நபிகளாரின் பொன்மொழிகள் ..அமுத மொழிகள்
நபிகளாரின் பொன்மொழிகள் இஸ்லாம் - வெண்ணிற ஆடையே சிறந்தது - நபிகளாரின் பொன்மொழிகள் * ஒரு ம...
இஸ்லாம் - வெண்ணிற ஆடையே சிறந்தது - நபிகளாரின் பொன்மொழிகள்
* ஒரு முஸ்லிமைத் துன்புறுத்தியவன் என்னைத் துன்புறுத்தியவனாவான். என்னைத் துன்புறுத்தியவன் இறைவனைத் துன்புறுத்தியவனாவான். அந்நிய மதத்தினரை துன்புறுத்தியவன் என்னை (முஹம்மதை) துன்புறுத்தியவனாவான்.
* திருமணம் செய்ய வசதியிருந்தும் திருமணம் செய்யாதவன் என்னைச் சார்ந்தவன் இல்லை.
* பெற்றோரைக் கொடுமைப்படுத்தியவர் எதுநாள் வரை என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லையோ, அதுநாள் வரை அவர் பாவிகளின் கூட்டத்திலேயே சேர்ந்திருப்பார்.
* வெண்மையான ஆடைகளை அணியுங்கள். வெண்மையான ஆடை சிறந்ததாகும். அதனை மரணித்தவர்களுக்கு கபன் ஆடையாக அணிவியுங்கள்.
* சொர்க்கமும் நரகமும் உங்கள் பெற்றோர்களாகும். அவர்களுக்கு நல்லதைச் செய்தால் சொர்க்கத்தின் வாசலை அல்லாஹ் திறந்து விடுகிறான். நோவினைச் செய்தால் நரகம் தான் கிடைக்கும்.
* ஒருவன் தன் தந்தை மரணித்தபின் அவருடைய நண்பர்களுடன் உறவுகொள்வதே சிறந்த செயலாகும்.
* உங்கள் குழந்தைகளை முத்தமிடுங்கள். ஒவ்வொரு முத்தத்திற்கும் சொர்க்கத்தில் பதவி உண்டு.
* உங்கள் குழந்தைகளை சங்கைப்படுத்துங்கள். குழந்தைகளைச் சங்கைப்படுத்துவது ஒரு வணக்கம்.
* ஒருவன் தனது பிள்ளைகளுக்கு தனது சொத்தில் அவர்களுக்குரிய பங்கைக் கொடுக்கவில்லையானால், அவர்களை பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி விடக்கூடிய நிலையில் ஆக்கினால் தீர்ப்புநாளில் அல்லாஹ் சுவர்க்கத்தில் அவருக்குரிய பங்கை நஷ்டப்படுத்தி விடுவான்.
* வயது வந்த பெற்றோர்களில் (தாய் தந்தை இருவரில்) ஒருவர் இருந்து அவருக்கு (பிள்ளைகள்) செலவு செய்யவில்லையானால் அவர்கள் சொர்க்கம் நுழைய முடியாது.
* பெற்றோர்களுக்கு உதவி செய்யும் பிள்ளைகளுக்கு (எனது) வாழ்த்து <உண்டாகட்டும். அவருடைய வயதை அல்லாஹ் அதிகப் படுத்துவனாக. ஆமீன்.
2 comments
//ஒரு முஸ்லிமைத் துன்புறுத்தியவன் என்னைத் துன்புறுத்தியவனாவான். என்னைத் துன்புறுத்தியவன் இறைவனைத் துன்புறுத்தியவனாவான். அந்நிய மதத்தினரை துன்புறுத்தியவன் என்னை (முஹம்மதை) துன்புறுத்தியவனாவான்//
" இதற்கு பதில்ஒரு மனிதனை துன்புறுத்தியவன் என்னைத் துன்புறுத்தியவனாவான்." என்று சொல்லியிருக்கலாமே.
அப்புறம் comment பகுதியில் வரும் word verification தேவையா?
அன்பிற்கினிய நண்பர் அவர்களுக்கு அன்புடன் A.S. முஹம்மது அலி எழுதும் மின் மடல். எனது பெட்டகம் வலைப்பூவை தாங்கள் கண்ணுற்று தெரிவித்த கருத்துக்களுக்கு நன்றிகள் பல. புனித குர்ஆனில் உள்ள அரபி வார்த்தைகளின் படி மொழிபெயர்ப்பு சரியானதே, நாம் அதை சுருக்கிட உரிமையில்லையே. தங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் பல! அன்புடன் A.S. முஹம்மது அலி
Post a Comment