மீந்து போனதை விருந்தாக்க முடியும்---வீட்டுக்குறிப்புக்கள்
உப்புமா நிறைய செய்து சாப்பிடாமல் நிறைய உள்ளதா? அதில் உள்ள மிளகாய், கறிவேப்பிலையை நீக்கி விட்டு நன்றாக கையால் ஒரு சேர பிசைந்து அதில் சம அளவ...
https://pettagum.blogspot.com/2012/03/blog-post_7139.html
உப்புமா நிறைய செய்து சாப்பிடாமல் நிறைய உள்ளதா? அதில் உள்ள மிளகாய், கறிவேப்பிலையை நீக்கி விட்டு நன்றாக கையால் ஒரு சேர பிசைந்து அதில் சம அளவு கோதுமை மாவு, கொஞ்சம் கரம் மசாலா, மிளகாய்த்தூள், பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்த்துப் பிசைந்து சிறு சிறு பூரிகளாகச் பொரித்து எடுங்கள். சுவை அள்ளிக் கொண்டு போகும்.
வெண் பொங்கல் சில சமயங்களில் மீந்து விடும். கவலையே படாதீர்கள். கடுகு, உளுத்தப்பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளியை அதன் தலைமேல் போட்டு, சிறிதளவு புளிக்கரைசலையும் சேர்த்துக் கொதித்ததும் அதில் மீந்த பொங்கலை சேர்த்துக் கிளறி இறக்கினால் அருமையான சாம்பார் சாதம் தயார்.
சப்பாத்தி சில சமயங்களில் ஹார்டாக செய்து விட்டால் மீந்து விடும். அதனை தோசைக்கல்லில் போட்டு முறுக்கு மாதிரி மொறுமொறுப்பாக சுட்டெடுத்து, மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளவும். இந்த மாவைப்போல 1-1/2 மடங்கு சர்க்கரையை பாகு போல காய்ச்சி கம்பிப்பதம் வந்ததும் அதில் பொடித்த சப்பாத்தி, நெய், முந்திரி, ஏலத்தூள் சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும். ஆறியதும் துண்டுகள் போட்டு கொடுங்கள். இது என்ன அருமையான பலகாரமாக இருக்கிறதே என்று கேட்பார்கள்.
வெண் பொங்கல் சில சமயங்களில் மீந்து விடும். கவலையே படாதீர்கள். கடுகு, உளுத்தப்பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளியை அதன் தலைமேல் போட்டு, சிறிதளவு புளிக்கரைசலையும் சேர்த்துக் கொதித்ததும் அதில் மீந்த பொங்கலை சேர்த்துக் கிளறி இறக்கினால் அருமையான சாம்பார் சாதம் தயார்.
சப்பாத்தி சில சமயங்களில் ஹார்டாக செய்து விட்டால் மீந்து விடும். அதனை தோசைக்கல்லில் போட்டு முறுக்கு மாதிரி மொறுமொறுப்பாக சுட்டெடுத்து, மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளவும். இந்த மாவைப்போல 1-1/2 மடங்கு சர்க்கரையை பாகு போல காய்ச்சி கம்பிப்பதம் வந்ததும் அதில் பொடித்த சப்பாத்தி, நெய், முந்திரி, ஏலத்தூள் சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும். ஆறியதும் துண்டுகள் போட்டு கொடுங்கள். இது என்ன அருமையான பலகாரமாக இருக்கிறதே என்று கேட்பார்கள்.
2 comments
Kurippukal anaithum arumai.
welcome, Thank You - By A.S.Mohamed Ali
Post a Comment