பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்--

ஒரு இல்லம் நல்லறமாய் அமைவது என்பது, அக்குடும்பத்தை நிர்வகிக்கும், குடும்பத் தலைவரை விட, தன்னையும் தனது கணவர் குடும்பத்தோரையும், தனது கு...

ஒரு இல்லம் நல்லறமாய் அமைவது என்பது, அக்குடும்பத்தை நிர்வகிக்கும், குடும்பத் தலைவரை விட, தன்னையும் தனது கணவர் குடும்பத்தோரையும், தனது குழந்தைகளையும், உற்றார் உறவினரையும் திருப்திப்படுத்தி, அன்றாடம் வீட்டு நிர்வாகத்தையும் கவனித்து, அனைவரின் உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான உணவு வகைகளை தயாரித்து, பாதுகாத்து பராமரிக்கும், பொறுப்புகளுடன், காலை முதல் இரவு வரை உழைக்கும் குடும்பத் தலைவியாக விளங்கும் ஒரு பெண்ணையே சார்ந்ததாகும். அதிலும் அக்குடும்பத்திற்கு மகிழ்ச்சியையும் மன நிம்மதியையும் தந்து தம்பதியர்களை நிறைவடையச் செய்வது மக்கட்பேறு எனும் தாய்மைதான். அப்படி ஒரு பெண் எனபவள் பெருமைக்குரியதாகக் கருதப்படுவதால்தான் இந்தப் பிறந்த மண்ணையே தாயாகவும், தான்பேசும் மொழியை தாய்மொழியாகவும், அனைவரையும் காத்து இரட்சிக்கும் இறைவி எனும் சக்தி தெய்வமாகவும் பெண்ணைப் போற்றி வணங்குகிறோம். இத்தகைய மாண்புகளை உடைய பெண்களுக்கு தான் எத்தனை பிரச்னைகள் வாழ்கையின் ஏற்படுகின்றன. பெண்ணாய் பிறந்ததே பாவம் என புலம்பும் எத்தனையோ பெண்களின் வாழ்க்கை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும், குடும்பச்சூழல் ரீதியாகவும் எண்ணற்ற விதத்தில் பாதிக்கப்பட்டு வாழ்க்கையின் விரக்திற்கே சென்றுவிடும் நிலையில் தான் மேற்கூறிய புலம்புதலை கேட்க முடிகிறது. அதிலும் அன்றைய காலத்தில் தங்களது பெண்களை சிறந்த முறையில் வளர்ந்து, கல்வி பெறச் செய்து, பருவமடைந்தப்பின் ஒரு பெண் எப்படி வாழ வேண்டும் எனற் வாழ்வியல் நெறிமுறைகளை வழிகாட்டி, உரிய வயதில் திருமணம் செய்து வைத்து, அவரது சந்ததிகளைப் பார்த்து பெரும் மனமகிழ்ச்சியும் பெருமையும் கொண்டு வாழ்ந்தார்கள். எனினும் ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான் என்ற பழமொழி மூலம் ஒருவருக்கு ஐந்து குழந்தைகளும் பெண்ணாய் பிறந்துவிட்டால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவார் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்கள் நமது ஆன்றோர்கள். அந்த அளவிற்கு ஒரு பெண்ணை வளர்க்கும் காலத்தில் பிறந்தது முதல், பருவம் அடைந்து, திருமணம் செய்வித்து, பிரசவம் ஆகிறவரை அப்பெண்ணிற்காக ஒரு பெற்றோரின் கடமைகள் எண்ணிலடங்கா! அது மட்டுமா எத்தனை பெண்கள் பருவம் அடைய வேண்டிய வயதில் பருவமடைவதில்லை, எத்தனை பெண்களுக்கு மாத விடாய் பிரச்னைகள், எத்தனை பெண்களுக்கு கருத்தரிப்பு இல்லாமை, எத்தனை பெண்களுக்கு மன உலைச்சல், மனபாதிப்பு, உடற்கோளாறுகள் என பெண்கள் படும் வேதனைகள் பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். இந்த விஞ்ஞான தொழில்நுட்ப மருத்துவ கண்டுபிடிப்புகளால் ஏற்பட்டுள்ள அசுர வளர்ச்சியின் தாக்கத்தினால், கர்ப்பமுற்ற ஒரு தாய், தனக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று ஸ்கேன் மூலம் அறிந்து பெண் குழந்தை என்றால் அக்குழந்தை பிறப்பதையே தவிர்க்க கருக்கலைப்புக்கு உட்படுவதும், பெண் குழந்தை என்றால் சுமை எனும் மனோபாவம் வளர்ந்து, பெண்மைக்கு ஒரு மாசு கற்பிக்கின்ற நிலைமையை நாம் அனைவரும் நன்கு அறிவோம். அந்த வகையில் எத்தனையோ அவலங்களுடன், துயரங்களுடன் வாழ்கின்ற பெண்களுக்கு, மருத்துவ ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு, உடல் நலம் காக்கும் வழிவகைகளைப் பற்றி இயற்கை வைத்திய முறையில் இனிப் பார்ப்போம்.

