ஒரு மணி நேரத்திற்குள் இந்த அடை மாவைத் தயாரித்து விடலாம். சுவையான அடை செய்வதற்கான எளிய செய்முறைக் குறிப்பு இங்கே வழங்கப்பட்டுள்ளது.தேவையான பொருட்கள்
- கடலைப்பருப்பு – 3 /4 கப்
- துவரம்பருப்பு – 3 /4 கப்
- பாசிப்பருப்பு – 1 /4 கப்
- உளுத்தம்பருப்பு – 1 /4 கப்
- இட்லி அரிசி – 3 /4 கப்
- பச்சரிசி – 3 /4 கப்
- காய்ந்த மிளகாய் -6
- சோம்பு – 1/2 தேக்கரண்டி
அடை மாவுடன் கலக்க தேவையான பொருட்கள்
- பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப்
- பொடியாக நறுக்கிய கருவேப்பிலை – 1 மேசைக்கரண்டி
- பொடியாக நறுக்கிய மல்லித்தழை – 2 மேசைக்கரண்டி
- தேங்காய் துருவியது – 3 மேசைக்கரண்டி
- பெருங்காயம் – சிறிது
- உப்பு – சிறிது
செய்முறை
- மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும்(கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு, இட்லி அரிசி, பச்சரிசி, காய்ந்த மிளகாய் , சோம்பு) 45 நிமிடங்கள் ஊற வைத்து பின் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- பின் மாவுடன் கலக்க கொடுத்துள்ள பொருட்களைக் கலந்து தோசை போல் ஊற்றவும். அடை மாவு திக்காக இருக்க வேண்டும். தோசை மாவு போல் லூசாக இருக்கக் கூடாது.
Post a Comment