சுவையான சைடு டிஷ் இதோ: பஞ்சாபி மலாய் பாலக் --சமையல் குறிப்புகள்
திரும்பத் திரும்பத் தொட்டுக் கொள்ள என்ன செய்வது என்பது இல்லத்தரசிகளுக்கு தினசரி ஏற்படும் பெரிய தலைவலியாகும். பஞ்சாபி மலாய் பாலக் என்ற இந்த...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_6614.html
திரும்பத் திரும்பத் தொட்டுக் கொள்ள என்ன செய்வது என்பது இல்லத்தரசிகளுக்கு தினசரி ஏற்படும் பெரிய தலைவலியாகும். பஞ்சாபி மலாய் பாலக் என்ற இந்த புதிய சைடு டிஷ்ஷை முயற்சி செய்து பாருங்களேன்:
தேவையான பொருட்கள் :
தோல் நீக்காத பச்சைப் பருப்பு - 100 கிராம்
பொடியாக நறுக்கிய பசலைக்கீரை - 3 கப் ( இது கிடைக்காவிட்டால் ஏதேனும் ஒரு கீரை )
இஞ்சி - சிறு துண்டு
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
புதிய தயிர் - 4 மேஜைக்கரண்டி
நெய் - 2 மேஜைக்கரண்டி
செய்முறை :
பச்சைப் பருப்பை நன்கு கழுவி அத்துடன் கீரை, இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள் பொடி எல்லாவற்றையும் கலந்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
வெந்ததும் லேசாக கலந்து கொள்ளவும்.
நெய்யைவிட்டு வெங்காயத்தை ஒரு நிமிடம் நன்கு வதக்கிய பின் மிளகாய்ப் பொடி போட்டு கூடுதலாக அரை நிமிடம் வதக்கவும்.
அதில் வெந்த பருப்பை விட்டு உப்பைப் போட்டு, ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
தயிரைக் கலக்கி அதில் சேர்க்கவும். தேவைப்பட்டால் அத்துடன் கொஞ்சம் நீரைச் சேர்க்கலாம். பருப்புக் கீரை கெட்டியாக இருக்கும்.
இதைச் சூடாக பரோட்டா, சப்பாத்திகளுக்குப் பரிமாறலாம்.
Post a Comment