நபித்தோழர் தோழியர் அரிய தகவல்கள்-2
நாபித் தோழர், தோழியர் பற்றிய வினா விடைகள் 51. 600 பேரீத்த மரங்களைக் கொண்ட மிகப்பெரிய தமது தோட்டத்தையே அல்லாஹ்வுக்கு கடனாக (கர்ளாக) வழங்கியவ...
https://pettagum.blogspot.com/2011/07/2.html
நாபித் தோழர், தோழியர் பற்றிய வினா விடைகள்
51. 600 பேரீத்த மரங்களைக் கொண்ட மிகப்பெரிய தமது தோட்டத்தையே அல்லாஹ்வுக்கு கடனாக (கர்ளாக) வழங்கியவர் யார்?
அபுத்தஹ்தாஹ் (ரலி).
52. பத்ருப் போர்களக் கைதியான தனது தந்தை அல்லாஹ்வின் தூதரை புண்படுத்திய சுடுசொற்களைக் கேட்டு அவரை ஒரே வெட்டில் சாய்த்தார் ஒரு நபித் தோழர். அந்த வீரத் தோழர் யார்?
அபூ உபைதா ஆமிர் இப்னுல் ஜர்ராஹ் (ரலி).
53. ஸாஹிபு ஸிர்ரு ரஸூலில்லாஹ் (இறைதூதரின் அரகசியக் காப்பாளர்) எனக்கூறப்படுபவர் யார்?
ஹுதைபத்து இப்னுல் யமான் (ரலி).
54. ஸைய்யிதுஷ்ஷுஹதா ( தியாகிகள் தலைவர்) எனப் போற்றப்படுபவர் யார்?
ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலிப் (ரலி).
55. மக்கத்துக் குரைஷியர் கொடுமைப்படுத்தி வாட்டி வதக்கி தண்ணீர் கூட குடிக்கவிடாது ஒரு பெண்ணைத் தடுத்தனர். அப்போது அல்லாஹ் விண்ணிலிருந்து தண்ணீரை இறக்கினான்.அந்த மாண்புக்குரிய பெண்மணி யார்?
உம்மு ஷரீக் அல் அஸதிய்யத்துல் அன்ஸாரிய்யா (ரலி). இவரே பெண்களிடையே இரகசியமாக இஸலாமியப்பிரச்சாரம் செய்தவர்.
56. தமது இனிய குரலால் குர்ஆன் ஓதும்போது வானவர்கள் ஒளிவிளக்குகளாகப் பிரகாசித்து காது குளிரக்கேட்டு மகிழ்ந்தனர். அந்த நபித் தோழர் யார்?
உஸைத் இப்னு குளைர் (ரலி) என்னும் அன்ஸாரித் தோழர்.
57. ஹலால்,ஹராம் பற்றிய சட்டங்களை அதிகம் அறிந்த அறிஞர் யார்?
முஆத் இப்னு ஜபல் (ரலி).
58. வெளிப்டையாகவே மக்கத்துக் குரைஷிகளிடம் தாம் ஹிஜ்ரத் போவதாக உரத்துக் கூறிவிட்டு வெளியேறினார் ஒரு தோழர். அவரைத் தடுத்து நிறுத்த எவருக்கும் திராணி இருக்கவில்லை.அந்த மாபெரும் நபித் தோழர் யார்?
அரபு உலகத்தையே நடுங்க வைத்த மாவீரர் உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள்.
59. ஸைபுல்லாஹ் (அல்லாஹ்வின் வாள்) என முஃத்தா போரின் போது அறிவிக்கப்பட்ட மாபெரும் தளபதி யார்?
காலித் இப்னுல் வலீத் (ரலி).
60. உமர் (ரலி) அவர்கள் ‘ஃபாரூக்’ என ஏன் அழைக்கப்பட்டார்கள்?
சத்தியத்தையும் அசத்iதியத்தையும் பிரித்துத் தெளிவு படுத்தியதால்.
61. ஹுதைபிய்யாவில் நபி(ஸல்) அவர்களிடம் இருமுறை பைஅத் (உறுதிப்பிரமாணம் செய்தவர் யார்?
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).
62. அமீனுல் உம்மத் ( சமுதாயத்தில் நம்பிக்கைக்குரியவர்) எனப் புகழாரம் சூட்டப்பட்ட நபித் தோழர் யார்?
அபூ உபைதத்துல் ஜர்ராஹ் (ரலி).
63. நீண்ட ஆயுளும், செல்வப் பேறும், மக்கள் பாக்கியமும் அருள ஒரு நாயகத்தோழருக்காக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். ஆவ்வாறே அடையவும் செய்தவர் யார்?
அனஸ் இப்னு மாலிக் (ரலி).
64. ஒரு நாயகத் தோழரின் சாட்சி இருவர் சாட்சிகளுக்கு சமம் என பெருமைப்படுத்தப்பட்டவர் யார்?
குஸைமத் இப்னு தாபித் (ரலி).
65. கைபர் போரின் போது அல்லாஹ்வும் பொருந்திக் கொண்ட ஒருவரிடம் போர்க்கொடி வழங்கப்பட்டது. அந்தத் தளபதி யார்?
அலீ இப்னு அபீ தாலிப் (ரலி)
66. சுவர்க்கத்தின் எல்லா வாசல் வழியாகவும் செல்பவர் என பெருமானாரால் நற்செய்தி கூறப்பட்ட நபித் தோழர் யார்?
அபூ பக்ர் இப்னு அபீ குஹாஃபா (ரலி).
67. குர்ஆனில் பெயர் கூறப்பட்ட ஒரே நபித் தோழர் பெயர் என்ன?
ஸைத் ( இன்னு ஹாரிதா) (ரலி) அல் குர்ஆன்
68. கஸீலுல் மலாயிக்கத் ( வானவர்களால் குளிப்பாட்டப்பெற்றவர்) என அழைக்கப்படுபவர் யார்?
ஹன்ளலா இப்னு அபீ ஆமிர் (ரலி).
69. உஹதுப்போரில் பெருமானாரது பாதுகாப்பிற்காகப் போராடிய நாயத்தோழரின் கைகள் சல்லடையாக்கப்பட்டன. அவர் யார்?
தல்ஹத்து இப்னு உபைதுல்லாஹ் (ரலி)
70. ‘ரஜ்லுன் ஸாலிஹ்’ (நல்ல மனிதர்) எனப் புகழப்பட்ட நபித் தோழர் யார்?
அப்துல்லாஹ் இப்;னு உமர் (ரலி).
Post a Comment