சமையல் குறிப்புகள்! தவலை வடை எப்படிச் செய்வது?
தவலை வடை சரியாக வரவில்லை. விள்ள முடியாமல் கெட்டியாகி விடுகிறது. சரியான பக்குவம் சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன். தவலை வடைக்கான காம்பினேஷன்...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_7806.html
தவலை வடை சரியாக வரவில்லை. விள்ள முடியாமல் கெட்டியாகி விடுகிறது. சரியான பக்குவம் சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.
தவலை வடைக்கான காம்பினேஷன் சரியாகப் போட்டு சரியான பக்குவத்தில் அரைத்து சுட்டாலே போதும்... இதோ தவலை வடை செய்ய தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு-1 கப், கடலைப் பருப்பு-¾ கப், பயத்தம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பச்சரிசி தலா-¼ கப், புழுங்கல் அரிசி-½ கப், உப்பு, மிளகாய் வற்றல்-6 ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவில் பெருங்காயப் பொடி, நறுக்கிய இஞ்சி, 2 பச்சை மிளகாய், பல்பல்லாக நறுக்கிய தேங்காய் ஆகியவற்றைப் போட்டுக் கலந்து கொள்ளவும்.
மாவு பக்குவம் : கரகரவென அரைத்த மாவைக் கரண்டியில் எடுத்தால், விழுவது போல் பக்குவம் இருக்க வேண்டும். கடாயில் எண்ணெயை மிதமாகக் காயவிட்டு, ஒரு கையில் ஜல்லிக் கரண்டியைப் பிடித்துக் கொண்டு, குழிக்கரண்டியில் மாவை எடுத்து ஜல்லிக் கரண்டியில் போட்டு, லேசாக பிரஸ் செய்யவும். பின்னர் ஜல்லிக் கரண்டியை எண்ணெய் மீது லேசாகச் சாய்த்து மாவை எண்ணெயில் விட்டு வேக வைத்து எடுக்கவும். தவலை வடை மேலாக முறுமுறுப்பாகவும், உள்ளே சாஃப்ட்டாகவும் இருக்கும்.
Post a Comment