ஜிகிர்தண்டா குளிர்பானம்-- குறிப்பு
ஜிகிர்தண்டா தேவையான பொருட்கள் பால் - ஒரு லிட்டர் சர்க்கரை - 8 டேபிள் ஸ்பூன் சைனா கிராஸ் - 4 டேபிள் ஸ்பூன் ரோஸ் சிரண் - 1 டேபிள் ஸ்...
https://pettagum.blogspot.com/2011/08/blog-post_7543.html
ஜிகிர்தண்டா
தேவையான பொருட்கள்
பால் - ஒரு லிட்டர்
சர்க்கரை - 8 டேபிள் ஸ்பூன்
சைனா கிராஸ் - 4 டேபிள் ஸ்பூன்
ரோஸ் சிரண் - 1 டேபிள் ஸ்பூன்
நன்னாரி ஸிரப் - 1 டேபிள் ஸ்பூன்
ஐஸ்கிரீம் ஸ்கூப் (வெனிலா) - 1
பால் கோவா - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
* ஒரு லிட்டர் பாலை, சர்க்கரை சேர்த்து அடிகனமான வாணலியில் மெல்லிய தீயில் கொதிக்க விட்டு, ரோஸ் கலர் சேர்க்கவும்.
* பாலை அரைலிட்டராக சுண்ட வைத்து ஆறியவுடன் பிரிஜ்ஜில் 6 மணி நேரங்கள் வைக்கவும்.
* சைனாகிராஸை சூடான நீரில் ஒரு கொதிவிட்டு இறக்கி, 2 மணி நேரம் வைக்கவும். 2 மணி நேரம் கழித்து ஜெல்லி போல உள்ள `சைனா கிராஸை' சிறு துண்டுகளாக வெட்டி, பிரிஜ்ஜில் 6 மணி நேரம் குளிர வைக்கவும்.
* குளிர்ந்த பாலை முதலில் நீளமான ஒரு கண்ணாடித் தம்ளரில் பாதியளவு ஊற்றவும்.
* இப்போது பாலின் மேல் ஜெல்லிகள் போல உள்ள சைனாகிராஸ் துண்டுகளைப் போடவும்.
* பிறகு ரோஸ் ஸிரப், நன்னாரி ஸிரப் ஊற்றவும்.
* தொடர்ந்து வெனிலா ஐஸ்கிரீம் ஸ்கூப்பை வைத்து அதன் மேல் பரவலாக பால்கோவாவைத் தூவி ஜில்லென்று கொடுக்கவும்.
* வெயிலில் தளர்ந்த உடலைக் குளிரவைத்து ஆனந்தத்தில் ஆழ்த்தி மனதிற்கு இதமளிக்கும் ஜில் ஜில் ஜிகிர்தண்டா தயார்.
ஜிகிர்தண்டா என்றாலே இதயத்தை குளிர வைக்கும் பானம் என்று அர்த்தம். ஜிகர் என்றால் இதயம், தண்டா என்றால் குளிர் என்று பொருள். இது இதயத்தை மட்டுமல்லாமல் கடும் வெயிலில் வறண்டு கிடக்கும் நாவையும், தொண்டையையும், உடலையும், மனத்தையும் குளிர்விக்கும் பானம்.
இதயம் குளிர இது இதமானது!
ஜிகிர்தண்டா குளிர்பானம் மட்டுமல்ல; ஓரளவிற்கு வயிற்றை நிரப்பும் தன்மையும் கொண்டது. இதில் சேர்க்கப்படும். சைனா கிராஸ் அயோடின், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்தது. இவை உடலைக் குளிர வைக்கும் சக்தி வாய்ந்தவை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
ஜிகிர்தண்டாவை அருந்துகையில் `ஜெல்லி' போன்ற தன்மையுடன் உள்ள சைனா கிராஸ் வாயில் சுவைக்கையில், நாவிற்கு இன்பமூட்டும். இயற்கை முறையில் குளிர்விக்கவல்ல `ரோஸ் ஸிரப்', நன்னாரி ஸிரப், கெட்டியாகக் கொதிக்கவிட்ட பால், எல்லா வயதினருக்கும் வெயில்கால பேவரிட்டான ஐஸ்கிரீம் சேர்த்து செய்யப்படும் `ஜிகிர்தண்டா`, வெயிலுக்கேற்ற பானம் என்பதுடன் செய்வதற்கும் மிகவும் சுலபம்.
*************************************************************************
Post a Comment