சம்பள மழை பொழியும் சூப்பர் கோர்ஸ்கள் ! - உபயோகமான தகவல்கள்
டீச்சிங், லெதர், ஆர்க்கிடெக்சர்... சம்பள மழை பொழியும் சூப்பர் கோர்ஸ்கள் ! ப்ளஸ் டூ முடித்தவர்கள்... மேற்படிப்பு...
https://pettagum.blogspot.com/2012/05/blog-post_319.html
டீச்சிங், லெதர், ஆர்க்கிடெக்சர்...
சம்பள மழை பொழியும் சூப்பர் கோர்ஸ்கள் !
''பொறியியல் படிப்புகளுக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பது மறுப்பதற்கில்லை. ஆனால், மற்ற படிப்புகளுக்கும் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆசிரியப் பணிக்குத் தயார்படுத்தும் பி.எஸ்சி, பி.எட் - இன்டக்ரேட்டட் கோர்ஸ், லெதர் டெக்னாலஜி துறையில் நல்லதொரு எதிர்காலம் தரும் பி.எஸ்சி, ஃபுட்வேர் டிசைன், கட்டடத்துறையில் கை நிறைய சம்பளம் அள்ள வைக்கும் பி.ஆர்க், மருத்துவ அறிவியலில் எம்.பி.பி.எஸ் மட்டும் அல்லாமல் ஃபார்மசூட்டிக்கல், ஃபிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி, பேத்தாலாஜி, சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி என்று விரிந்திருக்கும் களம்... இவை பற்றி எல்லாம் பேசுவோம் இங்கு.
மத்திய, மாநில ஆசிரியர் பணி ரெடி!
லெதர் டெக்னாலஜியில் நல்ல வாய்ப்பு!
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது, உத்தரப்பிரதேசம் நொய்டாவில் உள்ள 'ஃபுட்வேர் டிசைன் அண்ட் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட்'. தோல் பொருட்கள் தயாரிப்புப் பற்றி இங்கு கற்றுத் தரப்படும் மூன்று வருட பி.எஸ்சி-யானது... ஃபுட்வேர் டிசைன், ஃபுட்வேர் டெக்னாலஜி, ஃபுட்வேர் மேனுஃபேக்சரிங், ரீடெய்ல் மேனேஜ்மென்ட் என பல பிரிவுகளில் வழங்கப்படுகிறது. ப்ளஸ் டூ-வில் எந்த குரூப் படித்தவர்களும் இப்படிப்பில் சேரலாம். இதற்காக பிரத்யேக நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். 'எஃப்.டி.டி.ஐ’ (FDDI-Footwear Design and Development Institute) என்று அழைக்கப்படும் அந்த நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்களை மே மாத இறுதிக்குள் அனுப்பவேண்டும். தேர்வில் ஆங்கிலம், மேத்ஸ், ஜெனரல் சயின்ஸ், ஜெனரல் அவேர்னஸ் போன்ற பாடங்களில் இருந்து 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். இரண்டரை மணி நேரம் நடக்கும் இந்த நுழைவுத் தேர்வு... ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடக்கும். தகவல்களுக்கு: http://www.fddiindia.com. இக்கல்லூரியின் கிளை, சென்னை அருகேயுள்ள இருங்காட்டுக்கோட்டையிலும் இருக்கிறது.
கட்டடக்கலை கனவு!
இன்று, மெட்ரோ ரயில் புராஜெக்ட்டில் இருந்து, சர்வதேச விமான நிலையங்கள் கட்டுமானம் வரை அனைத்தும் கட்டட வடிவமைப்பாளர்களின் கைவண்ணம்தான். வீடுகள், மால்கள், அரசாங்க புராஜெக்ட்டுகள் என்று வரும்காலத்தில் இவர்களுக்கான தேவையும் மதிப்பும் அதிகரிக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதற்குத் தகுதிப்படுத்தும் நான்கு வருட பி.ஆர்க். படிப்பில் சேர்வதற்கு 'கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்சர்' (Council of Architecture) அமைப்பு நடத்தும் 'நாட்டா' (NATA - National Aptitude Test in Architecture) என்ற நுழைவுத்தேர்வில் தகுதி மதிப்பெண்களைப் பெற்றாக வேண்டும். பொறியியல் படிப்புக்கான தகுதிப் பாடங்களை ப்ளஸ் டூ-வில் படித்த மாணவர்கள், ரிசல்டுக்குக் கூட காத்திராமல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பி.ஆர்க். படிப்புகளை நடத்தும் பிரத்யேக ஆர்க்கிடெக்சர் கல்லூரிகளில் இதற்கான மையங்கள் உள்ளன. வசதியான நாளில் இந்தத் தேர்வை எழுதலாம்.
ஆன்லைன் தேர்வுக்கு 100, டிராயிங் தொடர்பான தேர்வுக்கு 100 என மொத்தம் 200 மதிப்பெண்களைக் கொண்ட 3 மணி தேர்வு இது. 80/200 பெறுவது பி.ஆர்க் சேர்வதற்கான தகுதி மதிப்பெண்ணாக வரையறுக்கப்பட்டுள்ளது. சிறப்பான கல்லூரிகளில் இடம் பிடிக்க 120-க்கு மேல் மதிப்பெண் பெறுவது நல்லது. தேர்வு முடிவுகளை நான்கு தினங்களில் பெற முடியும். இந்த நுழைவுத் தேர்வை, மூன்று தடவை எழுதி, ஆவ்ரேஜ் மதிப்பெண்களை தகுதியாகக் கொண்டு, முன்னணி கல்லூரியில் இடம் பிடிப்பவர்களும் உண்டு.
தகவல்களுக்கு: http://www.nata.in/www/default.aspx
நல்ல கல்லூரியில் இடம் பிடித்துவிட்டால், வளமான எதிர்காலம் ரிசர்வ்டு!
வாழ்த்துக்கள்!''
Post a Comment