எங்க வீட்டு டயட்! -- நெல்லிக்காய் சாம்பார்
எங்க வீட்டு டயட்! 'ரசித்துச் சாப்பிடும் உணவு ருசியாக இருந்தால் மட்டும் போதுமா? அதுவே சத்தாகவும் சகல நோய்களையும் போக்கும் அருமருந்...
https://pettagum.blogspot.com/2012/07/blog-post_3937.html
எங்க வீட்டு டயட்!
இருமல், ஜலதோஷம் எனச் சின்னச் சின்ன உடல் உபாதைகளுக்கு மட்டும் அல்லாமல், காய்ச்சல் முதல் காமாலை வரை அத்தனை நோய்களின் வீரியத்தையும் குறைக்கும் அருமருந்து வீட்டில் சமைக்கும் உணவுதான். அப்படி, சட்டென நோயின் பிடியில் இருந்து நம்மை விடுவிக்க கை கொடுத்த உணவு செய்முறைகளையும் அனுபவங்களையும் வாசகர்கள் இங்கே நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்கள்.
நெல்லிக்காய் சாம்பார்
குடும்பத்துடன் ஊட்டிக்குப் போயிருந்தோம். ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டு, வீட்டுக்கு வந்தால் எல்லோருக்கும் ஜுரம், தலைவலி. வெளியில் சாப்பிட்டது ஏற்றுக்கொள்ளாமல் வாய் முழுவதும் கசப்பு. உடல் சூட்டினால், சிறுநீர் கழிக்கவும் சிரமம். இந்நிலையில், தனது வீட்டில் விளைந்த நெல்லிக்காய்களை உறவினர் ஒருவர் கொண்டுவந்து தந்தார். புளிக்குப் பதிலாக நெல்லிக்காய் சேர்த்து காரம் இல்லாத சாம்பார் சமைத்தேன். வாசனையும் ருசியும் அருமையாக இருந்ததோடு உடல் உஷ்ணமும் குறைந்து குளுமை அடைந்தது. மஞ்சள் காமாலை, மூலநோய் வந்தால் இந்த சாம்பார் செய்து சூடான சாதத்தில் கலந்து சாப்பிடலாம். இப்போதெல்லாம், வாரம் இரு முறை எங்கள் வீட்டில் நெல்லிக்காய் சாம்பார்தான்.
புதினா மல்லி முள்ளங்கி ஜூஸ்
செய்முறை: புதினா - கொத்தமல்லி - நறுக்கிய முள்ளங்கி தலா ஒரு கப் எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது உப்பு, சிட்டிகை மிளகுத்தூள், அரை கப் எலுமிச்சை சாறு சேர்த்துக்கொண்டால் அதற்குப் பெயர்தான் புதினா மல்லி முள்ளங்கி ஜூஸ்.
கோதுமை ஓட்ஸ் சப்பாத்தி
செய்முறை: ஒரு துண்டு இஞ்சி, வெங்காயம் - தக்காளி - பச்சை மிளகாய் தலா ஒன்று, அரைக் கட்டு கொத்தமல்லி ஆகிய வற்றைப் பொடியாக நறுக்கி மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். இதனுடன் கோதுமை மாவு, ஓட்ஸ் இரண்டையும் தலா ஒரு கப் கலந்து, தேவையான உப்பு சேர்த்துப் பிசையவும். (தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்). இந்தக் கலவையை சப்பாத்தியாக தோசைக்கல்லில் சுட்டு எடுக்கும்போது சிறிது எண்ணெய் விட்டு, வேக வைக்கவும்.
Post a Comment