'மடிநோயை எப்படி குணப்படுத்துவது?'' -நீங்கள் கேட்டவை

நீங்கள் கேட்டவை ''எனது தோட்டத்தில் நடவு செய்திருக்கும் வீரிய ரகத் தென்னை மரங்களில் குருத்தழுகல் நோய் அதிகமாகத் தாக்குகிறது. இதை ...

நீங்கள் கேட்டவை

''எனது தோட்டத்தில் நடவு செய்திருக்கும் வீரிய ரகத் தென்னை மரங்களில் குருத்தழுகல் நோய் அதிகமாகத் தாக்குகிறது. இதை இயற்கை முறையில் எப்படி கட்டுப்படுத்துவது?'

கே. கந்தசாமி, திண்டிவனம்.

இயற்கை விவசாய வல்லுநர் ஏங்கல்ஸ் ராஜா பதில் சொல்கிறார். ''குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் வேண்டும் என்றுதான் வீரிய ரகங்களைத் தேர்வு செய்கிறோம். ஆனால், அவற்றைத்தான் அதிகளவில் நோய்கள் தாக்குகின்றன என்பதை மறந்து விடுகிறோம். பெரும்பாலும் வீரிய ரகங்களின் தாய், தந்தைத் தேர்வில் கோளாறு இருப்பதுதான் அதிகளவிலான நோய்த் தாக்குதலுக்குக் காரணமாக இருக்கிறது.

நோய் வந்த பிறகு மருந்து கொடுப்பதைக் காட்டிலும் வருமுன்னே காப்பதுதான் சிறந்தது. வீரிய ரக தென்னங்கன்றுகளை நாற்றுப் பருவத்திலேயே கவனமாக வளர்க்க வேண்டும். கன்றுகள் திடமான வேர்களை விடும் வகையில் ஒவ்வொரு நாற்றுக்கும் ஒரு அடிக்கு மேல் இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

கன்றுகள் வளர்ந்த பிறகு, அவற்றை எடுத்து நடவு செய்யும்போது, ஊடுபயிராக வாழையையும் சேர்த்து நடவு செய்ய வேண்டும். இதனால் நோய்கள் தாக்குவது குறையும். அதேபோல சோற்றுக்கற்றாழை, தாழை... போன்ற செடிகளையும் நடவு செய்யலாம். இவை மருத்துவ குணத்தைக் கொண்டிருப்பதால், குருத்தழுகல், வேர்புழுத் தாக்குதல் போன்றவை தாக்காது.

குருத்தழுகல் நோய் வந்துவிட்டால், அதைத் தடுப்பதற்கும் இயற்கையில் வைத்தியம் இருக்கிறது. 5 கிலோ ஆட்டு எருவைத் தூளாக்கி, ஒரு லிட்டர் பஞ்சகவ்யாவில் கலந்து மரத்துக்கு இட்டு பாசனம் செய்ய வேண்டும். இது ஒரு மரத்துக்கான அளவு. இதை கொடுக்கும்போது உடனே மரம் பசுமைக் கட்டி வளர ஆரம்பிக்கும். மரம் பலமாகி விட்டால் நோய்கள் தாக்காது.

தென்னையைப் பொறுத்தவரை பாரம்பரிய ரகக் கன்றுகளை நடவு செய்வதுதான் நல்லது. என்பதை எப்போதும் மனதில் கொள்ளவும்.'

தொடர்புக்கு, அலைபேசி (செல்போன்): 94421-21473.

'கறவை மாடுகளுக்கு அடிக்கடி மடிநோய் வருகிறது. ஆங்கில மருந்துகள் நிறைய கொடுத்தும் குணப்படுத்த முடியவில்லை. இப்பிரச்னைக்கு பாரம்பரிய மருத்துவம் உண்டா?''

எஸ். செல்வராசன், வெங்கிகால்.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி, ஜெயம் பிராணிகள் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும், கௌரவப் பிராணி நல அலுவலருமான கே.வி. கோவிந்தராஜ் பதில் சொல்கிறார்.

