நோயாளிகளும் தொழ வேண்டும் --அமுத மொழிகள்
""எனக்கு நோய் வந்து விட்டது. அசதியாக இருக்கிறது, என்னால் தொழ முடியவில்லை,'' என்று யாரும் சொல்லக் கூ...
https://pettagum.blogspot.com/2012/05/blog-post_25.html
""எனக்கு நோய் வந்து விட்டது. அசதியாக இருக்கிறது, என்னால் தொழ
முடியவில்லை,'' என்று யாரும் சொல்லக் கூடாது. அதுபோல, நோயாளியைப் பார்க்கச்
செல்பவர்களும் அவரிடம் தொழும்படி அறிவுறுத்த வேண்டும்.
நோயாளிகள் குறித்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்லும் கருத்தைக் கேளுங்கள்.
*உங்கள் நோய்களுக்கு பரிகாரம் தேடுங்கள். நிச்சயமாக, நோயைக் கொடுத்தவன் அதனை நீக்குவதற்கு மருந்தையும் கொடுக்கின்றான். மருந்தை அவன் படைத்து தயாராக வைத்துள்ளான்.
* நோய் என்பது இறைவனின் சோதனையாகும். அதனைக் கொண்டு அடியார்களை பரிசுத்தப்படுத்துகின்றான்.
* ஒருவன் நோயாளியாகி விட்டால், நற்செயலை பதிவு செய்யும் வானவருக்கு, "இவன் முன்பு சுகமாக இருக்கும்போது செய்த நற்செயல்களின் நன்மைகள் இப்போதும் கிடைத்துக் கொண்டிருக்கட்டும்' என்று இறைவனின் கட்டளை பிறக்கும்.
* எவரேனும் ஒருவர், நோயாளியை சந்திக்கச் செல்வாராயின், ஒரு அழைப்பாளர் வானத்தில் இருந்து குரல் கொடுப்பார். ""நீர் நல்லவர், உமது நடையும் நல்லது, நீர் சொர்க்கபதியில் ஒரு வீட்டைச் சம்பாதித்துக் கொண்டீர்.
* நோயாளியிடம் நீர் செல்வீரானால்,அவரிடம் துஆ (பிரார்த்தனை) செய்ய வேண்டுவீர். நோயாளிகளுடைய துஆ வானவர்களுடைய துஆவைப் போன்றதாகும்.
*மது அருந்துபவர்கள் நோயாளியாகி விட்டால் அவர்களை நலம் விசாரிக்க செல்லாதீர்கள். நாயகம் அவர்களின் இந்தக் கருத்துக்களை ஏற்று, நோய் வந்த காலத்திலும் துஆ செய்து நலம் பெறுவோம்.
நோயாளிகள் குறித்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்லும் கருத்தைக் கேளுங்கள்.
*உங்கள் நோய்களுக்கு பரிகாரம் தேடுங்கள். நிச்சயமாக, நோயைக் கொடுத்தவன் அதனை நீக்குவதற்கு மருந்தையும் கொடுக்கின்றான். மருந்தை அவன் படைத்து தயாராக வைத்துள்ளான்.
* நோய் என்பது இறைவனின் சோதனையாகும். அதனைக் கொண்டு அடியார்களை பரிசுத்தப்படுத்துகின்றான்.
* ஒருவன் நோயாளியாகி விட்டால், நற்செயலை பதிவு செய்யும் வானவருக்கு, "இவன் முன்பு சுகமாக இருக்கும்போது செய்த நற்செயல்களின் நன்மைகள் இப்போதும் கிடைத்துக் கொண்டிருக்கட்டும்' என்று இறைவனின் கட்டளை பிறக்கும்.
* எவரேனும் ஒருவர், நோயாளியை சந்திக்கச் செல்வாராயின், ஒரு அழைப்பாளர் வானத்தில் இருந்து குரல் கொடுப்பார். ""நீர் நல்லவர், உமது நடையும் நல்லது, நீர் சொர்க்கபதியில் ஒரு வீட்டைச் சம்பாதித்துக் கொண்டீர்.
* நோயாளியிடம் நீர் செல்வீரானால்,அவரிடம் துஆ (பிரார்த்தனை) செய்ய வேண்டுவீர். நோயாளிகளுடைய துஆ வானவர்களுடைய துஆவைப் போன்றதாகும்.
*மது அருந்துபவர்கள் நோயாளியாகி விட்டால் அவர்களை நலம் விசாரிக்க செல்லாதீர்கள். நாயகம் அவர்களின் இந்தக் கருத்துக்களை ஏற்று, நோய் வந்த காலத்திலும் துஆ செய்து நலம் பெறுவோம்.
Post a Comment