ஊர்த்துவ பக்ஷிமேமத்தாசனம்--ஆசனம்,
செய்முறை: முதலில் விரிப்பில் மல்லாந்து படுத்துக்கொள்ளவும். பின்னர் படுத்த நிலையில் இரு கைகளையும் தரையோடு ஒட்டிவைக்கவும். இர...
https://pettagum.blogspot.com/2012/08/blog-post_7398.html
செய்முறை:
முதலில் விரிப்பில் மல்லாந்து படுத்துக்கொள்ளவும். பின்னர் படுத்த நிலையில் இரு கைகளையும் தரையோடு ஒட்டிவைக்கவும். இருகால்களையும், 90 டிகிரியில் இரு கைகளையும் கொண்டு மெதுவாக, அந்தந்த பக்கத்து முழங்காலை பிடியுங்கள். இடுப்புக்கு மேல் உள்ள வயிறு, மார்பு, தோள், தலைப்பகுதியை மேல்நோக்கி தூக்கவும்.
நெற்றியால் முழங்காலை தொட்டு, பிறகு இரு கைகளையும் மேலே கொண்டு போய் கணுக்காலை பிடித்து உடலை செங்குத்தாக நிறுத்தவும். இரண்டு பிருஷ்டபாகம் மற்றும் முதுகுதண்டின் கடைசி எலும்பு ஆகியவை தரையில் படிந்து ஒரு ஃ வடிவில், உடலின் எடையை சமநிலையில் நிறுத்தவேண்டும். இதே நிலையில் 10 வினாடிகள் இருக்கவும். இந்த ஆசனம் போடும்போது, சுவாசம் இயல்பாக இருக்கட்டும்.
பயன்கள்:
இளமை நீடிக்கும். சுறுசுறுப்பு அதிகரிக்கும். மலச்சிக்கல், வாயுத்தொல்லை, தொந்தி நீங்கும். பாதவலி, முழங்கால் வீக்கம், தொடைப் பெருக்கம் வராது. மலச்சிக்கலை நீக்க சிறந்த ஆசனமிது!
Post a Comment