முருங்கைக் கீரை சூப்....நலம் தரும் சூப்...
முருங்கைக் கீரை சூப். நல்ல இளம் தளிராக உள்ள முருங்கைக் கீரையை எடுத்து 5 கப் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதில் சின்ன வெங்காயம் - 4...
https://pettagum.blogspot.com/2011/07/blog-post_2404.html
முருங்கைக் கீரை சூப்.
நல்ல இளம் தளிராக உள்ள முருங்கைக் கீரையை எடுத்து 5 கப் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதில்
சின்ன வெங்காயம் - 4
மிளகு - 10
சீரகம் - 5 கிராம்
பூண்டு - 2 பல் போட்டு கொதிக்க வைத்து சிறிது எண்ணெய் விட்டு தாளித்து சூப்பாக காலை உணவுக்குப் பின் மதிய உணவுக்கு முன் 2 கப் அருந்தி வந்தால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு முருங்கைக் கீரை சூப் மிகவும் நல்லது. உடலுக்குத் புத்துணர்ச்சியைத் தரும் மேலும் கண் பார்வை தெளிவாகும்.
நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். தாதுவை விருத்தி செய்யும். காலரா, மஞ்சள் காமாலை, வயிற்றுப் போக்கு குணமாகும்.
உண்ணா நோன்பு நாட்களில் முருங்கைக் கீரை சூப் குடிப்பது மிகவும் நல்லது.
--------------------------------------------------------------------------------------
Post a Comment