மன அழுத்த மேலாண்மை – 1 -- ஹெல்த் ஸ்பெஷல்

மன அழுத்த மேலாண்மை – 1 - டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக்கல்லூரி,கோவை) - கோடி ...

மன அழுத்த மேலாண்மை – 1
- டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக்கல்லூரி,கோவை) -
டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக்கல்லூரி,கோவைபிரச்சனையை எதிர் கொண்டு அதை உண்டு இல்லை என்றாக்கி விடுவோம்.கோடி கோடியார் பணத்தைக் கொட்டி வியாபாரம் செய்யும் பெரும் வியாபாரியோ, அல்லது மரம் ஏறிப் பிழைக்கும் மிகச் சாதாரண தொழிலாளியோ அல்லது இவ்விருவருக்கும் இடைப்பட்ட நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த ஒருவரோ, யாராக இருந்தாலும் செல்போன் இல்லாமல் இனி அன்றாட வாழ்க்கையை வாழ முடியுமா? கிரைண்டர், மிக்ஸி, வாஷிங்மெசின் போன்ற வீட்டு உபகரணங்கள் இல்லாமல் ஓர் குடும்பத்தலைவியால் இனி குடித்தனம் நடத்த முடியுமா? கவலைகள் இல்லாமல் இக்காலத்தில் இடும்பத்தலைவர் ஒருவரால் காலந்தள்ள முடியுமா? இவையாவும் இனி முடியாது. அப்படியே முடிந்தாலும் அடுத்தவர் உங்களை விடமாட்டார். இவைகளைப் போல, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியும் தகவல் தொடர்பு வளர்ச்சியும், மக்களிடம் பரஸ்பர உறவை பராமரிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ள இக்காலத்தில் மன அழுத்தம் இல்லாமல் மனிதர்களால் இனி வாழ முடியாது. மனிதர்கள் ஒவ்வொரு நிமிடமும் மன அழுத்தம் ஏற்படுத்தும் விஷயங்களைத் தேடிப் போய் கொண்டு இருக்கிறார்கள். இல்லையேல் உங்களுக்கு மன அழுத்தம் தரும் ஏராளமான விஷயங்களோடு உங்கள் உறவினர்களும் நண்பர்களும் உங்களை தேடி வந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த உலகத்தில் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களோடு நீங்கள் வாழ வேண்டும் என்றால், அறிவியல் வளர்ச்சியினாலும் தொழில் நுட்ப வளர்ச்சியினாலும் ஏற்பட்டுள்ள வாழ்க்கை வசதிகளை நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்கு ஓர் விலை கொடுத்தே ஆக வேண்டும். அந்த விலையே மன அழுத்தம்.
பிரச்சனையை எதிர் கொண்டு அதை உண்டு இல்லை என்றாக்கி விடுவோம்.கவலைகள் இல்லாமல் வாழ்வதெப்படி என்ற தலைப்பில் ஓர் பயிற்சி நடத்தப்பட்டது. நிறைய பேர் அதில் கலந்து கொண்டார்கள். அப்பயிற்சியை நடத்திய உளவியல் அறிஞர் “கவலை இல்லாமல் வாழ்வதெப்படி என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு நிறையப் பேர் இங்கே கூடியிருக்கிறீர்கள். உண்மையில் கவலை இல்லாமல் வாழ்வது சாத்தியமில்லாதது. எனவே கவலையோடு சந்தோஷமாக வாழ்வதெப்படி என்றே நான் கற்றுக் கொடுக்கப் போகிறேன்” என்று கூறி பயிற்சியை நடத்தினார். அதுபோல மன அழுத்தம் இல்லாமல் வாழ முயற்சி செய்வதை விட, மன அழுத்தத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்று கற்றுக்கொள்வதே புத்திசாலித்தனம் ஆகும்.
