கிராமத்து கைமணம்! முந்திரிக் கொத்து
முந்திரிக் கொத்து ‘‘இருநூறு கிராம் பயத்தம்பருப்பை சிவக்க வறுத்து, நைஸாக அரையுங்கள். இருநூறு கிராம் வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து, கம்பி...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_5983.html
முந்திரிக் கொத்து
‘‘இருநூறு கிராம் பயத்தம்பருப்பை சிவக்க வறுத்து, நைஸாக அரையுங்கள். இருநூறு கிராம் வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து, கம்பிப் பதத்தில் பாகு காய்ச்சி, சூடாக இருக்கும்போதே, மாவில் ஊற்றிக் கிளறுங்கள். ஒரு மூடி தேங்காய்த் துருவலை வதக்கி மாவில் சேருங்கள். வாசனைக்கு ஏலத்தூள், வறுத்துப் பொடித்த முந்திரி கொஞ்சம், வறுத்த எள் சிறிதளவு & இவை மூன்றையும் மாவில் கலந்து, நன்கு பிசைந்து, கோலி அளவு உருண்டைகளாக உருட்டுங்கள்.
200 கிராம் மைதா, 50 கிராம் பச்சரிசி மாவு, துளி உப்பு, துளி சோடா மாவு, இரண்டு டீஸ்பூன் நெய், சிறிது தண்ணீர் விட்டு, தோசை மாவு பதத்தில் கரையுங்கள். வடை சட்டியில் தேவையான எண்ணெயைக் காயவைத்து, பருப்பு உருண்டைகளை மூன்று, மூன்றாக, மைதா மாவுக் கலவையில் முக்கியெடுத்து, எண்ணெயில் போட்டு வேகவையுங்கள். இது பத்து நாட்கள்வரை கெடாது. சுவையாகவும் இருக்கும். கல்யாணப் பெண்களுக்கு சீர் கொடுக்கும் பலகாரம் இது!’’
வாயில் நீர் ஊறவைக்கிற முந்திரிக்கொத்து, சாப்பிடறதுக்கும் அருமையான ஸ்வீட்!’’
‘‘தென்மாவட்டங்கள்ல பிரபலமானது. கல்யாணச் சீரில் முக்கியமான அயிட்டமான இதைச் செய்றதுக்கு ஆகற செலவும் கம்மி... பார்க்கும்போது நிறையவும் இருக்கும்!’’
Post a Comment