எதையெல்லாம் சிந்திக்க வேண்டும்? -- அமுத மொழிகள்

எதையெல்லாம் சிந்திக்க வேண்டும்? ஒரு மனிதன் தினமும் என் னென்ன சிந்திக்க வேண்டும் என் பது பற்றி சொல்கிறார் நபிகள் நாயகம். * மனிதர்கள் செய்த உத...

எதையெல்லாம் சிந்திக்க வேண்டும்? ஒரு மனிதன் தினமும் என் னென்ன சிந்திக்க வேண்டும் என் பது பற்றி சொல்கிறார் நபிகள் நாயகம். * மனிதர்கள் செய்த உதவியை சிந்திப்பதை விட இறைவன் செய்த உதவியை சிந்தனை செய்யுங்கள். * நீங்கள் செய்த நன்மைகளைப் பற்றி சிந்திப்பதை விட, செய்த பாவங்கள் பற்றி சிந்தியுங்கள். * நீங்கள் <உயிருடன் வாழப் போவதை சிந்திப்பதை விட, வருகின்ற மரணத்தைப் பற்றி சிந்தனை செய்யுங்கள். * மற்றவர்களின் குற்றங்களை நோட்டமிடுவதை விட உங்களின் குற்றங்களை நோட்டமிடுங்கள். உப்பை நீர் கரைப்பது போன்று, நற்குணம் உங்கள் பாவங்களை கரைத்துவிடும். கள்ளின் மண்டி தேனைக் கெடுத்து விடுவது போன்று துர்க்குணம் இறைவனை வணங்கி கிடைக்கும் பலனை கெடுத்து விடும். * உன் வாயிலாக இறைவன் ஒரு மனிதனுக்கு நேர்வழி காட்டுவது இவ்வுலகத்தையும் இதிலுள்ள யாவற்றையும் விட உனக்கு நன்மை பயப்பதாகும். * எவர் அண்டை வீட்டாரை துன்புறுத்துகின்றாரோ அவர் என்னை துன்புறுத்தியவராவார். * அன்பு செலுத்தாதவன் அன்பு செலுத்தப்படுவதற்கு அருகதையற்றவன். * தர்மம் செய்ய இயலாதவன் ஒரு நற்செயல் செய்வானாக. அல்லது ஒரு கெட்ட செயலில் இருந்து விலகிக் கொள்வானாக. அதுவே அவனது ஈகை. * உங்களை நம்பி ஒருவன் ஒரு செய்தியைச் சொன்னால், அதை அடைக்கலப் பொருள் போல பாதுகாத்து வையுங்கள். * தன் பிள்ளைகளைப் பிறர் நல்லவிதமாக நடத்த வேண்டும் என்று விரும்புபவர், அனாதைப் பிள்ளைகளை நல்லவிதமாக நடத்த வேண்டும். * ஒரு மனிதன் தன்னுடையவர்களிடத்தில் ஒழுக்கமாக நடந்து கொள்ளுதலே அவர்களை ஓழுக்கமாக நடந்து கொள்ளச் செய்தல் ஆகும். * மனிதன் எதைச் செய்கிறானோ அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்பதைத் தான் இறைவன் கவனிக்கிறான். இந்த சிந்தனை மொழிகளை தினமும் படியுங்கள். உங்களுக்குள் நற்குணம் கொடி கட்டி வளரும். ********************************************************************************* வாழ்க்கை ஒரு புகை வாழ்க்கை என்பது என்ன என்பதற்கும், வாழ்வில் கடைபிடிக்க வேண்டியது பற்றியும் விளக்கமளிக்கிறது பைபிள். அது என்ன சொல்கிறது என்று தான் கேளுங்களேன்! * உங்கள் வாழ்க்கை என்பது என்ன? சற்றுநேரம் தோன்றி பிறகு மறைந்து போகும் ஒரு புகை. நம்மில் எவரும் தனக்காக வாழ்வதில்லை. தனக்காக சாவதும் இல்லை. * மனிதனின் வாழ்நாட்கள் புற்களுக்கு ஒப்பானவை. வயலிலுள்ள பூவைப்போல அவன் செழிக்கிறான். காற்று அதன் மீது வீசியதும் பூ உதிர்ந்து விடுகிறது. அது இருந்த இடத்தை இனி அது அறியாது. * என்னுடைய நாட்கள் நெசவாளியின் எறிநாடாக் கருவியை விட வேகம் நிறைந்தவை. * ரத்த வெறியர்களும், வஞ்சனையாளர்களும் தங்கள் வாழ்நாளில் பாதியளவு கூட வாழ்வதில்லை. * சகலவிதமான மனக்கசப்பு, கோபதாபம், குரோதம், கூக்குரல், ஏச்சுபேச்சு ஆகிய துர்க்குணங்களை