என் கனவினில் வந்தவன் -- கவிதைத்துளிகள்
என் கனவினில் வந்தவன் என் கனவினில் கவியாக வந்தாய் என் நினைப்பினை இனிப்பாக்கித் தந்தாய் வான் வெளியிலே நிலவாக வந்தாய் தேன் து...
https://pettagum.blogspot.com/2012/05/blog-post_9397.html
என் கனவினில் வந்தவன்
என் கனவினில் கவியாக வந்தாய்
என் நினைப்பினை இனிப்பாக்கித் தந்தாய்
என் நினைப்பினை இனிப்பாக்கித் தந்தாய்
வான் வெளியிலே நிலவாக வந்தாய்
தேன் துளியதன் சுவையொன்று தந்தாய்
தேன் துளியதன் சுவையொன்று தந்தாய்
என் மடியினில் துயில் கொள்ள வந்தாய்
உன் மொழியினில் தேன் கலந்து தந்தாய்
உன் மொழியினில் தேன் கலந்து தந்தாய்
மா மனிதனாக என் மனதை கவர்ந்தாய்
பூ மனத்தை வீசி என்னை கவர்ந்து இழுத்தாய்
பூ மனத்தை வீசி என்னை கவர்ந்து இழுத்தாய்
சாய்ந்த என்னை தோளில் தாங்கி அணைத்தாய்
காய்த்து கனிந்து சுவைக்க இசைய பறித்தாய்
காய்த்து கனிந்து சுவைக்க இசைய பறித்தாய்
பூத்துக் குலுங்கும் பூவும் காதல் கொள்ளும்
சேர்த்து அணைக்க பூவை உள்ளம் துள்ளும்
சேர்த்து அணைக்க பூவை உள்ளம் துள்ளும்
விழிகள் பேசும் கதைகள் கோடி கண்ணா
துளிகள் சேர்ந்து வெள்ளமாகும் மன்னா
துளிகள் சேர்ந்து வெள்ளமாகும் மன்னா
இளம் பிறையுமங்கு பௌர்ணமியாய் மாறும்
நம் இளமை அங்கு ஊஞ்சல் கட்டி ஆடும்
நம் இளமை அங்கு ஊஞ்சல் கட்டி ஆடும்
Post a Comment