நபி மொழிகள்! பகைவரை நண்பராக்கும் வழி!

பகைவரை நண்பராக்கும் வழி ! இஸ்லாமிய பெருமக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, "அஸ்ஸலாமு அலைக்கும்' எனச் சொல்லி வணக்கம் சொல்வார...

பகைவரை நண்பராக்கும் வழி! இஸ்லாமிய பெருமக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, "அஸ்ஸலாமு அலைக்கும்' எனச் சொல்லி வணக்கம் சொல்வார்கள். இதன் பொருள், "அல்லாஹ்வின் அருள் உங்கள் மீது உண்டாகட்டும்' என்பதாகும். உலகம் பகை என்ற கட்டடத்தை பலமாக கட்டிக் கொண்டிருக்கிறது. ஒருவரது முன்னேற்றத்தை கண்டு, மற்றொருவருக்கு சகிக்கவில்லை. இதன் காரணமாக, போட்டி, பொறாமை அதிகரித்து விட்டது. இதை தவிர்க்க வேண்டும் என்கிறது இஸ்லாம். "அஸ்ஸலாமு அலைக்கும்' சொல்வது தான் இதற்கு ஒரே தீர்வாகும் ஆம்! பகை உணர்வுடன் நடந்து கொள்ளும் ஒருவரை பார்க்கும் போதெல் லாம் ஒருவர், தொடர்ந்து "அஸ்ஸலாமு அலைக்கும்' என்று சொல்லிக் கொண்டிருந்தால் அவரது மனம் மாறி விடும். அவர் பகையை மனதில் நினைக்காமல், அல்லாஹ்வின் அருளை நமக்காக வேண்டுகிறாரே என்ற எண்ணத்தில், நண்பராகி விடுவார். பகைவரையும் நண்பராக்கும் வார்த்தையே "அஸ்ஸலாமு அலைக்கும்'. நபிகள் நாயகம் இதுபற்றி கூறும் போது, "ஸலாத்தின் மூலம் இம்மை மறுமை நன்மைகளைக் காணலாம். மக்களிடையே அன்பு பரவும். எதிரிகள் தங்கள் பகையை மறந்து இணைவார்கள்,'' என்கிறார். ஒருவர் நபிகள்நாயகத்திடம், "இஸ்லாத்தில் சிறந்தது எது ?' என கேட்டார். அதற்கு நாயகம், ""பசித்தவருக்கு உணவளிப்பதும், தெரிந்தவராயினும், தெரியாதவராயினும் ஸலாம் சொல்வதும் ஆகும்,'' என்றார். நபி ஆதம் (அலை) அவர்களுக்கும், அவர்களது உம்மத்தினர்களுக்கும் அல்லாஹ் இதை கடøமாயாக்கி இருக்கிறான். நபி ஆதம் (அலை) அவர்களுக்கு, ஸலாம் சொல்லும் முறையையும் கற்றுக் கொடுத்துள்ளான். இதிலிருந்து ஸலாத்தின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளலாம். உறவுகளை நேசியுங்கள்! நபிகள் நாயகத்திடம் அவரது தோழர் ஒருவர், ""நாயகமே! எனக்கு உற்றார் உறவினர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் ஒற்றுமையாக இருக்க விரும்புகின்றேன். அவர்களோ என் உறவை வெட்டி விடுகின்றனர். நான் அவர்களுக்கு நன்மை செய்கின்றேன். அவர்கள் எனக்கு நேர்மாறானதைச் செய்கிறார்கள். நான் அவர்கள் விஷயத்தில் பொறுமையாக இருக்கிறேன். அவர்கள் அநியாயமாக நடக்கின்றனர்,'' என்றார். அதற்கு நாயகம், ""நீர் சொல்வது உண்மையானால், அவர்கள் கேவலம் அடைவார்கள். அவர்கள் உதாசீனப் படுத்தினாலும், எதுவரை நீர் அவர்களிடம் பொறுமை காட்டி, நன்மை செய்து வருவீரோ, அதுவரை அல்லாஹ்வின் உதவி உம்மீது இருந்து கொண்டே இருக்கும்,'' என்றார். உறவினர்களை நேசித்தும் அவர்கள் உதாசீனப்படுத் தினால், அவர்கள் தங்கள் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்கிறார்கள் என்பதே இதன் பொருள். உதவி