ரமளான் தரும் படிப்பினை! பெட்டகம் சிந்தனை,

ரமளான் தரும் படிப்பினை சங்கைமிக்க ரமளான் நம்மை விட்டுக் கடந்து சென்றுவிட்டது. நன்மையின் திறந்த வாயில் கதவுகளின் மூலம் நல்லமல்கள் ச...

ரமளான் தரும் படிப்பினை


சங்கைமிக்க ரமளான் நம்மை விட்டுக் கடந்து சென்றுவிட்டது. நன்மையின் திறந்த வாயில் கதவுகளின் மூலம் நல்லமல்கள் செய்து நன்மையை அள்ளிக் கொண்டுவிட்டோம். பசி, தாகத்தைத் துறந்து நோன்பு நோற்றோம். வீண் பேச்சுக்களை குறைத்து இறைநினைவுடன் குர்ஆன் ஓதினோம். இரவு தொழுகைகளை சங்கையாய் நிறைவேற்றினோம். கடைசி பத்து இரவுகளின் அருமை, பெருமைகள் அறிந்து ஆர்வம் காட்டி நடு இரவுகளில் நின்று வணங்கினோம்.
நம்மில் பெரும்பாலானோர் கண்டு களித்துக் கொண்டிருந்த தொலைக்காட்சிகள், ஆபாச சேனல்கள், சினிமா சி.டி போன்ற ஷைத்தானிய ஊடகங்களுக்கு ஓய்வு கொடுத்து தீமையைத் தடுத்துக்கொண்டோம். ரமளானின் அருள் வளங்கள், லைலத்துல் கத்ர் இரவின் மாட்சிமை, நோன்பாளிகளின் மறுமைப் பதவிகள் ஆகியவை பற்றி ஆங்காங்கே நடைபெற்ற பயான்களைக் கேட்டு நன்மைகளில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டோம்.
புகைப்பழக்கம் கொண்ட பல சகோதரர்கள் புகைமைக்குப் பகைமையானார்கள். ஜும்மா தொழுகையை மட்டும் தொழுது வந்த பலர் துயில் துறந்து சுபுஹு தொழுகைகள் தொழுவதும், கால் வலிக்க இரவுத்தொழுகைகள் தொழும் அதிசயமும் இம்மாதத்தில் காண முடிந்தது. பள்ளிவாசல்கள் விஸ்தரிக்கப்பட வேண்டுமா? என்ற அளவிற்கு பள்ளிகள் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தன. இசையும், பாடல்களும் ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கும் இடமெல்லாம் குர்ஆன் ஒலிக்கும் சப்தங்கள்.
ஒரு வழியாக நோன்புகள் எல்லாம், ஒன்று இரண்டு என மெல்ல நகர்ந்தது பிறை பார்த்து புத்தாடை அணிந்து சங்கையான பெருநாள் தொழுகையை நிறைவேற்றி, இனிப்பு பதார்த்தங்கள் பரிமாறி, சுகந்த பிரியாணி மணம் கமழ ரமளானை வழியனுப்பிவிட்டோம்.
இனி நாம் செய்யப்போவது என்ன? சற்று கண்மூடி கடந்த பல வருடங்களாய் நம் மக்களிடம் நிகழ்ந்த நிகழ்வுகளை நம் மனதில் ஓடவிட்டுப் பார்ப்போம். முப்பது நாட்கள் நோற்ற நோன்பு நம்மை எந்த அளவிற்குப் பக்குவப்படுத்தியுள்ளது என்பதை நாம் ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்து பார்ப்போம்...
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது)விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)
ரமளான் நோன்பு நம்மைத் தூய்மைப் படுத்தியுள்ளதா?
