மந்திரச்சொற்கள்.--அமுத மொழிகள்
மந்திரச்சொற்கள். 1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். ஒரு முஸ்லிமுக்கு ஏதாவது துன்பம் சம்பவித்தால் இன்னாலில்லாஹி வ இன்னா இல...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_4490.html
மந்திரச்சொற்கள்.
1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ஒரு முஸ்லிமுக்கு ஏதாவது துன்பம் சம்பவித்தால் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் எனக்கூறுமாறு இஸ்லாம் கற்றுத்தருகிரது. நம்மில் பெரும்பாலானோர் எவராவது வபாத்தாகிய செய்தி கேள்விப்பட்டால்தான் இன்னா லில்லாஹ் கூற வேன்டுமென நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. ஒரு முஸ்லிமுக்கு ஏதாவது இழப்பு, சோகம், துன்பம், துயரம், எந்த வகை இழப்பு ஏற்பட்டாலும் அவர் இன்னாலில்லாஹ் கூற வேண்டும். அவ்வாறு கூறினால் அந்த இழப்பை ஈடு செய்து அதை விடச் சிறந்ததொன்றை அல்லாஹ் தருவான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.
2 ஃபீ அமானில்லாஹ் (அல்லது) பல்லாஹுகைருன் ஹாபிலா
வஹுவ அர்ஹமுர்ராஹிமீன் நாம் வீட்டிலிருந்து வெளியேறும் போது அல்லாது வீட்டார்களை வெளியே அனுப்பி வைக்கும்போதும் ஃபீ அமானில்லாஹ் (அல்லாஹ்வின் பாதுகாவல்) போய் வாருங்கள் என்று சொல்லி அனுப்பி வைக்கவேண்டும். இதனால் வெளியே சென்றவர்கள் அல்லாஹ்வின் பாதுகாப்பால் வீடு திரும்பிவருகின்றார்கள். (அல்லது) பல்லாஹுகைருன் ஹாபிலா வஹுவ அர்ஹமுர் ராஹிமீன் (அல்லாஹ்வே சிறந்த பாதுகாவலன். அவன் பேரருளாளனுமாவான்) என்று சொல்லி அனுப்பி வைய்யுங்கள் அதன் பலன் மிகவும் அதிமாக உள்ளது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். .
3. லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் காணாமல் போனவர்கள் மற்றும் காணாமல் போன பொருட்கள் இவைகளை கிடைக்கவேண்டும் என்றால் லாஹவ்ல வலா குவ்பத்த இல்லா பில்லாஹ் என்று அதிகமாக ஓதினால் அவைகள் நிச்சயமாக கிடைத்துவிடும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். 4. லாஇலாஹ இல்லா அன்த்த சுப்ஹானக்க இன்னீகுன்து மினள்ளாலிமீன் ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டால், எந்த வகையிலும் அதிலிருந்து விடுபடமுடியாது என்று தெரிந்தால் லாஇலாஹ இல்லா அன்த்த சுப்ஹானக்க இன்னீகுன்துமினள்ளாலிமீன் என்ற சொற்களை அதிகம் அதிகமாக ஓதிக் கொண்டிருக்க வேண்டும். இயலாமை இல்லாதவனாகிய வல்ல ரஹ்மான் அந்த சிக்கலை நிச்சயமாக நீக்கிவிடுவான்.இந் வலிமை மிக்க சொற்களை நாம் ஓதி வந்தால் நிச்சயம் அல்லாஹ் காப்பாற்றுகின்றான் .
2 ஃபீ அமானில்லாஹ் (அல்லது) பல்லாஹுகைருன் ஹாபிலா
வஹுவ அர்ஹமுர்ராஹிமீன் நாம் வீட்டிலிருந்து வெளியேறும் போது அல்லாது வீட்டார்களை வெளியே அனுப்பி வைக்கும்போதும் ஃபீ அமானில்லாஹ் (அல்லாஹ்வின் பாதுகாவல்) போய் வாருங்கள் என்று சொல்லி அனுப்பி வைக்கவேண்டும். இதனால் வெளியே சென்றவர்கள் அல்லாஹ்வின் பாதுகாப்பால் வீடு திரும்பிவருகின்றார்கள். (அல்லது) பல்லாஹுகைருன் ஹாபிலா வஹுவ அர்ஹமுர் ராஹிமீன் (அல்லாஹ்வே சிறந்த பாதுகாவலன். அவன் பேரருளாளனுமாவான்) என்று சொல்லி அனுப்பி வைய்யுங்கள் அதன் பலன் மிகவும் அதிமாக உள்ளது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். .
3. லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் காணாமல் போனவர்கள் மற்றும் காணாமல் போன பொருட்கள் இவைகளை கிடைக்கவேண்டும் என்றால் லாஹவ்ல வலா குவ்பத்த இல்லா பில்லாஹ் என்று அதிகமாக ஓதினால் அவைகள் நிச்சயமாக கிடைத்துவிடும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். 4. லாஇலாஹ இல்லா அன்த்த சுப்ஹானக்க இன்னீகுன்து மினள்ளாலிமீன் ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டால், எந்த வகையிலும் அதிலிருந்து விடுபடமுடியாது என்று தெரிந்தால் லாஇலாஹ இல்லா அன்த்த சுப்ஹானக்க இன்னீகுன்துமினள்ளாலிமீன் என்ற சொற்களை அதிகம் அதிகமாக ஓதிக் கொண்டிருக்க வேண்டும். இயலாமை இல்லாதவனாகிய வல்ல ரஹ்மான் அந்த சிக்கலை நிச்சயமாக நீக்கிவிடுவான்.இந் வலிமை மிக்க சொற்களை நாம் ஓதி வந்தால் நிச்சயம் அல்லாஹ் காப்பாற்றுகின்றான் .
Post a Comment