ஃபாஸ்ட் ஃபுட் மேளா ! இரு பருப்பு தக்காளி பொங்கல்
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், துவரம்பருப்பு, பயத்தம்பருப்பு - தலா கால் கப், பழுத்த தக்காளி - 2, உப்பு - தேவையான அளவு, நெய் - 2 டீஸ்பூன். ...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_2447.html
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், துவரம்பருப்பு, பயத்தம்பருப்பு - தலா கால் கப், பழுத்த தக்காளி - 2, உப்பு - தேவையான அளவு, நெய் - 2 டீஸ்பூன்.
பொடித்துக் கொள்ள: தனியா - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3 (அ) 4, எள் - 2 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கொப்பரைத் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்.
தாளிக்க: எண்ணெய், நெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன், மிளகு - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, முந்திரி - 10.
செய்முறை: பருப்பு வகைகளைத் தனியாக வேக வைத்துக் கொள்ளவும். வெந்ததும், அதிலிருக்கும் தண்ணீரை மட்டும் தனியாக எடுத்து அளந்து கொள்ளவும். இந்தப் பருப்பு தண்ணீருடன் சாதாரண தண்ணீர் சேர்த்து மொத்தம் 3 கப் இருக்குமாறு கலந்து கொள்ளவும். இதை மீண்டும் பருப்பிலேயே விட்டு, அதனுடன் அரிசியைக் களைந்து சேர்த்து, தேவையான உப்பு போட்டு குக்கரில் வைக்கவும். 3 விசில் வந்ததும் தீயைக் குறைத்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.
பொடித்துக் கொள்ள கொடுத்துள்ளவற்றைத் தனித்தனியே வறுத்துப் பொடிக்கவும். கடாயில் எண்ணெய், சிறிது நெய்யை ஒன்றாக சேர்த்து காய வைத்து, அதில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, தாளித்து, பச்சை மிளகாய், முந்திரி பருப்பு போட்டு வதக்கி, தக்காளி, உப்பு சேர்க்கவும். தக்காளி கரையும் வரை வதக்கி பொடித்த பொடியை சேர்த்துக் கிளறவும். இதை வெந்த பொங்கலுடன் சேர்த்து மீண்டும் கிளறவும். கடைசியில் மீதமுள்ள நெய்யை சேர்த்துப் பரிமாறவும்.
--------------------------------------------------------------------------------------------------
Post a Comment