இமினேட் ஆனுட்டி இன்ஷூரன்ஸ் பாலிசி
பெற்றோர்களுக்கு... இந்த தீபாவளிக்கு அம்மாவுக்கு காஞ்சிபுரம் பட்டுப் புடவையை, அவங்களுக்குப் பிடித்த கலர்ல எடுத்துக் கொடுக்கணும் என்று சிலபேர...
https://pettagum.blogspot.com/2011/10/blog-post_3800.html
பெற்றோர்களுக்கு...
இந்த தீபாவளிக்கு அம்மாவுக்கு காஞ்சிபுரம் பட்டுப் புடவையை, அவங்களுக்குப் பிடித்த கலர்ல எடுத்துக் கொடுக்கணும் என்று சிலபேர் நினைத்துக் கொண்டிருப் பார்கள். இதேமாதிரி போன தீபாவளிக்கு எடுத்துக் கொடுத்த பட்டுப் புடவையோட நிலை என்ன ஆச்சுன்னு கொஞ்சம் யோசித்துப் பார்க்கணும். நாம பரிசா கொடுக்கிற பொருட்களைப் பயன் படுத்தாமல் பெட்டியில் வைத்துக்கொண்டால் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை.
பரிசு குடுக்கறவங்களுக்கு அந்த பரிசு கடைசி வரைக்கும் பயனுள்ளதா இருக்கணும்ங்கறது தான் முக்கியம். அன்புக்காகவும், பாசத் துக்காகவும் ஏங்குகிற வயதில் இருக்கும் பெற்றவர் களுக்கு கண்டிப்பாக காசு பணம் முக்கியமாக இருக்காது. இருந்தாலும், அவர்களோட எதிர்காலத் தேவைக்காக இந்த தீபாவளியில் இருந்து ஏதாவது ஒரு வங்கியில் மூத்த குடிமக்களுக்கான கணக்கு ஒன்றைத் தொடங்கி, ஒரு குறிப்பிட்ட தொகையை அதில் முதலீடு செய்து அதிலிருந்து ஒரு வருமானம் அவர்களுக்கு கிடைக்கும்படிச் செய்யலாம். ஹெல்த் மற்றும் லைஃப் இன்ஷூரன்ஸ் இல்லாத வர்களுக்கு இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொடுக்கலாம். இது அவர்களது வாழ்நாள் முழுக்க பாதுகாப்பானதாக இருக்கும்.
Post a Comment