பெண்கள் சாதாரணமாக 12 முதல் 16 வயதிற்குள் பூப்பெய்வது இயற்கையானது. ஒரு சில பெண்களுக்கு 18 வயது கூட ஆவதுண்டு. அவர்கள் 18 வயதிற்கு மேல் பூப்படையாததிற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் இரத்த சோகை, உடல் பலவீனம், குடும்பப் பாரம்பரிய உடல் சம்பந்தப்பட்ட பாதிப்பு என பல்வேறு காரணங்களும் அடங்கும். அத்தகைய பெண்களுக்கு நமது தாயகத்தில் குப்பைமேனி இலையை இடித்து எடுத்து, சாறெடுத்து, அச்சாற்றில் இரண்டு ஸ்பூனுக்கு மூன்று நாட்கள் தொடர்ந்து அருந்தக் கொடுப்பதைப் பார்த்திருக்கிறோம். இதற்கு இயற்கை மருத்துவ வகைகளின் சோற்றுக் கற்றாழையிலிருந்து தயாரிக்கப்பட்ட Aloe எனும் இயற்கை மருந்து.

பருவமடைந்த பெண்கள் மாதம்தோறும் மாதவிடாய் ஆவது சாதாரண நிகழ்ச்சியாகும். அவ்வேளைகளில் வயிற்று வலி அல்லது அதிக உதிரப்போக்கு, மயக்கம், களைப்பும், சோர்வும் பொதுவாக ஏற்படுவது உண்டு. இத்தகைய தொல்லைகள் ஏற்பட்டால் அதற்கான எளிய சிகிச்சை முறையாக பினவரும் முறையில் தயாரித்து நம் வீட்டிலேயே பயன்படுத்தலாம்.

வயிற்று வலி ஏற்பட்டால் 20 மிளகு, தோல் உரித்த வெள்ளைப் பூண்டின் பற்கள் 10 இரண்டையும் மாவிலங்கப்பட்டையில் கொட்டைப்பாக்கு அளவு சேர்த்து அம்மியில் அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சிறிது வென்னீருடன் அருந்த வேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி நீங்கும்.

அதுபோன்ற இத்தகைய கோளாறு உள்ளவர்கள் அவர்கள் அருந்தும் நீரில் வெங்காயப்பூக்களைப் போட்டு ஊற வைத்துக் குடிநீராகப் பயன்படுத்த எல்லாத் தொல்லைகளும் நீங்கும். வெங்காயப் பூக்கள் 100 கிராம் எடுத்துச் சுத்தப்படுத்தி வெய்யிலில் சருகுபோல் காய வைத்து, இடித்து சலித்து சூரணமாக்கிக் கொண்டு ஒரு நாளைக்கு அரை ஸ்பூன் வீதம் சூரணத்தை வாயிலிட்டு, சோயா பாலைக் காய்ச்சி அருந்தி வர மாதவிடாய் தொல்லை நீங்குவதோடு, கருப்பையும் பலப்படும்.