நம்மில் பெரும்பாலோருக்கு நிச்சயமாக இல்லை! ரமளானில் முப்பது நாட்களில் நாம் இறை நினைவில் திளைத்தோம். ஆனால் ஷவ்வால் ஆரம்பம் ஆனதும் நம் நிலைமை என்ன? நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்.
நிரம்பி வழிந்த பள்ளி வாயில்களில் விரல் விட்டு எண்ணும் தொழுகையாளிகளே. விசாலமான காலியிடங்கள். சுபுஹு தொழுகை இழந்து, அலாரங்கள் நேரம் மாற்றப்பட்டு ஏழு மணிக்கு எழுந்து சோம்பல் முறிக்கும் பழையநிலை. பெருநாள் கொண்டாட்டத்தில் திளைத்து புத்தாடை கசங்குமுன் துடைத்துப் புத்துயிரூட்டப்படும் தொலைக்காட்சிகள், ஜன்னல் கதவுகள் வழியாக நுழைந்த கேபில் கம்பிகளில் ஆபாச அலைவரிசைகள் அரங்கேறும் அவலக்காட்சிகள். வீடியோ கடைகளில் அலைமோதும் மக்கள் வெள்ளம். இது எதைக் காட்டுகிறது?
எந்த நோன்பு நம்மைத் தூய்மைப்படுத்தும் என்று இறைவன் கூறினானோ, அந்த நோன்பை நாம் சம்பிரதாயமாக நோற்றோம். விளைவு அது நம்மைப் பக்குவப்படுத்தவில்லை. ரமளானின் நன்மைகளைத் தெரிந்த நாம் செய்த பாவங்களின் பட்டியல் அதிகமானதால் அதைக் குறைத்துக் கொள்ளும் சாதனமாகவே நாம் அணுகியிருக்கிறோம்.
நாம் தீமையிலிருந்து நிரந்தரமாக விடுபடவேண்டும் என்று மனதில் சபதம் எடுத்து ரமளானை ஓர் பயிற்சி மாதமாக நாம் அணுகியிருந்தால் நோன்பு நம்மைப் பக்குவப்படுத்தியிருக்கும். ஷைத்தானின் சூழ்ச்சி வலைகள் கிழிக்கப்பட்டிருக்கும். இறைவன் திருமறையில் கூறுகின்றான்....
قَالَ رَبِّ بِمَا أَغْوَيْتَنِي لَأُزَيِّنَنَّ لَهُمْ فِي الْأَرْضِ وَلَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ  إِلَّا عِبَادَكَ مِنْهُمْ الْمُخْلَصِينَ
என் இரட்சகனே! நீ என்னை வழிகேட்டில் விட்டுவிட்டதனால் இவ்வுலகில்(வழிகேடு தரும் அனைத்தையும்) நாம் அழகானதாகக் காட்டி மனிதர்கள் அனைவரையும் வழி கெடுப்பேன்! உளத்தூய்மையுடைய உன் நல்லடியார்களைத் தவிர. (அல்குர்ஆன் 15:39,40)
ஆக நாம் உளத்தூய்மையுடையோராய் மாறாதவரை, நோன்பை இறையச்சத்துடன் நோற்காதவரை ஷைத்தானின் சூழ்ச்சி வலைகளிலிருந்து நாம் தப்பவே முடியாது. முழுக்க முழுக்க இறைவனை பயந்து ரமளான் மாதம் மட்டுமல்லாது நிரந்தரமாக நல்லமல்கள் செய்து இறைவனின் திருப்பொருத்தத்தைப் பெற்ற நல்லடியார்களாக நாம் மாறிவிட்டால், இறைவனின் தண்டனைகளை நம் மனக்கண் முன் கொண்டுவந்து தொழுகை, திக்ரு, குர்ஆன் ஓதுதல் போன்ற இறைத் தொடர்பு சாதனங்களில் நம் நேரத்தைச் செலவிட்டால் ஷைத்தானின் சூழ்ச்சியை வென்று இம்மையிலும் மறுமையிலும் வெற்றியாளர்களாக ஆகலாம். இறைவன் உதவி புரிவானாக!.

Related

பெட்டகம் சிந்தனை 6783816635201169095

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item