பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்

பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் தொடர்ச்சி… சுகப் பிரசவம் கர்ப்பிணிகள் பிரசவத்தின் போது வேதனை ஏற்பட்டு மிகவும் கஷ்டப்படு...

பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்

தொடர்ச்சி…

சுகப் பிரசவம் கர்ப்பிணிகள் பிரசவத்தின் போது வேதனை ஏற்பட்டு மிகவும் கஷ்டப்படுவார்கள். அதிக வலி இல்லாது சுகப் பிரசவமாக முன்னேற்பாடாகச் சில இயற்கை மூலிகளைகளைக் கொடுக்கலாம். இதைப் பிரசவ காலத்திற்கும் ஒரு மாதத்திற்கு முன்பாகவே சாப்பிட ஆரம்பிக்கலாம். இதனால் எந்த வித கெடுதியும் ஏற்பட்டு விடாது. மூலிகைகள் என்றதும் அவை கனடாவில் கிடைப்பதில்லையே என்று நீங்கள் நினைக்கலாம். இங்குள்ள சில சீன மருந்துக்கடைகளில் இவை கிடைக்கின்றன. அதுபோன்றே ஒரு சில தமிழ்க் கடைகளிலும் கிடைக்கின்றன. நமது தாயகத்தில் ஒரு சில மூலிகைகள் மற்றும் கீரை, கிழங்கு வகைகள், துளசி, வேப்பிலை கத்தாழை, முருங்கை மரவேர்கள் போன்றவை எளிதில் கிடைக்கும். கனடாவில் அவை சாத்தியமில்லை, பயிரிடவும் முடியாது. எனினும் நமது வீட்டில் அன்றாடம் சமையலுக்கு உபயோகிக்கும் சில மளிகைப் பொருட்கள் இதை ஈடுசெய்ய முடியும் என்பதால் கூடுமான வரை அவற்றைப் பற்றிய தகவல்களையே இயற்கை மருத்துவ முறைக்கு ஏற்றவாறு உபயோகித்து தயாரிப்பதும் எளிதாகும்.

சிறிதளவு சீரகத்தை மைபோல் மிக்ஸியில் அரைத்து, கொட்டைப்பாக்கு அளவு எடுத்து வெண்ணெயில் கலந்து காலை மாலை இரு வேளையாக மூன்று நாள் சாப்பிட வேண்டும். அடுத்து மூன்று நாள் இடைவெளி விட்டு மீண்டும் மூன்று நாள் சாப்பிட வேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் இடைவெளி விட்டுப் பிரசவமாகும் வரை சாப்பிட்டு வர சுகப் பிரசவமாகும்.

ஆமணக்கு எண்ணெய் 20 கிராம், பிரண்டை 10 கிராம் எடுத்து, எண்ணெயில் பிரண்டையைத் தட்டிப் போட்டு சலசலப்பு சத்தம் அடங்கும் வரை காய்ச்சி வைத்துக் கொண்டு அந்த எண்ணெயை ஏழாம் மாதமும், ஒன்பதாம் மாதமும் ஒவ்வொரு முறை வீதம் ஒரு ஸ்பூன் உள்ளுக்கு அருந்தினால் போதும். சுகப்பிரசவம் எளிதாய் அமைந்துவிடும்.

பிரசவ வேதனை ஏற்படும் சமயம் கொஞ்சம் எடுத்து வறுத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு சுண்டக் காய்ச்சி, காயமாக தயாரித்து உள்ளுக்கு கொடுத்தால் போதும், சுகப்பிரசவமாகும்.

வலிப்பு ஒரு சில பெண்களுக்குப் பிரசவ காலம் நெருங்கும் போது வலிப்பு ஏற்படும். இதை கவனிக்காது விட்டால் தாய்க்கும் குழந்தைக்கும் பெரும் சிக்கல் ஏற்பட்டு பிரசவத்தில் பிரச்சனை ஏற்படக்கூடும்.

லவங்கப் பட்டையை நன்றாக இடித்துத் தூளாக்கி மெல்லிய துணியில் சலித்துக்கொள்ளவேண்டும். அதே அளவு வெங்காயத்தையும் பொறித்து அவ்வாறே தூளாக்கி சலித்துக் கொண்டு இரண்டையும் சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும். இந்தச் சூரணத்தை இரண்டு சிட்டிகை எடுத்து தேனில் குழைத்துக் கொடுத்தால் போதும். வலிப்பு நீங்கி விடும். வழக்கமாக வலிப்பு ஏற்படும் பெண்களுக்கு முன்னெச்சரிக்கையாக இந்தச் சூரணத்தை ஒரு நாளைக்கு மூன்று வேளையாகப் பத்து நாட்களுக்குத் தொடர்ந்து கொடுக்க வலிப்பு ஏற்படாது.

