சோர்வு, மூட்டு வலிக்கு செர்ரி ஜூஸ்--பழங்களின் பயன்கள்
உடல் சோர்வு, மூட்டு வலி இருப்பவர்கள் செர்ரி பழ ஜூஸ் குடித்தால் நல்லது என ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. பிரிட்டனின் நார்தும்பிரியா யுனிவர்...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_6497.html
உடல் சோர்வு, மூட்டு வலி இருப்பவர்கள் செர்ரி பழ ஜூஸ் குடித்தால் நல்லது என ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
பிரிட்டனின் நார்தும்பிரியா யுனிவர்சிட்டியின் உளவியல் மற்றும் விளையாட்டு பயிற்சி மையத்தின் ஆய்வக இயக்குநர் கிளைன் ஹோவாட்சன் தலைமையிலான நிபுணர்கள் செர்ரி பழ ஜூஸின் பயன்கள் குறித்து ஆய்வு நடத்தினர். இதன் ஒருபகுதியாக, மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கும் 20 வீரர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு பந்தய நாளுக்கு முன்னதாக 5 நாட்கள் மற்றும் பந்தயம் முடிந்த பிறகு 2 நாட்களுக்கு தினமும் 2 முறை செர்ரி ஜூஸ் கொடுக்கப்பட்டது.
ஜூஸ் குடித்தவர்கள், ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற 48 மணி நேரத்தில் உடல் சோர்வு நீங்கி பழைய நிலைக்கு திரும்பியது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. செர்ரி ஜூசில் உள்ள ஆந்தோசியானின்ஸ் என்ற ஆன்ட்டி ஆக்சிடன்ட் வைட்டமின், உடலின் சோர்வடைந்த தசைப்பகுதி விரைவாக புத்துணர்ச்சி பெற உதவுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
"பொதுவாக, மாரத்தான் போன்ற ஓட்டப் பந்தயங்களில் பங்கு பெறுபவர்களின் உடல் தசைகள் கடுமையாக சோர்வடையும். இனி இந்த பிரச்னையிலிருந்து எளிதாக விடுபட செர்ரி ஜூஸ் குடிக்கலாம். சாதாரணமான உடல் சோர்வு மற்றும் மூட்டு வலியால் அவதிப்படுவோருக்கும் இது பயனளிக்கும்" என ஹோவாட்சன் கூறியுள்ளார்.
Post a Comment