பிறருக்கு துன்பம் வந்தால் இரக்கப்படுங்கள் --பெட்டகம் சிந்தனை

அறிவிப்பாளர்: வாஸிலா(ரலி) அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ""உன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே! அ...

அறிவிப்பாளர்: வாஸிலா(ரலி) அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ""உன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே! அல்லாஹ் அவன் மீது கருணை புரிந்து (அந்தத் துன்பத்தைக் களைந்துவிடுவான்.) உன்னைத் துன்பத்தில் ஆழ்த்திவிடுவான்.'' (திர்மிதி) விளக்கம்: இரு மனிதர்களுக்கிடையே பகைமை ஏற்பட்டு, அவ்விருவரில் ஒருவருக்குத் துன்பம் வந்துவிட்டால் இன்னொருவர் மகிழ்ச்சி கொண்டாடுகிறார். இது இஸ்லாமிய மனப்பான்மைக்கு மாறானதாகும். ஓர் இறைநம்பிக்கையாளன் தன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழ்ச்சி கொண்டாடுவதில்லை. இருவருக்குமிடையே எவ்வளவு மனத்தாங்கல் இருந்தாலும் சரியே! அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி) அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ""எந்த மனிதனிடம் நான்கு குணங்கள் உள்ளனவோ அவன் அப்பட்டமான நயவஞ்சகனாவான். எவனிடம் அந்த நான்கு குணங்களில் ஏதேனும் ஒன்று உள்ளதோ, அவனுக்குள் நயவஞ்சகத்தின் ஒரு குணம் உள்ளது(என்று பொருள்); அவன் அந்தக் குணத்தை விடாதவரை! அந்த நான்கு குணங்களாவன: 1. அவனிடம் ஓர் அமானிதப் பொருளை ஒப்படைக்கும் போது அவன் மோசடி செய்வான். 2. பேசும்போது பொய் சொல்வான். 3. வாக்களித்தால் அதை நிறைவேற்ற மாட்டான். 4. எவரிடமாவது சண்டையிட்டால் வசை மொழிகளால் ஏசத் தொடங்குவான்.'' (புகாரி முஸ்லிம்) பொய் அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ""தன் இரு கண்களும் பார்த்திராத ஒன்றை தன் இரு கண்களுக்கும் காட்டுவது தான் அனைத்தையும் விடப் பெரிய பொய் ஆகும். (புகாரி) விளக்கம்: ஒருவன் கனவு காணவில்லை; எனினும், கண் விழித்த பின் மிகவும் விந்தையான, சுவையான , ருசியான விஷயங்களையெல்லாம் எடுத்துரைத்து, ""இவற்றை நான் என் கனவில் கண்டேன்'' என்று கூறுகின்றான். இப்படிக் கூறுவது கண்களைப் பொய் பேச வைப்பதாகும். அறிவிப்பாளர்: அஸ்மா பின்த் உமைஸ்(ரலி) அண்ணல் நபி(ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவரை (புதுமணப்பெண்ணை) அழைத்துக் கொண்டு அண்ணலாரின் இல்லத்திற்குச் சென்றோம். நாங்கள் அண்ணலாரின் வீட்டை அடைந்த பொழுது அண்ணலார் ஒரு பெரிய பால் குவளையை எடுத்து வந்தார்கள். பிறகு(அதிலிருந்து பாலை) திருப்தியடையும் அளவிற்குக் குடித்தார் கள். பின் தம் துணைவிக்குக் கொடுத்தார்கள். அத்துணைவியார் பசியிருந்தும் ""எனக்கு விருப்பமில்லை'' என்று கூறினார்கள். அவர்கள் ஒப்புக்கு பதிலளிப்பதைப் புரிந்து கொண்ட அண்ணலார், ""நீ பசியையும் பொய்யையும் ஒன்று சேர்க்காதே!'' என்று கூறினார்கள்.(தபரானீயின் அல்முஃஜமுஸ்ஸகீர்) விளக்கம்: "நம் துணைவியாருக்குப் பசியென்னவோ எடுக்கத் தான் செய்கிறது. ஆனால், அவர்(வெட்கத்தால்) சங்கடப்படுகிறார்' என்று அண்ணலார் எண்ணினார்கள். ஆகவே, ஒப்புக்காகச் சொல்லும் பொய்யை விட்டுத் தம் துணைவியாரை அண்ணலார் தடுத்தார்கள். அறிவிப்பாளர்: ஸுஃப்யான் பின் அஸீத் ஹள்ரமீ(ரலி) அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவிலக் கேட்டிருக்கின்றேன்; ""நீர் உம் சகோதரரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லி, அதை அவர் உண்மையென்று கருதிக் கொண்டிருக்க, நீர் சொன்ன விஷயம் பொய்யாய் இருப்பது பெரும் நம்பிக்கைத் துரோகமாகும்.''(அபூதாவூத்) (அண்ணல் நபிகளார் வாழ்வினிலே.... நூலில் இருந்து)


Related

பெட்டகம் சிந்தனை 5482527512331394842

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item