சமையல் குறிப்புகள்! ஒரு சூப்பர் யோசனை! ஒரு அசத்தல் ஐடியா!
பருப்பு ஊறப் போடாமலே, திடீர் வடை செய்ய ஒரு அசத்தல் ஐடியா! ஒரு ஆழாக்கு பொட்டுக் கடலையை மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி அரைக்கவும். அத்துடன் ...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_6481.html
பருப்பு ஊறப் போடாமலே, திடீர் வடை செய்ய ஒரு அசத்தல் ஐடியா!
ஒரு ஆழாக்கு பொட்டுக் கடலையை மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி அரைக்கவும். அத்துடன் அரை ஆழாக்கு வறுத்த நிலக்கடலையைச் சேர்த்து, கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையில் உப்பு, காரப் பொடி, தண்ணீர் சேர்த்து பிசைந்து வடை தட்டினால், குறைந்த நேரத்தில் சுவையான மொறுமொறுவென்று வாயில் கரையும் வடைகள் தயார்!
தோசை மிளகாய்ப்பொடி, ஊறுகாய்க்கான மிளகாய்ப்பொடி ஆகியவற்றுக்கு காய்ந்த மிளகாய் போட்டு மிக்ஸியில் அரைக்கும்போது சரியாக அரைபடாது. முதலில் மிளகாயுடன் சிறிது கல் உப்பு சேர்த்து அரைத்தால் நன்கு அரைபடும். பிறகு அதனுடன் மற்ற பொருட்களைச் சேர்த்து அரைக்கலாம்.
பஜ்ஜி மாவில் தக்காளி சாஸ் கலந்து பஜ்ஜி சுட்டால், சுவையும் கலரும் வித்தியாசமாக இருக்கும். மசாலா மணத்துடன் கட்லெட் போன்ற ருசியுடன் இருப்பதால், தக்காளி சாஸையே தொட்டுக் கொள்ளவும் செய்யலாம்.
பாசிப்பருப்பை குக்கரில் வேகவைக்கும்போது, குழைந்து விடாமல் பருப்பு இதழ் இதழாக இருக்க ஒரு சூப்பர் யோசனை!
மூடியுள்ள ஒரு பாத்திரத்தில் பருப்பை போட்டு, இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி அரை ஸ்பூன் உப்பு சேர்த்து மூடியால் மூடி, குக்கரில் வேக வைத்தால்... பருப்பு அட்டகாசமாக வெந்திருக்கும்!
------------------------------------------------------------------------------------------------
தே பழம்... அதிக ஜூஸ்!
ஒரு சாத்துக்குடி பிழிந்தால் அரை கிளாஸ் ஜூஸ்தான் வருகிறதா? விடுங்கள், கவலையை! சாத்துக்குடியை தோல் உரித்து, சுளையெடுத்து, கொட்டை நீக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸ் எடுங்கள். இரண்டு மடங்கு ஜூஸ் கிடைக்கும்.
குறிப்பு: சாத்துக்குடியை நான்காக வெட்டிக்கொண்டால், தோலுரிப்பதும், கொட்டைகளை நீக்குவதும் எளிது. மிக்ஸியில் பழச்சுளைகள், கொஞ்சம் ஐஸ்கட்டிகள், மூன்று ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அரைக்கவும். ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து பெரிய துளை கள் கொண்ட வடிகட்டியில் ஒட்ட வடிகட்டி னால், நார்ச்சத்து வீணாவதும் குறையும்.
மொச்சை, ராஜ்மா, சன்னா போன்ற வற்றை ஊறவைக்கும்போதே சிறிது சமையல் சோடாவையும் சேர்த்துக் கொள்ளுங் கள். ஊறிய பின் தண்ணீரைக் கொட்டிவிட்டு, பயறு களை நன்றாகக் கழுவி, பின் வேக வைத்தால் மிகவும் மிருதுவாக இருக்கும். சீக்கிரமாகவும் வேகும்.
வேகவைக்கும்போது சோடா சேர்த்தால்தான் சத்து கெடும். ஊற வைக்கும்போது சோடா சேர்த்து, பின் கழுவி விடுவதால் எந்த சத்தும் சேதமடையாது.
குறிப்பு: வேகவைக்கும்போது சோடா சேர்க்கும் பழக்கம் உள்ளவர்கள், இனிமேல் மேற்கூறிய முறையைப் பின்பற்றலாம். வட இந்தியாவில் இந்த முறையைத்தான் பின்பற்றுகிறார்கள்.
ஐஸ்கிரீம் பரிமாறும் கிண்ணங்களை ஃப்ரீஸரில் ஐந்து நிமிடம் வைத்துவிட்டு, பின்னர் ஐஸ்கிரீம் நிரப்பிக் கொடுத்தால், சீக்கிரமாக உருகிவிடாமல் இருக்கும்.
காராபூந்தி, காரசேவு, ஓமப்பொடி, மிக்ஸர், முறுக்கு இவைகள் மிஞ்சினாலோ, நமுத்துப் போனாலோ, தூளாக இருந்தாலோ, ஐந்து நிமிடம் வெந்நீரில் போட்டு, பின் கட்டித் தயிரில் போட்டு, கொத்து மல்லித் தழையைப் போட்டு, தயிர் பச்சடியாகச் செய்து சாப்பிடலாம்.
டெலிபோன் வைத்திருப்பவர்கள், அதைத் தினமும் ஒரு துணியில் சிறிது டெட்டால் ஊற்றித் துடைத்து வையுங்கள். கிருமிகள் பரவாமல் இருக்கும்.
மிக்ஸி ஜாரில் ஏலக்காய், இலவங்கம் போன்ற பொருட்களைப் போட்டு அரைத்த பின்பு, அதை என்னதான் தண்ணீர் ஊற்றி, சோப் பவுடர் போட்டு அலம்பினாலும், அந்த வாசனை இருந்துகொண்டேதான் இருக்கும். அதைப் போக்க, மிக்ஸி ஜாரில் கொஞ்சம் பிரெட் துண்டுகளைப் போட்டுப் பொடித்து எடுத்தால், ஜாரில் ஏலக்காய், இலவங்கம் வாசனை அடிக்காது!
முகப்பவுடர் பூசப் பயன்படும் பஃப் பழையதாகிவிட்டதா? தூர எறிந்துவிடாதீர்கள்! அதைச் சுத்தம் செய்து வைத்துக் கொண்டால் டைனிங் டேபிள், டீப்பாய், கண்ணாடி, ஷ¨ போன்றவற்றைத் துடைக்கப் பயன்படுத்தலாம்.
Post a Comment