கொத்துக்கறி உருண்டைக் குழம்பு--சமையல் குறிப்பு
கொத்துக்கறி உருண்டைக் குழம்பு தேவையானவை கொத்துக்கறி - 1/4 கிலோ வத்தல் - 6 கொத்தமல்லி - 2 தேக்கரண்டி பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி வெ...

https://pettagum.blogspot.com/2011/08/blog-post_6967.html
கொத்துக்கறி உருண்டைக் குழம்பு
தேவையானவை
கொத்துக்கறி - 1/4 கிலோ
வத்தல் - 6
கொத்தமல்லி - 2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1 பெரியது
தேங்காய் - 1 மூடி
கசகசா - 1 தேக்கரண்டி
பட்டை - 1 அங்குலம்
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
முந்திரிப்பருப்பு - 6
புதினா - சிறிது
எலுமிச்சம் பழம் - அரை பழம்
செய்முறை
* கொத்தமல்லி, பெருஞ்சீரகம், வத்தல் ஆகியவற்றை இளம் வறுவலாக வறுத்துக்கொண்டு அரைக்க வேண்டும்.
* குக்கரில் ஒரு கரண்டி எண்ணெய்விட்டு கறியை தண்ணீரில்லாமல் வதக்கி உப்பு போட்டு உரலில் நன்றாக ஆட்ட வேண்டும்.
* பின் அரைத்த மசாலாவில் பாதியைப் போட்டு, ஒரு முட்டையையும் ஊற்றி கறிக்கலவையை நன்றாக கலந்து உருண்டை பிடித்து வைத்துக் கொள்ளவும்.
* சட்டியைக் காயவைத்து 2 கரண்டி எண்ணெய், 2 கரண்டி நெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு, புதினா, பெரிய வெங்காயம் போட்டு நன்றாக வதக்கி மீதி மசாலாவை, எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலில் கலந்து ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
* கொதிக்கும்போது மேற்படி உருண்டைகளை ஒன்வொன்றாகப் போடவும். குழம்பைக் கிண்டாமல் 2 கொதி கொதித்து எண்ணெய் தெளியவும் இறக்கவும். இப்போது எலுமிச்சம் பழச்சாறு பிழியவும்.
* உருண்டைகளை வடை மாதிரி எண்ணையில் சுட்டு எடுத்து, கொதிக்கும் குழம்பில் போட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்திருந்து இறக்கியும் இதனைத் தயார் செய்யலாம்.
Post a Comment