வாழ்க்கை – 5 --கவிதைத்துளிகள்
வாழ்க்கை – 5 தர்க்கம் செய்யாதே.. அதீதமான வெளிச்சத்திலும் இருட்டு உண்டு.. அதிகமான இருட்டிலும் வெளிச்சம் உண்டு. இனிப்பின் - உச்ச எல்லை...
https://pettagum.blogspot.com/2012/05/5.html
வாழ்க்கை – 5
தர்க்கம் செய்யாதே..
அதீதமான
வெளிச்சத்திலும் இருட்டு உண்டு..
அதிகமான
இருட்டிலும் வெளிச்சம் உண்டு.
இனிப்பின் -
உச்ச எல்லை கசப்பு..!
கசப்பின்
விரிவாக்கமே இனிப்பு..
சில -
விஷயங்களில்
‘தெரியாது’
என்பதே உண்மை..
‘இல்லை’
என்பது தர்க்கம்..
தெரியாத ஒன்றை
தெரிந்தது போல நடிக்காதே..!
அறிவு -
இங்குதான் அஸ்தமிக்கிறது..!
தர்க்கம் -
எப்போதும்
குழப்பத்தில்தான் முடியும்..
தத்துவமோ -
உண்மையில் ஆரம்பிக்கும்
இறைவன்
தர்க்கப்பொருள் அல்ல..!
‘தத்துவக் கரு’
என்பதை உணர்.
பிரார்த்தனை..
இது – உன்
உள் மனசின் நிம்மதி..!
வெளி உலகின் வேஷமல்ல..
என்பதை புரிந்து கொள்..!
எதையும் கேள்..!
ஆனால் -
கேட்பது -
நிச்சயம் கிடைக்கும் என
முதலில் நம்பு
பிறகு கேள்.
தியானம்..
இது -
நினைப்பது மட்டுமல்ல..!
மறப்பதும்தான்..
முதலில் -
உலகை மற..
பிறகு -
இறைவனை நினை..!
அறிவு -
அறியப்படுவது.
ஞானமோ -
அருளப்படுவது..!
***
தர்க்கம் செய்யாதே..
அதீதமான
வெளிச்சத்திலும் இருட்டு உண்டு..
அதிகமான
இருட்டிலும் வெளிச்சம் உண்டு.
இனிப்பின் -
உச்ச எல்லை கசப்பு..!
கசப்பின்
விரிவாக்கமே இனிப்பு..
சில -
விஷயங்களில்
‘தெரியாது’
என்பதே உண்மை..
‘இல்லை’
என்பது தர்க்கம்..
தெரியாத ஒன்றை
தெரிந்தது போல நடிக்காதே..!
அறிவு -
இங்குதான் அஸ்தமிக்கிறது..!
தர்க்கம் -
எப்போதும்
குழப்பத்தில்தான் முடியும்..
தத்துவமோ -
உண்மையில் ஆரம்பிக்கும்
இறைவன்
தர்க்கப்பொருள் அல்ல..!
‘தத்துவக் கரு’
என்பதை உணர்.
பிரார்த்தனை..
இது – உன்
உள் மனசின் நிம்மதி..!
வெளி உலகின் வேஷமல்ல..
என்பதை புரிந்து கொள்..!
எதையும் கேள்..!
ஆனால் -
கேட்பது -
நிச்சயம் கிடைக்கும் என
முதலில் நம்பு
பிறகு கேள்.
தியானம்..
இது -
நினைப்பது மட்டுமல்ல..!
மறப்பதும்தான்..
முதலில் -
உலகை மற..
பிறகு -
இறைவனை நினை..!
அறிவு -
அறியப்படுவது.
ஞானமோ -
அருளப்படுவது..!
***
Post a Comment