கிராமத்து கைமணம்! கலவைப் பருப்பு வடை
கிராமத்து கைமணம்! வாய்க்கு ருசியான ரெண்டு கிராமத்துச் சிற்றுண்டிகளை இங்கே கொடுத்து இருக்கேன். படிங்க... செய்யுங்க... பாராட்டுப் பெறுங்க! ...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_451.html
கிராமத்து கைமணம்!
வாய்க்கு ருசியான ரெண்டு கிராமத்துச் சிற்றுண்டிகளை இங்கே கொடுத்து இருக்கேன். படிங்க... செய்யுங்க... பாராட்டுப் பெறுங்க!
கலவைப் பருப்பு வடை
ஒரு கை கடலைப் பருப்பு, ஒரு கை பாசிப்பருப்பு, ஒரு கை துவரம் பருப்பு எடுத்துக்குங்க. இதோட மூணு கை உளுத்தம்பருப்பைப் போட்டு, கழுவி, ஒரு மணி நேரம் ஊற வைங்க. அப்புறம், தண்ணி சேர்க்காம, கெட்டியா கரகரனு இதை அரைச்செடுங்க. பெரிய வெங்காயம்&3, பச்ச மிளகா&5, ஒரு துண்டு இஞ்சி, கொஞ்சம் கொத்துமல்லி, கறிவேப்பிலை... எல்லாத்தையும், அரைச்சு வெச்சிருக்கற பருப்புக் கலவையில சேர்த்து, தேவையான அளவு உப்பு, சீரகம் சேர்த்துப் பிசைஞ்சுக்குங்க.
கடாயில எண்ணெயைக் காயவச்சு, இந்த மாவை சின்னதா வடை போலத் தட்டி, நடுவுல துளையிட்டு, எண்ணெய் கொள்ளுமளவுக்குப் போட்டு, நடுத்தரமாத் தீயை எரிய விட்டு, மொறுமொறுனு வேகவிட்டெடுங்க.
பசங்களுக்கு, இந்த மாவிலேயே கேரட், கோஸ், பீன்ஸ்னு பொடியா நறுக்கின காய்கறிகளைச் சேத்து, வடையா தட்டிப் போட்டு கலர்ஃபுல்லா கொடுத்தா, விரும்பி சாப்பிடுவாங்க.
Post a Comment