அளவுக்கு மீறிய சுமையை இறைவன் சுமத்துகிறானா? - அமுத மொழிகள்

அளவுக்கு மீறிய சுமையை இறைவன் சுமத்துகிறானா? ""இறைவன் என்றுமே மனிதர்களுக்கு அவர்களது சக்தியை மீறி எந்த சுமையையும் கொடுப்பதில்லை. ...

அளவுக்கு மீறிய சுமையை இறைவன் சுமத்துகிறானா?

""இறைவன் என்றுமே மனிதர்களுக்கு அவர்களது சக்தியை மீறி எந்த சுமையையும் கொடுப்பதில்லை. இறைவனுக்கு கட்டுப்பட்டு அஞ்சி நடக்கும் விஷயத்தில் கூட மனிதனை இறைவன் சிரமப்படுத்தவில்லை,'' என்கிறார் நபிகள் நாயகம். இறைவன் நம் மீது பாரத்தை சுமத்துகிறான். ஆனால், ஏன் சுமத்தினான் என்ற அடிப்படையை ஆராய வேண்டும். காலில் முள் குத்தினால் கூட அதை ஒரு சோதனையாக கருதுகிறோம். சிலர் மகனுக்கு வேலை இல்லை என மனசங்கடத்தில் ஆழ்கின்றனர். சிலர் மகளுக்கு வாழ்க்கை இல்லை என்று அழுகின்றனர். இந்த பாரத்தை இறைவன் அவர்கள் மீது ஏன் சுமத்தினான்? அவர்கள் என்றோ, யாருக்கோ செய்த கெடுதல் செய்திருக்கிறார்கள். அதன் விளைவை இன்று அனுபவிக்கிறார்கள். மகளும், மருமகனும் பிரிந்திருக்கிறார்கள் என்றால், என்றோ அவர்கள் யார் குடும்பத்தையோ பிரித்திருக்க வேண்டும். இது இப்பிறவியிலும் இருக்கலாம். சென்ற பிறவியிலும் இருக்கலாம். அதனால் தான் இஸ்லாம் மறுமையைப் பற்றி மிக அதிகமாகவே வற்புறுத்திச் சொல்கிறது. ஆனாலும், இறைவன் கருணை மிக்கவன். இப்படிப்பட்டவர்களை அவன் உயிரோடு விட்டு வைத்திருப்பதே பெரிய விஷயம். இம்மையில் நன்மை செய்வதின் மூலம் மறுமையிலாவது இதுபோன்ற இக்கட்டான நிலையில் இருந்து தப்பிக்கலாம்.   

மகனின் பாவத்தை பெற்றவர்கள் சுமக்க முடியுமா?

மகன் குடிகாரனாகி விட்டான். கெட்ட பெண்களிடம் சென்று சீரழிந்து வந்து விட்டான். அவனை நோய் ஆட்டிப் படைக்கிறது. செய்த பாவத்திற்குரிய தண்டனையே நோயாக மாறும் என்பது நபிகள் நாயகத்தின் வாக்கு. இந்த வாக்கை மதிக்காததால், அவன் இப்போது படுக்கையில் கிடந்து அழுந்துகிறான். எழுந்து நடக்க முடியாத நிலையில், படுக்கையிலேயே மலஜலம் கழிக்கிறான். தன்னைத்தானே வெறுக்கிறான். அழுகிறான்.
இந்தக் கொடுமையை பெற்றவர்கள் பார்க்கின்றனர். மகனுக்காக அழுகின்றனர்.
""அல்லாஹ்! என் மகனை விட்டுவிடு. அவன் வாழ வேண்டியவன். அவனது நோயை எங்களுக்கு கொடுத்து விடு. எங்கள் ஆயுளை எடுத்துக் கொள். அதை அவனது ஆயுளுடன் கூட்டிவிடு,'' என்று கதறுகின்றனர்.
குர்ஆன் என்ன சொல்கிறது தெரியுமா?
""பாவம் செய்யும் ஒவ்வொரு ஆத்மாவும் தனக்கே கேட்டைத் தேடிக் கொள்கிறது. ஓர் ஆத்மாவின் பாவச்சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது'' என்று. குர்ஆன் இறைவனால் அருளப்பட்ட வார்த்தைகளை உள்ளடக்கியது. இறைவனே இப்படி தீர்ப்பளித்த பிறகு மனிதனால் என்ன செய்ய முடியும்? பாவம் செய்துவிட்டு பின்னர் வருத்தப்படுவதில் அர்த்தமே இல்லை.

எந்த நாடு என்ற பேதமில்லை

நமது பூர்வீகத்தை ஆராய்வோம். நம் தாத்தா..தாத்தாவுக்கு தாத்தா...இப்படி அடுக்கிக் கொண்டே போனால், என்றோ ஒருநாள் ஒரே ஒரு ஆணும், ஒரே ஒரு பெண்ணும் மட்டும் இருந்திருப்பார்கள். இவர்கள் தான் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். இவர்களில் முதல்வர் தான் ஆதம். இவரிடமிருந்தே எல்லா மனிதர்களும் பிறக்க ஆரம்பித்தனர். எண்ணிக்கை அதிகமாகியதும், நாடு,மொழி, நிறம் என்ற பேதங்களெல்லாம் ஏற்பட்டன. மொத்தத்தில் எல்லோரும் சகோதரர்கள் தான். ஆனால், ஏன் இந்த பேதம் ஏற்பட்டது. இதற்கு விடை தருகிறது குர்ஆன்.


""அல்லாஹ் இந்த பூமியின் அனைத்துப் பகுதியில் இருந்தும் மண்ணைச் சேகரித்து, அதன் ஒரு பிடியில் இருந்து ஆதமைப் படைத்தான். அதனால் தான் பூமியின் பலதரப்பட்ட தன்மைக்கேற்ப ஆதமின் மக்கள் வந்துள்ளனர். அம்மக்களில் கருப்பர், வெள்ளையர். சிவப்பு நிறத்தவர் என பல பலதரப்பட்ட நிறமுடையவர்களும், நல்லவர், கெட்டவர், மிருதுவானவர்கள், கவலை கொள்பவர்கள் என பலதரப்பட்ட பண்புகளை உடையவர்களும் உள்ளனர்,'' என அதில் சொல்லப்பட்டுள்ளது. அல்லாஹ் பூமியின் எல்லாப்பகுதிகளிலும் மண்ணைச் சேகரித்ததால், அந்த மண்ணின் நிறத்திற்கேற்ப மனிதனின் நிறம் அமைந்தது. பண்புகளும் மாறுபட்டன. நிறமும், பண்பும் மாறுபட்டிருந்தாலும், எல்லாரும் இறைவனின் குழந்தைகளே என்பதை நினைவில் கொண்டு, பேதங்களை மறந்து ஒற்றுமையாகவும். அமைதியாகவும் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

Related

அமுத மொழிகள் 7531234862153963011

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item