மனதை மயக்கும் மலபார் கோழிக்கறி
மலபார் கோழிக்கறி தேவையானப் பொருட்கள்: கோழி - ஒரு கிலோ மிளகாய்வற்றல் - 12 தேங்காய் - ஒரு மூடி துருவியது பூண்டு - 10 பற்கள் சின்ன வெங்காயம் ...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_3006.html
மலபார் கோழிக்கறி
தேவையானப் பொருட்கள்:
கோழி - ஒரு கிலோ
மிளகாய்வற்றல் - 12
தேங்காய் - ஒரு மூடி துருவியது
பூண்டு - 10 பற்கள்
சின்ன வெங்காயம் - ஒரு கையளவு
மிளகு - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
வெங்காயம் அரை கப் - பொடியாக நறுக்கியது
கடுகு - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
கோழியைக் கழுவி சுத்தம் செய்து கொண்டு, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி 3 மேசைக்கரண்டி எண்ணெய் விடவும்.
சோம்பு, மிளகு, மிளகாய் வற்றல் சேர்த்து சில கணங்கள் வதக்கி பிறகு தேங்காய்த்துருவல், பூண்டு, மசாலாத் தூள்கள், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
எல்லாம் சேர்ந்து, பொன்னிறமாக வதங்கியதும் வெளியே எடுத்து ஆறவைக்கவும். பிறகு வறுத்தவற்றை நன்கு அரைக்கவும்.
மறுபடியும் வாணலியில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, நறுக்கின கோழித்துண்டங்களை சேர்த்து சிறிது வதக்கி பிறகு அரைத்த கலவையை மஞ்சள் தூள், உப்புடன் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
கறி வெந்து மசாலா கெட்டியானதும் தனியாக ஒரு சிறிய வாணலியில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து குழம்பில் சேர்க்கவும்.
மேலும் சில நிமிடங்கள் கோழியை வேக வைத்து இறக்கவும்.
Post a Comment