திப்பிலி, பெருங்காயம், இந்துப்பு வகைக்கு 25 கிராம் எடுத்து, திப்பிலியை வறுத்து, பெருங்காயத்தை பொரித்த பின் மூன்றையும் சேர்த்து இடித்து சலித்து சூரணமாக்கிக் கொண்டு, இரண்டு ஸ்பூன் வீதம், ஒரு நாளைக்கு இரு வேளையாக ஒரு வாரம் அருந்த, சூதக வாய்வு மற்றும் பிற தொல்லைகளும் நீங்கும். மேலும் சம்பங்கிப் பூவுடன் தேன் கலந்து தண்ணீர் விட்டு சுண்டக் காய்ச்சி கஷாயம் செய்து, 10 நாட்கள் வரை அருந்தலாம். சில பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பும், பின்பும் தாங்க முடியாத வயிற்று வலி ஏற்படுவது உண்டு. அவர்கள் கல்யாண முருங்கை இலையைச் சாறு எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும், பூரண மாதவிடாய் சரிவர வராமல் பல தொல்லைகளை ஏற்படுத்துவதும் உண்டு அதைப்போன்றே சில சமயங்களில் பல்வேறு குடும்ப நிகழ்ச்சிகள் காரணமாய் இரண்டொருநாட்கள் தள்ளிபோவதற்கும் விரும்புவார்கள். இயற்கை மருத்துவ முறையில் அதற்கான ஒருசில ஆயுர்வேத மருந்துகள் ஆயுர்வேதம் மற்றும் சித்த வைத்தியத்திலும் இருப்பதால் அவை தரப்படுகின்றன.

கர்ப்ப காலக் கோளாறுகள் கருவுற்றிருக்கும் பெண்களுக்கு இரண்டாம் மாதத்தில் குமட்டலும் வாந்தியும் இருப்பது பொதுவாகவே சாதாரணமானது தான். இது ஒரு வகையில் கருவுற்றிருப்பதற்கான அடையாளமாகும். ஆனால் ஒரு சிலருக்கு வாந்தி (சத்தி) அதிகமாக ஏற்பட்டுத் தொல்லை கொடுக்கும் அவர்களுக்கு 5 கிராம் கிராம்பை எடுத்து தட்டி ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு 200 மி.லி. தண்ணீர் விட்டு பாதியாகச் சுண்டுமளவுக்கு கஷாயமாக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு ஒரு வேளைக்கு ஒரு ஸ்பூன் வீதம் சிறிது சர்க்கரையும் சேர்த்து மூன்று வேளை அருந்தினால் வாந்தி நின்றுவிடும்.

நீடித்த குமட்டலும் வாந்தியும் இருக்குமானால் கிராம்பு 10 கிராம், நெல்லிக்காய் வற்றல் 5 கிராம் எடுத்து இரண்டையும் தட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் மூன்று பெரிய தேசிக்காய் பழத்தின் சாற்றைப் பிழிந்து அரை நாள் ஊற வைக்க வேண்டும். பிறகு சாற்றை வடித்து விட்டு அடியில் தங்கியுள்ள வண்டலை எடுத்து மை போல அரைத்து அடையாகத தட்டி நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு, குமட்டல் அல்லது வாந்தி ஏற்படும்போதெல்லாம் இந்த அடையில் சிறிது பிட்டு வாயில் போட்டு அடக்கிக் கொண்டால் போதும், இவ்வாறு ஒரு நாளைக்கு மூன்று நான்கு முறை கூடச் செய்யலாம். குமட்டல் குணமாகும், அதே சமயம் ஜீரண சக்தியை அளிக்கும்.

