சமையலரை ரகசியம்....டிப்ஸ்!
1. கசகசாவை ஈசியாக அரைக்க இளஞ்சூட்டில் லேசாக வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் திரித்து வைத்துக்கொண்டால் தேங்காயுடன் அரைக்க இலகுவாக இருக்கும்....
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_2482.html
1. கசகசாவை ஈசியாக அரைக்க இளஞ்சூட்டில் லேசாக வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் திரித்து வைத்துக்கொண்டால் தேங்காயுடன் அரைக்க இலகுவாக இருக்கும்.
2. சீரகம்,சோம்பு,மிளகு போன்றவற்றை வாங்கியவுடன் லேசாக வறுத்து ஆற வைத்து தட்டி வைத்தால் பூஞ்சனம் பிடிக்காமல் இருக்கும்.
3. முந்திரி ,பிஸ்தா,பாதாம் பருப்பு வகைகளையும் லேசாக வறுத்து ஆற வைத்து பாட்டிலில் போட்டு வைத்தால் வண்டு போன்றவை வராது. நெய்யில் வறுத்து போடும் போது லேசாக வறுத்தாலே போதும்.பாதாம்,பிஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு சில நிமிடத்தில் தோல் உறித்து விடலாம்.
4. குளிர் காலம் முடிந்து கொண்டு வருவதால் அரிசி,மாவு, பருப்பு வகைகள்,மசாலா சாமான்களை சரிபார்த்து வைப்பது நல்லது.வண்டு இருந்தால் வெயிலில் உலர்த்தி வண்டு அதிகம் வருவதை தவிர்க்கலாம்.இவைகளை பத்திரப்படுத்தும் போது காய்ந்த மிளகாய் வற்றல் உடன் போட்டு வைப்பது வண்டு வருவதை தடுக்கும்.
5. ரவை,சேமியா வறுத்து வைத்தால் சமைக்கும் போது இலகுவாகவும்,நீண்ட நாள் வைத்தாலும் கெடாது.
6.காய்கறிகளை பாலிதீன் கவர்களில் போட்டு பிரிட்ஜில் வைப்பதாக இருந்தால் பாலிதீன் கவர்களில் ஊசி (அல்லது)கூரான ஆணி கொண்டு குத்தி துளைகள் போட்ட பின் காய்களை அதில் வைத்தால் பல நாட்கள் அழுகாமல் இருக்கும்.
Post a Comment