பிரசவித்தபின் ஏற்படும் தொல்லைகள் பிரசவித்த பிறகும் எச்சரிக்கையுடன் ஒரு தாய் கவனமாக இருக்க வேண்டும். சீதளம் ஏற்பட்டால் பல தொல்லைகளுக்கு ஆளாக நேரிட வாய்ப்புகள் உண்டு. அதனால் பிரசவித்த தாய்மார்களுக்கு ஆகாரத்துடன் அதிக அளவு வெள்ளைப் பூண்டை ரசம் அல்லது குழம்பு வைத்து கொடுத்து வர வேண்டும். வெள்ளைப் பூண்டைத தனியாக அரைத்து உள்ளுக்குக் கொடுப்பதை விட அப்பெண்ணுக்குக் கொடுக்கும் ஆகார வகைகளில் அதிகம் சேர்த்துக் கொடுத்தால் எந்த வித வியாதியும் வராது. மேலும் வாய்வு தொல்லையும் ஏற்படாது. தாய்க்கு மட்டுமின்றி, பால் குடிக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் இது நல்ல பலன்களைத் தரும். இருவருக்குமே எளிதில் சீரண சக்தியை அளிப்பதோடு இரத்தத்தையும் சுத்தப்படுத்தி, தாயின் பால் சுரப்புக்கும் மிகவும் நல்லதாகும்.

கருப்பையில் அழுக்கு பிரசவித்த பின் கருப்பையில் அழுக்கு நின்று விடுவது உண்டு. முள்ளுக் கீரைத்தண்டு, நாயுருவி, மூங்கில் இலை, வாழைச் சருகு இவற்றை வகைக்கு 25 கிராம் எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி, கஷாயமாக்கி, அதில் ஒரு நாளைக்கு இருவேளை வீதம் கால் டம்ளர் அளவுக்கு மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட கருப்பையில் தேங்கும் அசுத்தம் வெளியேறிச் சுத்தமடையும்.

கருப்பையில் ரணம், வலி பிரசவித்தபின் கருப்பை தன் அளவுக்குச் சுருங்கிவிட நேரும். அச்சமயத்தில் வலி ஏற்படும். இந்த வலி தொடர்ந்து இருப்பதில்லை. விட்டு விட்டு வரும். குழந்தை பிறந்து மூன்று மணி நேரத்திற்குள் பால் கொடுத்து விட்டால் இந்த வலி குறையும் . ஒரு சிலருக்கு குறையாது, வலியும் தாங்க முடியாததாக இருக்கும்.

சுக்கு, மிளகு, திப்பிலி, ஆலரிசி, லவங்கப்பத்திரி, லவங்கப்பட்டை இவற்றை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்து லேசாக வறுத்து இடித்து தூளாக்கி சலித்து வைத்துக் கொண்ட சூரணத்தில் இரண்டு ஸ்பூன் அளவு பனை வெல்லத்துடன் சேர்த்து, ஒரு நாளைக்கு மூன்று வேளை கொடுத்தால் போதும். அடி வயிறு வலி குணமாகும்.

கருப்பையில் ரணம் ஏற்பட்டு, அதனால் இரத்தப்பெருக்கு ஏற்படுவதும் உண்டு. அச்சமயத்தில் வில்வ இலையுடன் வெங்காயம் சேர்த்து இடித்துப் பிழிந்த சாற்றில் அதே அளவு விளக்கெண்ணையும் சேர்த்து, காய்ச்சி வடித்து அத்தைலத்தில் ஒரு ஸ்பூன் வீதம் ஒரு வாரம் தொடர்ந்து கொடுத்து வர, ரணம் ஆறும். இரத்தப் போக்கும் நிற்கும். ஒற்றைத் தலைவலி கூட பிரசவமான பிறகு ஒரு சிலருக்கு ஏற்படுவதுண்டு. அப்போது இஞ்சிச் சாற்றுடன் அதே அளவு நல்லெண்ணெயும் சேர்த்துக் காய்ச்சி, அந்த தைலத்தைத் தலைக்கு தடவி சீவி வரலாம். தலை வலி குணமாகும்.


Related

பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் 3606763155297002867

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item