காஞ்சீபுரம் இட்லி .--- சமையல் குறிப்புகள்
தேவையான பொருட்கள் புழுங்கலரிசி - 1 கப் பச்சரிசி - 1 கப் உருண்டை உளுந்தம்பருப்பு - ஒரு கப் கடுகு, உளுந்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன் கடலைப...

புழுங்கலரிசி - 1 கப்
பச்சரிசி - 1 கப்
உருண்டை உளுந்தம்பருப்பு - ஒரு கப்
கடுகு, உளுந்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
இஞ்சி - சிறு துண்டு
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
ஆப்பசோடா - ஒரு சிட்டிகை
தேங்காய்ப்பூ - 2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
* அரிசி, முழு உளுத்தம்பருப்பை ஒன்றாக ஊற வைத்து கொரகொரவென அரைத்து உப்பு போட்டு கரைத்து வைக்கவும், மாவு பொங்கியதும் ஆப்ப சோடா சேர்த்து கலக்கவும், அத்துடன் நல்லெண்ணெயை காய்ச்சி ஊற்றவும்.
* வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு தாளித்து பொன்னிறமானதும், மிளகு, சீரகத்தை உடைத்து கலந்து கொள்ளவும்.
* இத்துடன் இஞ்சியை பொடியாக துருவி சேர்த்து, தேங்காய்ப் பூ, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி மாவில் சேர்க்கவும்.
* நன்றாக கலந்து அகலமான கிண்ணத்தில் எண்ணெய் தடவி மாவை முக்கால் பங்கு வருமாறு ஊற்றி குக்கரில் வைத்து வெயிட் போடாமல் வேக வைக்கவும்.
* காஞ்சீபுரம் இட்லி ரெடி.
Post a Comment