என்று வந்து விட்டால்... ஒருமுறை இமாம் ஹூஸைன் (ரலி) அவர்களிடம் கஷ்டப்படும் ஒருவர் தன் நிலையைக் கூறி உதவி செய்யும்படி வேண்டினார். அப்போது இமாம், பள்ளிவாசலில் இஃதிகாபில் ( இறை தியானம்) இருந்தார். எனவே அவர், "இஃதிகாபில் இருப்பதால் வெளியே வர முடியவில்லை' என்றார். உடனே வந்தவர் அவரது சகோதரர், இமாம் ஹஸன் (ரலி) அவர்களிடம் சென்று உதவி கேட்டார். அவரும் இஃதிகாபில் இருந்தார். ஆனால், இமாம் ஹஸன் உடனே வந்தவருக்கு உதவுவதற்காக கிளம்பி விட்டார். வந்தவருக்கோ சந்தேகம். முன்னவர் இஃதிகாபிலிருந்து எழவில்லை. ஆனால், பின்னவர் வந்து விட்டார். இதற்கான காரணத்தை இமாம் ஹஸனிடமே கேட்டு விட்டார் அவர். அதற்கு இமாம் ஹஸன், ""யார் தன் சகோதர முஸ்லிமின் உதவிக்காக வெளியேறி அவருடைய தேவையை நிறைவேற்றி விட்டால், ஒரு ஹஜ்ஜூம், உம்ராவும் (இதுவும் ஒரு புனித யாத்திரை) செய்த நன்மை உண்டு. ஆனால், உதவி கிடைக்காவிட்டால், உம்ரா மட்டுமே செய்த நன்மை உண்டு. எனக்கு ஹஜ், உம்ரா இரண்டின் பயன் கிடைப்பதால் நான் வெளியேறி வந்தேன், '' என்றார். ""ஒரு முஸ்லிமின் தேவையை நிறைவேற்றுவதற்காக முயற்சி மேற்கொள்வது பத்து வருடங்கள் இஃதிகாப் இருப்பதை விட உயர்வானதாகும்,'' என்கிறார் நபிகள் நாயகம். எந்த நிலையிலும் பிறருக்கு உதவ வேண்டும் என்பதை இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது. உழைத்து சம்பாதியுங்கள் குடும்பத்தில் கஷ்டம் வந்துவிட்டது. கையில் இருந்த பணமெல்லாம் ஏதோ ஒருவழியில் இழக்கப்பட்டுவிட்டது. இந்த சூழ்நிலையில் சிலர் விரக்தியாகவும் உணர்ச்சி வசப்பட்டும், ""பிச்சை எடுத்தாவது என் குடும்பத்தைக் காப்பாற்றுவேன்,'' என்று சபதம் செய்வார்கள். இப்படி சபதம் செய்வதை இஸ்லாம் ஏற்கவில்லை. குடும்பத்தை காப்பாற்ற ஏதாவது ஒரு வேலை செய்து சம்பாதியுங்கள் என்கிறது இஸ்லாம். நல் வழியில் சேரும் பணம் குறைவாக இருந்தாலும், இருப்பதற்குள் வாழ்க்கையை நடத்துங்கள். ஏதோ ஒரு காரணத்தால் செல்வம் அனைத்தையும் இழந்தாலும் கூட, அடுத்து என்ன செய்வது என உடனடியாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். கூலி வேலை செய்தேனும் குடும்பத்தை காப்பாற்றியாக வேண்டும். ஆனால் எந்த சூழ்நிலையிலும், பிச்சை எடுத்து மட்டும் பணம் ஈட்டக்கூடாது. நபிகள் நாயகம் மக்களிடம், ""குடும்பத்தினரைக் காப்பாற்ற பிச்சை எடுக்காமல் உழைத்து பொருள் சம்பாதிப் பவர் ஒளிப்பிரகாசம் நிறைந்த முகத்துடன் மறுமையில் அல்லாஹ்வை சந்திப்பார்,'' என்கிறார். இனி "பிச்சை எடுத்தாவது குடும்பத்தைக் காப்பாற்றுவேன்' என்ற சொற்களையே மறந்து விடுங்கள். அதற்கு பதிலாக, ""எப்பாடுபட்டேனும் உழைத்து என் குடும்பத்தைக் காப்பாற்றுவேன்,'' என சொல்லுங்கள். உழைப்பை தான் இஸ்லாம் ஆதரிக்கிறது.

Related

அமுத மொழிகள் 5019989554436479947

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item