''பொதுவாக மடிநோய் பிரச்னை கலப்பின மாடுகளுக்குத்தான் அதிகளவில் வருகிறது. இவற்றுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதுதான் காரணம். இந்நோய் தாக்கினால்... திடீரென பால் குறையும். சமயங்களில் பாலே வராமல் போய் விடும். மாடு சரியாக தீனி எடுக்காது. மாட்டுக்குக் காய்ச்சல் அடிக்கும். மடிப்பகுதி வீங்கி சூடாக இருக்கும்.

மடியைத் தொட்டால், வலி தாங்க முடியாமல் உதைக்கும். பால் நீர்த்துப் போய் ரத்தம் கலந்து வெளி வரும். இவையெல்லாம் மடிநோய்க்கான அறிகுறிகள்.

நோய் ஆரம்ப கட்டத்தில் உள்ள மாட்டுக்கு தினமும் இரண்டுவேளையும் கால் கிலோ அளவில் கொத்தமல்லி தழையைக் கொடுத்தால் சரியாகி விடும். நோய் கொஞ்சம் முற்றிய மாடுகளுக்கு, சோற்றுக்கற்றாழையின் சோறு-200 கிராம், மஞ்சள் தூள்-50 கிராம், சுண்ணாம்பு-10 கிராம் ஆகியவற்றை அரைத்து மடியில் தடவ வேண்டும். தடவுவதற்கு முன்பு பாலை நன்றாக கறந்துவிட்டு, வேப்பிலை போட்டுக் கொதிக்க வைத்த வெந்நீரால் மடியைக் கழுவ வேண்டும். மூன்று நாட்களுக்கு தினமும் இரண்டுவேளை இக்கலவையைத் தடவி வந்தால், நோய் குணமாகி விடும். இந்த வைத்திய முறையை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகமும் ஏற்று பின்பற்றவும் ஆரம்பித்துள்ளது.

பொதுவாக, பால் கறக்கும் முன்பு கைகளையும் மடிக்காம்புகளையும் வெதுவெதுப்பான நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். சுத்தமாக இருக்கும்போது நோய்த் தாக்குதல் குறைகிறது.''

தொடர்புக்கு, அலைபேசி (செல்போன்): 94425-41504.

'ஏரி, குளங்களில் இருந்து வண்டல் மண்ணை விவசாய நிலத்துக்காக எடுக்க,யாரிடம் அனுமதி பெற வேண்டும்?'

இரா. செல்லையன், பின்னையூர்.

தானம் தொண்டு நிறுவனத்தின், வயலகம் கண்மாய் அறக்கட்டளையின் முதன்மை நிர்வாகி, ஏ. குருநாதன் பதில் சொல்கிறார்.

''முன்பெல்லாம் ஏரி, குளம், குட்டை போன்றவை அந்தந்த கிராமங்களின் கட்டுப்பாட்டில் இருந்ததால், ஆண்டுக்கு ஒரு முறை ஊரிலுள்ள அனைவரும் வண்டல் மண்ணை எடுத்துக் கொள்வது வழக்கமாக இருந்தது. அதனால் நீர்நிலைகளும் தூர்ந்துப் போகாமல் இருந்தன. இப்போது, ஏரி, குளங்கள் போன்றவை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அனுமதி பெற்றுதான் எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் மனு கொடுக்க வேண்டும். விவசாயத் தேவைக்காகத்தான் என்பதை உறுதி செய்து கொண்டு அவர் அனுமதி வழங்குவார். இதற்குக் கட்டணம் கிடையாது. ஒரு அடி ஆழம் வரைதான் மண் எடுக்க வேண்டும்.

தற்போது நீர்நிலைகளில் ரசாயனக் கழிவுகளும் அதிக ளவில் கலப்பதால், மண் கெட்டுப்போக அதிகளவில் வாய்ப்பிருக்கிறது. அதனால் மண் எடுக்கும் முன்பு, பரிசோதனை செய்து கொள்வது நல்லது. வண்டல் மண் எடுக்க அனுமதி மறுத்தால், எங்கள் அமைப்பைத் தொடர்பு கொள்ளவும்''

தொடர்புக்கு, தொலைபேசி: 0452-2601673.


Related

விவசாயக்குறிப்புக்கள் 433485113690925294

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item