நம் அனைவரிடமும் ஓரளவு பணம் இருக்கும். உங்களிடம் 500 ரூபாய் இருக்கும் போது 5 ரூபாய்க்கு செலவு வந்தால் என்ன பிரச்சனை இருக்கப் போகிறது? சாதாரணமாக அந்த செலவை சமாளித்து விடலாம். ஆனால் 50 ரூபாய் இருக்கும் போது 5000 ரூபாய் அளவுக்கு செலவு வந்தால் உங்களால் எப்படி சமாளிக்க முடியும்?
அதைப் போலவே, நம் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட அளவு உடல், மன சக்தி உள்ளது. சாதாரண, நம் சக்திக்கு உட்பட்ட செயள்களை நாம் செய்யும் போது பிரச்சனை ஏதுமில்லை. ஆனால் தீர்க்க முடியாத பிரச்சனை ஒன்றை தீர்க்க முயலும் போது அல்லது செய்ய முடியாத செயல் ஒன்றை செய்து முடிக்க முயலும் போது நாம் நம் உடல், மன சக்தியை மீறி செயல்படுகிறோம் என்று அர்த்தம். இதுபோல நம் உடல், மன சக்திக்கு மீறிய விஷயம் ஒன்றை சமாளிக்க முயலும்போது நம் மனதில் ஏற்படும் தவிப்பு அல்லது பய உணர்வே மன அழுத்தம் எனப்படும்.***
பிரச்சனையை எதிர் கொண்டு அதை உண்டு இல்லை என்றாக்கி விடுவோம்.மன அழுத்ததை நல்ல மன அழுத்தம், தீய மன அழுத்தம் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். சைக்கிள் டயரில் ஓரளவுக்கு காற்று இருந்தால் தான் சைக்கிள் இலகுவாக ஓடும். காற்றழுத்தம் குறைவாக இருந்தால் சைக்கிள் ஓடுவது கடினம். காற்றழுத்தம் அளவுக்கு மீறினால் டயர் வெடித்து விடும். அதைப் போல மிதமான மன அழுத்தம் நமக்குத் தேவையே, உதாரணமாக உங்கள் மனைவி உங்களிடம் உள்ள கெட்ட விஷயங்களை எடுத்து சொல்லும் போது உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம். ஆனால் அது நல்ல மாற்றத்துக்கான அறிகுறி. விரைவிலேயே அந்த கெட்ட விஷயங்களை விட்டு வெளிவர முயற்சி செய்து வெற்றியும் பெறுவீர்கள். பெரிய காரியம் ஒன்றை முடிக்க வேண்டி ஒருவரிடம் உதவிகள் கேட்டு செல்கிறீர்கள் அப்போது உங்களுக்கு மனப் பதட்டமும், மன அழுத்தமும் ஏற்படும். ஆனால் இம்மன அழுத்தம் உங்களை செயல் வீரராக்கும்.
பிரச்சனையை எதிர் கொண்டு அதை உண்டு இல்லை என்றாக்கி விடுவோம்.மன அழுத்தம் சிறிதளவு கூட இல்லையென்றால் யாராலும் எந்தக்காரியத்தையும் செய்து முடிக்க முடியாது. தேர்வு வருகின்றது என கேள்விப்பட்டவுடன் மன அழுத்தத்திற்கு உட்படாத மாணவன் உருப்படியாக படித்து தேர்வில் வெற்றி பெற மாட்டான். ஓரளவுக்கு மன அழுத்தம் கொள்ளும் மாணவர்களே சிரத்தையுடன் படித்து தேர்வில் வெற்றி பெறுவார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில் ஏற்படும் நல்ல மன அழுத்தம் நம்மை கச்சிதமாக காரியத்தை முடிக்கத் தூண்டும். மேலும் நல்ல மன அழுத்தம் நம் உடலில் பல்வேறு மாற்றங்களை உண்டாக்கி நம்மை செயல்புரிய வைக்கிறது. முடிக்க வேண்டிய காரியத்தை நினைத்து சிறிதளவு பயம் கொள்ளச் செய்கிறது.