மற்றொரு வகையில், முன்னாள் இரவு ஒரு சுத்தமான பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர் விட்டு அதில் இரண்டு ஸ்பூன் சுண்ணாம்பைப் போட்டு நன்றாகக் கலக்கி மூடி வைத்து விட வேண்டும். மறுநாள் காலை சுண்ணாம்பு நீர் நெளிந்திருக்கும். அதில் ஒரு ஸ்பூன் நீரை எடுத்து ஒரு டம்ளர் காய்ச்சிய சோயா பாலில் கலந்து ஒரு வாரம் தொடர்ந்து அருந்த வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் போன்ற அனைத்துத் தொல்லைகளும் நீங்கும். வாயில் எச்சில் ஊறல் சில பெண்களுக்கு வாயில் எச்சில் ஊறுவது அதிகமாக இருக்கும். இது சரிவர சாப்பிடாததினால் ஏற்படும் ஒரு கோளாறு அது நீங்க வறுத்த காப்பிக் கொட்டையில் ஒன்று இரண்டை வாயிலிட்டு அடக்கி வைத்துக் கொண்டு அதில் ஊறும் நீரை உள்ளுக்கு அருந்தலாம். விரும்பினால் கடைசியில் காப்பிக் கொட்டையை மென்றும் சாப்பிடலாம்.

கால் வீக்கம் கர்ப்பமுற்ற பெண்களின் சிலருக்கு ஏழு மாதங்களுக்குப் பின் கால்களில் வீக்கம் தோன்றும். அத்துடன் தொடைகளும் மர்ம உறுப்பும் வீங்கித் தொல்லை கொடுப்பதுண்டு.

அப்போது எப்சம் உப்பு என்று அழைக்கப்படும் இந்துப்பையும் மஞ்சளையும் எடுத்து சேர்த்து சுடு நீரில் போட்டு கலக்கி கால்கள் இரண்டும் (ஒரு வாளியில்) உட்புறம் வைத்து நீவி விட்டு தடவிக் கொள்ளவும். Tree OIl இங்கு உள்ள பாடி ஷாப்பில் விற்கப்படுவதால், அதையும் வாங்கி உபயோகிக்க பலன் கிடைக்கும். கத்தாழையை வெட்டி பொடி செய்து வீங்கிய இடம் முழுவதும் படுக்கப் போகும் முன் பூசி, மறுநாள் கழுவி விட இரவு நல்ல நித்திரையும் பெறலாம், நிவாரணமும் கிடைக்கும்.

அசதி - களைப்பு கருவுற்ற பெண்களில் ஒரு சிலருக்கு எப்பொழுதும் அசதியும் களைப்புமாக இருக்கும். எந்த வேலையிலும் மனம் செய்யாது, எப்பொழுதுமே படுத்துக் கொண்டே இருக்க விரும்புவார்கள்.

அதற்கு ஒரு வெள்ளைப் பூண்டை உரித்து, அதன் பற்களை நசுக்கி அத்துடன் ஒரு சுண்டு விரல் நீளமுள்ள மஞ்சளையும் உடைத்து இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்ட சிவக்க வறுத்து, இரண்டு தம்ளர் தண்ணீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி, கஷாயமாக்கி குடிநீர் போல தனியாகவோ, சர்க்கரை சேர்த்தோ கொஞ்சம் கொஞ்சமாக நான்கு ஐந்து வேளைகள் குடித்து வரலாம். இதனால் அனைத்து சோம்பலும் களைப்பும் நீங்கும்.

உதிரப் போக்கு கருவுற்ற காலத்தில் சாதாரணமாக உதிரப் பெருக்கு இருக்கக்கூடாது. அப்படி இருப்பின் அதிமதுரம், சீரகம் எடுத்து தட்டி இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு பாதியாகச் சுண்டக் கஷாயமாக்கி காய்ச்சி வடித்து ஒரு வேளைக்கு இரண்டு ஸ்பூன் வீதம் மூன்று வேளையாக மூன்று நாள் அருந்த உதிரப் போக்கு நிற்கும். அல்லது வல்லாரை, வெள்ளை வெங்காயம், சீரகம் வகைக்கு 25 கிராம் எடுத்து தட்டி இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் கஷாயமாக்கி முன்கூறியபடி அருந்தினால் போதும். உதிரம் நிற்கும். உதிரப் போக்கு ஏற்படும் காலங்களில் இத்தகைய மருந்து உட்கொள்ளும் நாட்களில் புளி, கடுகு, நல்லெண்ணெய் இன்றி பத்திய உணவு அருந்துதல் அவசியமாகும்.


Related

பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் 7718656594463217419

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item