கொத்துமல்லி குழிபணியாரம் --சமையல் குறிப்புகள்
கொத்துமல்லி குழிபணியாரம் - coriander kuzipaniyaram இது இட்லி, தோசைக்கு அரைத்து மீந்து போன மாவில் நான் கொத்துமல்லி தோசை செய்வேன்,(இன்னும் இந...
https://pettagum.blogspot.com/2011/12/blog-post_9121.html
கொத்துமல்லி குழிபணியாரம் - coriander kuzipaniyaram
இது இட்லி, தோசைக்கு அரைத்து மீந்து போன மாவில் நான் கொத்துமல்லி தோசை செய்வேன்,(இன்னும் இந்த கலவையில் மஞ்சள் தூள், சிறிது மிளகாய் தூள் சேர்த்தும் சில சமையம் செய்வேன் ரொம்ப நல்ல இருக்கும். மிளகாய் பொடியுடன் சூப்பராக இருக்கும்.) இப்ப அது குழிபணியாரமாகிவிட்ட்து.
மீந்து போன இட்லிதோசை மாவு – ஒரு டம்ளர்
மைதா – அரை டம்ளர்
ரவை – கால் டம்ளர்
கொத்துமல்லி தழை – ஒரு பஞ்ச்
பச்ச மிளகாய் – இரண்டு
வெங்காயம் – இரண்டு
கருவேப்பிலை – சிறிது
உப்பு – தேவைக்கு
ஆப்ப சோடா – அரை பின்ச்
முந்திரி – 4 (பொடியாக அரிந்த்து
செய்முறை:
1.மாவில் மைதா ரவை,ஆப்ப சோடா, உப்பு யை தேவைக்கு தண்ணீர் சேர்த்து கலக்கவும் .
2.வெங்காயம் ,பச்சமிளகாயை பொடியாக அரிந்து சேர்க்கவும்.
3.கொத்துமல்லியை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி பொடியாக நருக்கி சேர்க்கவும்.
4. குழிபணியார சட்டியை காயவைத்து பணியாரங்களாக சுட்டு எடுக்கவும்.
5.தொட்டு கொள்ள வெங்காய உளுந்து துவையல் பொருத்தமாக இருக்கும்.
Post a Comment