விட்டொழியுங்கள். ஒருவருக்கொருவர் கருணையோடும், வாஞ்சையுள்ளத்தோடும் ஒருவரையொருவர் பொறுத்து மன்னித்து நடவுங்கள். ******************************************************************************* கைமாறு கருதிய உதவி எதற்கு? ஒருவருக்கு உதவும் போது, அவரால் திரும்பவும் நமக்கு உதவி கிடைக்கும் என கருதி செய்வது உபகாரமே ஆகாது. பிரதியுபகாரம் எதிர்பாராத உதவியே நிஜமான உதவியாகும். இதுபற்றி பைபிள் என்ன சொல்கிறது தெரியுமா? * நீ விருந்து செய்யும் போது ஏழைகளையும், ஊனமுற்றவர்களையும், முடவர்களையும், குருடர்களையும் கூப்பிடுவாயாக. அவர்கள் பதிலுக்கு பதில் செய்ய முடியாதவர்களாய் இருந்தால் நீ பாக்கியவானாய் இருப்பாய். * நீ பகல் விருந்தோ, இரவு விருந்தோ நடத்தும் போது, உன் நண்பர்களையோ, உடன் பிறந்தவர்களையோ, உன் உற்றார் உறவினரையோ, செல்வந்தர்களான அண்டை அயலாரையோ அழைக்க வேண்டாம். மறுதரம் அவர்களும் உன்னை அழைப் பார்கள். அப்போது அது உனக்கு பிரதிபலனாகி விடும். **************************************************************************** பள்ளிவாசலில் வீண்பேச்சு எதற்கு? பள்ளிவாசலின் சிறப்பையும், அங்கே நடந்து கொள்ள வேண்டிய விதம் பற்றியும் நபிகள் நாயகம் சொல்வதைக் கேளுங்கள். ஒருமுறை அவர் வானுலகம் சென்றிருந்த போது, அங்கே சிலர் பன்றிக்கறியை தின்று கொண்டிருந்தனர். ""இவர்கள் யார்?'' எனக்கேட்டார் நாயகம். அதற்கு ஜிப்ரில் (அலை) அவர்கள், ""இவர்கள் பள்ளிவாசலில் அமர்ந்து ஊர்வம்பு அளந்து கொண்டிருந்தவர் கள்,'' என்று பதிலளித்தார்கள். பள்ளிவாசலுக்குள் உலக விஷயங்கள் பற்றியோ அல் லது வேறு காரியங்கள் குறித்தோ பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், நபிகள் நாயகம் நெருப்பை மிதித்தது போன்ற உணர்வை அடைவார். பள்ளிவாசலை விட்டு உடனே வெளியேறி, பேச வேண்டியதை வெளியில் வைத்து பேசிவிட்டு, மீண்டும் பள்ளிவாசலுக்குள் நுழைவார். இதிலிருந்து, இறைவழிபாட்டால் நன்மைகளைச் சுமந்து செல்வதற்காக பள்ளிவாசல் வருபவர்கள், வீண் பேச்சுகளின் மூலம் பாவமூட்டையை சுமந்து கொண்டு செல்கிறார்கள் என்பதை அவர் உணர வைக்கிறார். அதுமட்டுமல்ல, ஏதாவது ஒரு செயல் கவலை தருமானால், அவர் உடனே தொழுகைக்கு சென்றுவிடுவார். பள்ளிவாசல் பற்றி நபிகள் நாயகம் மேலும் சொல்வதாவது. * எமது உம்மத்தவர்களில் (பின்பற்றுவோர்) அல்லாஹ் வுக்கு பயந்தவர்கள் பள்ளிவாசல்களில் தங்கியிருப்பார்கள். * ஒரு காடைக்குருவி போன்ற சின்னஞ்சிறிய பள்ளிவாசலைக் கட்டுபவருக்காக, சொர்க்கத்தில் அல்லாஹ் ஒரு மாளிகையை எழுப்புகிறான். * பாங்கொலி கேட்டு தொழுகைக்கு வராதவர் அநியாயமும், வஞ்சகத்தன்மையும் உடையவர் ஆகிறார். இனியாவது பள்ளிவாசலுக்கு செல்லும் போது வீண்பேச்சு வேண்டாம். சரிதானே!

Related

பெட்டகம் சிந்தனை 7561789190335281552

Post a Comment

1 comment

கோமதி அரசு said...

அமுத மொழிகள் அருமை.
இறைவன் சந்நதியில் வீண் பேச்சு எதற்கு!
இறைவன் நாமம் சொல்வோம்.

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item