அளவுக்கதிகமான கெட்ட மன அழுத்தம் நம்மை நிலைகுலையச் செய்வது போல, அளவுக்கு அதிகமான நல்ல மன அழுத்தம் நம்மை சிறப்பாக செயல்புரிய செய்கிறது. நாம் அனைவரும் மன அழுத்தத்தின் கெட்ட முகத்தைத் தான் காண்கிறோம். அதற்கு இன்னொரு நல்ல முகமும் உண்டு.
பாம்பின் விஷம் கூட மருந்துக்குப் பயன்படுவது போல மன அழுத்தமும் நமக்கு நன்மை புரியும். எனவே எந்த ஒரு சூழ்நிலையிலும் ஓரளவுக்கு ஏற்படும் மன அழுத்தம் நன்மைக்கே என்பதை மனதில் கொள்ள வேண்டும்.***
நாய் ஒன்று பூனையைத் துரத்துகிறது. பூனையோ நாயிடமிருந்து தப்பிப்பதற்காக தன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடுகிறது. இறுதியாக ஓர் அறையின் மூலையொன்றில் பூனை மாட்டிக்கொள்கிறது. அதற்கு மேல் ஓட வழியில்லை. அப்போது பூனை என்ன செய்யும் என்று கவனித்து இருக்கிறீர்களா?
பூனையின் கண்மணிப்பாவை விரிந்து பார்வை கூர்மையாகும். அமுங்கி இருக்கும் கால் நகங்கள் நாயை கீருவதற்கு வசதியாக வலிமை பெறும். பூனையின் உடலிலுள்ள மயிர்கால்கள் குத்திட்டு நிற்கும். கூறிய பற்களை காண்பித்து சத்தத்துடன் நாயைக் கடிக்க பூனை தயாராகிவிடும். இறுதிப் போரட்டத்தில் சிறிய பூனை வலிமையான நாயையே கொண்று விடக்கூடிய வாய்ப்பும் உள்ளது.
நாயைப் போன்ற மன அழுத்தம் நம்மை தாக்கும்போது நாமும் பூனையைப் போலவே ஒன்று பிரச்சனையைக் கண்டு ஓடி ஒளிவோம் அல்லது பிரச்சனையை எதிர் கொண்டு அதை உண்டு இல்லை என்றாக்கி விடுவோம்.
இவ்வாறு நாம் நடந்து கொள்வதற்கு போராடு-அல்லது-புறங்காட்டு வினை (Fight-or-Flight response) என்று பெயர். இந்த வினை கற்காலத்திலிருந்தே மனிதர்களிடத்தில் காணப்படுகிறது. அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்று வருந்திக் கொண்டிருந்த மனிதன் சிங்கதைக் கண்டதும் அதையே அடித்து உணவாகப் பயன்படுத்திக் கொண்டான். சிங்கத்தை அடிக்கும் அளவுக்கு மனபலமும் உடல் பலமும் இல்லாத மனிதன் சிங்கத்திற்கு இரையாகிப் போனான். எனவே ஒருவன் சிஙகத்தை உணவாக்கிக் கொண்டதும், சிங்கத்திற்கு உணவாகிப் போனதும் எவ்வளவு வேகமாக போராடு-அல்லது-புறங்காட்டு வினையை ஒருவன் வெளிப்படுத்துகிறான் என்பதைப் பொறுத்தே அமைந்தது. அதைப் போல இந்த நவீன உலகில் நம்மை துரத்திவரும் மனஅழுத்தம் ஏற்படுத்தும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வெல்வதும், பயம் கொண்டு விலகி ஓடுவதும் நம்முடைய போரடும் அல்லது புறங்காட்டும் வினையைப் பொறுத்தே அமைகிறது. அதுவே நமக்கு ஏற்படும் மன அழுத்தத்தையும் தீர்மானிக்கிறது.***

Related

ஹெல்த் ஸ்பெஷல் 6736155318371357233

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item