ஓய்வாசனம்--ஆசனம்
செய்முறை:- யோகாசனங்களைச் செய்து முடித்துவிட்டு அப்படியே மல்லாந்து படுக்கவேண்டும். தலைக்கோ, காலுக்கோ தலையணை எதுவும் வைத்துக்கொள்ளக் ...
https://pettagum.blogspot.com/2012/07/blog-post_9916.html
செய்முறை:-
யோகாசனங்களைச்
செய்து முடித்துவிட்டு அப்படியே மல்லாந்து படுக்கவேண்டும். தலைக்கோ,
காலுக்கோ தலையணை எதுவும் வைத்துக்கொள்ளக் கூடாது. யோகாசனங்களைச் செய்த அதே
விரிப்பில் மல்லாந்து படுத்துக் கண்களை மூடி உடம்பைத் தளர்வாக வைத்திருக்க
வேண்டும்.. சுவாசத்தை இயல்பான நிலையில் வைத்து சுவாசத்தை கவனிக்க
வேண்டும்.
வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் அமைதியாக
படுத்திருக்க வேண்டும். இந்த நிலையில் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களோ,
இன்னும் கொஞ்சம் கூடுதலாகவோ அவரவர் சௌகரியப்படி ஓய்வெடுத்துக் கொண்டு
எழுந்து கொள்ளலாம்.
பயன்கள்:-
யோகாசனங்களைச்
செய்கின்றபோது விரைவாக ஓடிய இரத்தம் இப்போது சுகமான ஆறுதலைப் பெறுகின்றது.
பயிற்சியினால் வினைபட்ட உள்ளுறுப்புக்களும், வெளியுறுப்புக்களும் சாந்தி
பெறுகின்றன. முக்கியமாக சுவாசமும் இதயத்துடிப்பும் சமப்படுகின்றன. இதயநோய்
உள்ளவர்களுக்கு இவ்வாசனம் நல்லதொரு மருந்தாகும். இதனால் இதயம் வளம்பெற்று
இதயத்துடிப்பும் சீர்படுத்தப்படுகிறது. யோகாசனப் பயிற்சிக்குப் பின்னர்
செய்யும் ஓய்வாசனத்தால் உடம்பிலுள்ள ஒவ்வொரு அணுவும் நலம்பெறுகின்றன.
Post a Comment